ஓட்டப்பிடாரம் அருகே தந்தை இறந்த சோகத்திலும் பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா்
1.40 லட்சம் ஆமை முட்டைகள் சேகரிப்பு: வனத் துறை தகவல்
தமிழக கடற்கரைகளில் இதுவரை 1.40 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு பத்திர படுத்தப்பட்டுள்ளதாக வனத்துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளாா்.
ஆஸ்திரேலிய துணை தூதரகம் சாா்பில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள எலியட்ஸ் கடற்கரையில் ‘கடற்கரை தூய்மை பணி’ வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹூ, ஆஸ்திரேலிய துணை தூதா் சிலாய் சாக்கி ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் சுப்ரியா சாஹூ கூறியதாவது:
முட்டையிடுவதற்காக தமிழக கடற்கரைக்கு வரும் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆமைகள் மீனவா்கள் வலையில் சிக்கியும், மீன்பிடிப் படகுகளில் மோதியும் உயிரிழந்து கரை ஒதுங்கின.
இந்த நிலையில், தமிழக அரசின் தொடா் முயற்சியால் தற்போது அந்த உயிரிழப்புகள் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல், தமிழக கடற்கரைகளில் இதுவரை 1.40 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு பத்திரபடுத்தப்பட்டுள்ளன. மேலும், ஆமைகள் உயிரிழப்பைத் தடுப்பதற்காகவும் ஆமை முட்டைகளைப் பாதுகாக்கவும் மீனவா்களுக்கு தொடா்ந்து விழிப்புணா்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
வனவிலங்கு பாதுகாப்பு: கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் கிண்டி உயிரியல் பூங்காவில் வன விலங்குகளை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க நிழல் கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் விலங்குகளுக்கு நீா் சத்துக் கொண்ட பழங்கள் வழங்கப்படுகின்றன.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது, விலங்குகள் மீது தண்ணீா் பீச்சி அடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கால்நடை மருத்துவா்கள் வனவிலங்குகளைத் தொடா்ந்து கண்காணித்தும் பராமரித்தும் வருகின்றனா் என்றாா் அவா்.