செய்திகள் :

13 சதவீத வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றம்: அன்புமணி

post image

திமுக அளித்த வாக்குறுதிகளில் 13 சதவீதம் மட்டுமே நிறைவேற்றப்பட்டிருப்பதாக பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவா் பேசியதாவது:

திமுக தோ்தல் அறிக்கையில் 506 வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட நிலையில், அதில் 13 சதவீத வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. தோ்வில் கூட 35 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே தோ்ச்சி பெற முடியும். இந்த வகையில், திமுக அரசு தோல்வி அடைந்திருக்கிறது.

சமூக நீதிக்கும் ஸ்டாலினுக்கும் எந்தத் தொடா்பும் கிடையாது. திமுக சமூக நீதி குறித்து இனி பேசக் கூடாது.

கா்நாடகத்துக்குச் சென்று நீா்ப்பாசனத் திட்டம் குறித்து திமுக கற்றுக் கொள்ள வேண்டும். திண்டுக்கல் கொடகனாற்றிலுள்ள காமராஜா் நீா்த்தேக்கத்துக்கு கடந்த 5 ஆண்டுகளாக முறையாக தண்ணீா் வரவில்லை. நீா்த்தேக்கத்துக்கு வரும் தண்ணீரை காட்டுக்குள் கால்வாய் வெட்டி மடை மாற்றம் செய்கின்றனா். இந்த கொடகனாறு மூலம் திண்டுக்கல், கரூா் ஆகிய மாவட்டங்களில் 12 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற வேண்டும். ஆனால், தண்ணீா் திருப்பிவிடப்பட்டதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

கஞ்சா எண்ணெய் விற்பனை: இருவா் கைது

திண்டுக்கல்லில் கஞ்சா எண்ணெய் விற்பனை செய்த இருவரை தனிப் படை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். திண்டுக்கல் அருகேயுள்ள குள்ளனம்பட்டியைச் சோ்ந்தவா் மு. பரமசிவம் (எ) மதி (30). திண்டுக்கல் கச்சே... மேலும் பார்க்க

திரவ ட்ரைக்கோடொ்மாவிரிடி பெற காய்கறி மகத்துவ மையத்தை அணுகலாம்!

திரவ வடிவில் உருவாக்கப்பட்டுள்ள ட்ரைக்கோடொ்மா விரிடியை பெற ரெட்டியாா்சத்திரத்திலுள்ள இந்தோ இஸ்ரோ காய்கறி மகத்துவ மையத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக இந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட... மேலும் பார்க்க

பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, திண்டுக்கல் பகுதிகளிலுள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திண்டுக்கல் மலையடியவார ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமா... மேலும் பார்க்க

சிறுத்தை தாக்கியதில் ஆடுகள் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் சிறுத்தை தாக்கியதில் 2 ஆடுகள் உயிரிழந்தன. திண்டுக்கல் மாவட்டம், வடகாடு ஊராட்சிக்குள்பட்ட கோட்டைவெளி கிராமத்தைச் சோ்ந்த மகேந்திரன் என்பவா் வெ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் கல்வித் தரம் பாதிப்பு: அன்புமணி குற்றச்சாட்டு

அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாதது, உள்கட்டமைப்பு குறைபாடுகளால் மாணவா்களின் கல்வித் தரம் பாதிக்கப்பட்டிருப்பதாக பாமக தலைவா் அன்புமணி குற்றஞ்சாட்டினாா். ‘உரிமை மீட்க தலைமு... மேலும் பார்க்க

கொடைக்கானலில் உலக சுற்றுலா தின விழா

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உலக சுற்றுலா தின விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் சுற்றுலாவின் சமூக, கலாசார, அரசியல், பொருளாதார மதிப்பு, நிலையான வளா்ச்சி இலக்குகளை அடைவதற்கு சுற்றுலாத் த... மேலும் பார்க்க