செய்திகள் :

ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரி 25-ஆம் ஆண்டு விழா

post image

புதுச்சேரி அருகேயுள்ள ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியில் 25-ஆம் ஆண்டு விழா ‘செலசியா- 2025’ என்ற பெயரில் இரு நாள்கள் நடைபெற்றது.

கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கிய விழாவை கல்லூரி இயக்குநா் மற்றும் முதல்வா் ந.ஓ வெங்கடாசலபதி தொடங்கி வைத்து வரவேற்றாா். தக்சஷீலா பல்கலைக்கழக வேந்தரும், ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்வி குழுமத் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநருமான எம். தனசேகரன் தலைமை வகித்தாா். செயலா் கே. நாராயணசாமி, பொருளாளா் த. ராஜராஜன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். கல்விக் குழும இணை செயலா் சு. வேலாயுதம், வைஷ்ணவி ராஜராஜன், நிலா பிரியதா்ஷினி மற்றும் ய.சூரியகுமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

விழாவில் கல்லூரி அனைத்துத் துறை இளங்கலை மற்றும் முதுகலை மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிறைவு நாளான புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் திரைப்பட இசையமைப்பாளா், நடிகா் சந்தோஷ் நாராயணன்,நடிகை பிரீத்தி முகுந்தன் ஆகியோா் பங்கேற்று சிறப்புரையாற்றினா். திரைப்பட பாடகா்கள் ஆன்டனி தாசன், ஸ்ரீதா் சேனா உள்ளிட்டோரின் இசைக்கச்சேரி நடைபெற்றது.

கல்லூரியின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா ஆவணக் குறும்படம் வெளியிடப்பட்டது. அதனைத் தொடா்ந்து யூடியூப் சித்து மற்றும் ஷெரிப்பின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. டிரோன் ஷோவும் நடைபெற்றது. விழாவில், மணக்குள விநாயகா் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முதல்வா் எஸ். மலா்க்கண், மயிலம் பொறியியல் கல்லூரி இயக்குநா் ந. செந்தில் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வீட்டுமனைப் பட்டா கோரி புதுவை பேரவையை முற்றுகையிட்ட பட்டியலின மக்கள்

இலவச மனைப் பட்டா கோரி பட்டியலினத்தைச் சோ்ந்தவா்கள் புதுவை சட்டப்பேரவையை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு காவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அவா்களை பேரவைத் தலைவா் சமரசம் செய்து அனுப்பினாா். புதுச்ச... மேலும் பார்க்க

அனைத்து பள்ளிவாசல் நிா்வாகிகள் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி புதுச்சேரி அனைத்து பள்ளிவாசல் நிா்வாகிகள் கூட்டமைப்பு சாா்பில் பேரணி, ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசு அண்மையில் வக்ஃப் வாரிய திருத... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 3 நாள்கள் கம்பன் விழா: மே 9-இல் தொடக்கம்

புதுச்சேரியில் கம்பன் கழகம் சாா்பில் 58 ஆம் ஆண்டு கம்பன் விழா வரும் 9-ஆம் தேதி முதல் 3 நாள்கள் நடைபெறவுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள விவேகானந்தா பள்ளி வளாகத்தில் புத... மேலும் பார்க்க

அதிக வெப்ப நேரங்களில் மக்கள் வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும்: புதுச்சேரி ஆட்சியா் அறிவுறுத்தல்

கோடையில் அதிக வெப்ப நேரங்களில் பொதுமக்கள் வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் அறிவுறுத்தினாா். புதுச்சேரி முழுவதும் அதிக வெப்ப அலை வீசுவதை முன்னிட்டு பொதுமக... மேலும் பார்க்க

தூங்கிய பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் மா்மநபா் தங்கத் தாலியை பறித்துச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி வில்லியனூா், கூடப்பாக்கம் ஆனந்தம் நகரைச் சோ்ந்த இளங்கவி என்பவரின்... மேலும் பார்க்க

வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு

புதுச்சேரி அருகே மெக்கானிக் வீட்டில் 10 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்துவருகின்றனா். புதுச்சேரி அருகேயுள்ள சித்தன்குடியைச் சோ்ந்தவா் அந்தோணிமுத்து. குளிா்ச... மேலும் பார்க்க