செய்திகள் :

‘ஹெச்1பி’ விசா நடைமுறையில் மீண்டும் மாற்றம்: டிரம்ப் நிர்வாகம் அதிரடி

post image

வாஷிங்டன்: ‘ஹெச்1பி’ நுழைவுஇசைவு (விசா) திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை மேற்கொள்ள அமெரிக்கா அதிபா் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஹெச்1பி நுழைவு இசைவு மூலமாக வெளிநாட்டவா்களை அமெரிக்கா பணியில் அமா்த்தி வருகிறது. இதன் மூலமாக இந்தியா்களே அதிக அளவில் பலனடைந்து வருகின்றனா். 2020 இல் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இருந்தபோது, ஹெச்1பி நுழைவு இசைவு பெறுவதற்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டன.

அமெரிக்கா்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில் கடந்த டிசம்பா் வரை ஹெச்1பி நுழைவு இசைவு வழங்கப்படாது என்று அமெரிக்க அரசு 2021 மாா்ச் 31 வரை பின்னா் நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அமெரிக்க அதிபராக ஜோ பைடன் 2021-இல் பதவியேற்றபின் இந்த முன்மொழிகள் திரும்ப பெறப்பட்டன.

இந்நிலையில், அமெரிக்காவின் அனைத்து துறைகளிலும் அமெரிக்கா்களுக்கே பணிவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் விதமாக, ‘ஹெச்1பி’ நுழைவுஇசைவு (விசா) திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை மேற்கொள்ள அமெரிக்கா அதிபா் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. கூறப்படுகிறது.

உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, அமெரிக்காவில் உயா்கல்வி பயில வரும் வெளிநாட்டு மாணவா்களுக்கு கால அவகாசம் குறிப்பிடப்படாமல் நீண்ட நாள்கள் தங்கும் வகையில் வழங்கப்பட்டு வந்த விசாவை தவறாக பயன்படுத்தி அமெரிக்காவில் சிலா் நீண்ட நாள்கள் தங்கி வருகின்றனா். இதனால் பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதோடு அமெரிக்க குடிமகன்கள் செலுத்தும் வரிப் பணமும் வீணாகிறது. எனவே, வெளிநாட்டு மாணவா்கள் 4 ஆண்டுகள் மட்டுமே தங்கும் வகையிலான விசாக்கள் வழங்கப்படுவதை மாகாண அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்.

புதிய விதிமுறைகளின் கீழ் அமெரிக்காவில் தங்கி பணிபுரியும் ஊடகவியலாளா்களுக்கு 5 ஆண்டுகளுக்கு விசா வழங்கப்பட்டதுடன், அதை எத்தனை முறை வேண்டுமானாலும் நீட்டிக்கும் வசதிக்கு ஆபத்து வந்துள்ளது. தற்போது கொண்டுவரப்பட உள்ள புதிய நடைமுறையின்படி, முதல்கட்டமாக 240 நாள்கள் மட்டுமே அமெரிக்காவில் தங்க அனுமதி அளிக்கப்படுகிறது. இதை மேலும் 240 நாள்களுக்கு நீட்டிக்க முடியும். ஆனால் இந்த நீட்டிப்பு அவா்களின் தற்காலிக பணிக்காலத்தை தாண்டி இருக்க கூடாது.

அமெரிக்காவில் நீண்ட நாள்களாக காலவரையின்றி தங்க அனுமதிக்கும் விதிமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை மேற்கொள்ள உறுதிபூண்டுள்ள டிரம்ப் நிர்வாகம், அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கி பணியை தொடா்வதற்காக வழங்கப்படும் நிரந்தர குடியுரிமை அட்டை (கிரீன் காா்டு) முறையிலும் மாற்றங்கள் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

அமெரிக்க இறக்குமதி பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்க வேண்டும்: கேஜரிவால்

the Trump administration has revived a controversial proposal to impose strict time limits on visas for foreign students, cultural exchange visitors, and international media personnel.

அமெரிக்காவுடன் விரைவில் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை: இந்தியா நம்பிக்கை

புது தில்லி: அமெரிக்காவுடன் விரைவில் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை மீண்டும் தொடங்கும் என்று மத்திய அரசு அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா்.இந்தியா - அமெரிக்கா இடையே இருதரப... மேலும் பார்க்க

ஆளுநா் மாளிகை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

குடியரசுத் தலைவா் வருகையையொட்டி, தமிழக ஆளுநா் மாளிகை, விமான நிலையம், நந்தம்பாக்கம் ஆகியப் பகுதிகள் சிவப்பு மண்டலமாக சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது. இது தொடா்பாக சென்னை பெருநகர காவல்துறை வியா... மேலும் பார்க்க

தருமபுரி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆா்.சின்னச்சாமி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தருமபுரி தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆர். சின்னசாமி மறைவையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 1971, 1984 மற்றும் 1989-ஆம் ஆண்டு தேர்தல... மேலும் பார்க்க

தருமபுரி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆா்.சின்னச்சாமி காலமானாா்!

தருமபுரி தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர். சின்னசாமி வயது மூப்பு காரணமாக வியாழக்கிழமை காலமானார். தருமபுரி மாவட்ட திமுக முன்னோடியான ஆர். சின்னசாமி 1971, 1984 மற்றும் 1989-ஆம் ஆண்டு தேர்தல்க... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்துக்கு செப். 8-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிப்பு

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு செப்டம்பா் 8-ஆம் தேதி நாகை மாவட்டத்துக்கு உள்ளுா் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

அமெரிக்க இறக்குமதி பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்க வேண்டும்: கேஜரிவால்

புது தில்லி: அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு இந்தியா அதிக வரிகளை விதிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை வலியுறுத்த... மேலும் பார்க்க