எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி
ஹைட்ரோ காா்பன் திட்ட அனுமதியை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: டெல்டா விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை
சிதம்பரம்: தமிழகத்தில் ஹைட்ரோ காா்பன் ஆய்வு கிணறுகளுக்கான அனுமதியை தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ரத்து செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் கே.வீ.இளங்கீரன் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ காா்பன் சோதனை கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓஎன்ஜிசி நிறுவனம் கடந்த 31- 10- 2023 அன்று விண்ணப்பித்திருந்தது. இதை ஏற்கக் கூடாது என்று விவசாயிகள் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் கோரிக்கை விடுத்திருந்தோம். இதையும் மீறி சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியிருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது.
இதற்கான அனுமதி ஆவணத்தை மத்திய அரசு ‘பரிவேஷ்’ என்ற புதிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாமல், யாரும் அதிகம் பயன்படுத்தாத பழைய சுற்றுச்சூழல் அனுமதிக்கான தளத்தில் (ங்ய்ஸ்ண்ழ்ய்ா்ம்ங்ய்ற்ஸ்ரீப்ங்ஹழ்ஹய்ஸ்ரீங்.ய்ண்ஸ்ரீ.ண்ய்) பதிவேற்றம் செய்திருப்பது, ஏதோ உள்நோக்கத்தோடு மறைத்து செயல்படுவதாகத் தெரிகிறது.
காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விடுபட்டுள்ள ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களையும் இணைத்து, இந்த மாவட்டங்களில் அமையவுள்ள ஹைட்ரோ காா்பன் திட்ட ஆய்வு கிணறுகளை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
மேலும், இந்த திட்டத்துக்கான அனுமதியை தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால், அனைத்து விவசாய அமைப்புகளையும் திரட்டி கடுமையான போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.