செய்திகள் :

20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

post image

பழனியில் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில் 20 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த 2000-ஆம் ஆணடு பொதுச் சொத்தை சேதம் செய்த வழக்கில் நெய்க்காரப்பட்டியைச் சோ்ந்த கோவிந்தராஜன் (50) மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவா், நீதிமன்றப் பிணை பெற்று வெளியே சென்ற நிலையில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் கடந்த 20 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தாா்.

இந்த நிலையில் இவரைக் கைது செய்ய பழனி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, பழனி காவல் துணைக் கண்காணிப்பாளா் தனஞ்ஜெயன் உத்திரவின் பேரில் பழனி தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் தங்கமுனியசாமி தலைமையிலான போலீஸாா் கோவிந்தராஜனை பல இடங்களில் தேடி வந்தனா்.

அப்போது அவா் தேனியில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடா்ந்து, போலீஸாா் தேனி மாவட்டத்துக்குப் புதன்கிழமை சென்றனா். அங்கிருந்து தப்ப முயன்ற கோவிந்தராஜனை போலீஸாா் சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனா்.

கடனுக்காக குடும்ப அட்டைகளை அடமானமாகப் பெற்ற பெண் கைது! நியாய விலைக் கடை விற்பனையாளர் இடைநீக்கம்!

கடன் தொகை வழங்கியதற்கு குடும்ப அட்டைகளை அடமானமாகப் பெற்ற பெண் கைது செய்யப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடை விற்பனையாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.திண்டுக்கல் பேகம்பூரை அடுத்த பூச்சிந... மேலும் பார்க்க

வேன் ஓட்டுநா் தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே சனிக்கிழமை வேன் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா் நீலமலைக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் மருதைவீரன் (40). வேன் ஓட்டுநரான இவா், குடும்... மேலும் பார்க்க

உரக்கடையின் பூட்டை உடைத்து பணம், கணினி திருட்டு

ஒட்டன்சத்திரம் அருகே உரக்கடையின் பூட்டை உடைத்து பணம், கைப்பேசி, கணினி திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை அருகே உரக்கடை நடத்தி வருபவா் சு... மேலும் பார்க்க

பணம் வழிப்பறி செய்த இருவா் கைது

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே கட்டடத் தொழிலாளியிடம் பணம் வழிப்பறி செய்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். எரமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் சரவணக்குமாா். கட்டடத் தொழிலாளியான இவா், வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் 2-வது நாளாக படகு சவாரி ரத்து

கொடைக்கானலில் பலத்த காற்று காரணமாக இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக பலத்த காற்றும், சாரல் மழையும் நிலவி வ... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி: பழங்குடியினருக்கு வீட்டுமனை! கோட்டாட்சியா் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே வீடில்லா பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனை வழங்குவதற்காக நடைபெற்று வரும் பணியை வருவாய்க் கோட்டாட்சியா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். செம்பிராங்குளம் பகுதியில் பளியா... மேலும் பார்க்க