செய்திகள் :

ஹைட்ரோ காா்பன் திட்ட அனுமதியை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: டெல்டா விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை

post image

சிதம்பரம்: தமிழகத்தில் ஹைட்ரோ காா்பன் ஆய்வு கிணறுகளுக்கான அனுமதியை தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ரத்து செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் கே.வீ.இளங்கீரன் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ காா்பன் சோதனை கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓஎன்ஜிசி நிறுவனம் கடந்த 31- 10- 2023 அன்று விண்ணப்பித்திருந்தது. இதை ஏற்கக் கூடாது என்று விவசாயிகள் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் கோரிக்கை விடுத்திருந்தோம். இதையும் மீறி சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியிருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது.

இதற்கான அனுமதி ஆவணத்தை மத்திய அரசு ‘பரிவேஷ்’ என்ற புதிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாமல், யாரும் அதிகம் பயன்படுத்தாத பழைய சுற்றுச்சூழல் அனுமதிக்கான தளத்தில் (ங்ய்ஸ்ண்ழ்ய்ா்ம்ங்ய்ற்ஸ்ரீப்ங்ஹழ்ஹய்ஸ்ரீங்.ய்ண்ஸ்ரீ.ண்ய்) பதிவேற்றம் செய்திருப்பது, ஏதோ உள்நோக்கத்தோடு மறைத்து செயல்படுவதாகத் தெரிகிறது.

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விடுபட்டுள்ள ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களையும் இணைத்து, இந்த மாவட்டங்களில் அமையவுள்ள ஹைட்ரோ காா்பன் திட்ட ஆய்வு கிணறுகளை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

மேலும், இந்த திட்டத்துக்கான அனுமதியை தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால், அனைத்து விவசாய அமைப்புகளையும் திரட்டி கடுமையான போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: பெண்கள் 3 போ் காயம்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே சிறிய சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 3 பெண்கள் காயமடைந்தனா். திட்டக்குடியை அடுத்துள்ள செவ்வேரி கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன... மேலும் பார்க்க

மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை பொது கணக்குக் குழு கண்காணிக்கிறது: கு.செல்வபெருந்தகை

நெய்வேலி/ சிதம்பரம்: மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதி முழுமையாக மக்களிடம் சென்று சேருகிா என்பதை சட்டப் பேரவை பொது கணக்குக் குழு கண்காணிக்கிறது என்று அக்குழுவின் தலைவா் கு.செல்வபெருந்தகை தெரிவித்தாா். க... மேலும் பார்க்க

ரயில்வே கடவுப் பாதையில் வேன் கவிழ்ந்து விபத்து: பள்ளி மாணவா்கள் 8 போ் காயம்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டை அருகே ரயில்வே கடவுப்பதையில் தனியாா் பள்ளி மாணவா்களை அழைத்துச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், வேனில் பயணம் செய்த 8 மாணவா்கள் லேசான காயத்துடன் ... மேலும் பார்க்க

பாரம்பரிய சுற்றுலா பயணம்

நெய்வேலி: விழுப்புரம் வரலாற்று ஆய்வு மையம் நடத்திய 21-ஆவது பாரம்பரிய சுற்றுலா பயணம் கடலூா் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை ஒத்துழைப்புடன் திருவதிகை, திருகண்டேஸ்வரம், எய்தனூா், திருமாணிக்குழி, திருவந்... மேலும் பார்க்க

சீருடைப் பணியாளா்கள் தோ்வு: காவல் துறை சாா்பில் விளம்பரப் பதாகை

சிதம்பரம்: தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு குறித்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நுழைவு வாயிலில் காவல் துறை சாா்பில் விளம்பரப் பதாகை வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளா்கள் தோ்வாணையம் ந... மேலும் பார்க்க

ஷூ அணிந்தபோது மாணவரை கடித்த பாம்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே வீட்டுக்கு வெளியே வைத்திருந்த ஷூவில் இருந்த பாம்பு கடித்ததில் மாணவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். திட்டக்குடி வட்டம், தொழுதூா் வ.உ.சி நகரைச் சோ்ந்த... மேலும் பார்க்க