செய்திகள் :

`2026 தேர்தலுக்கு அதிமுக-வின் அற்புதமான தேர்தல் அறிக்கை...' - சேலத்தில் இபிஎஸ் பேச்சு!

post image

சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுகவில் உறுப்பினர்கள் இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "2021க்கு முன்பு சேலம் மாவட்டம் எப்படி இருந்தது என்று ஒப்பிட்டுப் பாருங்கள். அனைத்து அடிப்படை வசதிகளும் திட்டங்களும் செய்து கொடுத்தோம். ஏரிகள் தூர்வாரப்பட்டு தண்ணீர் நிரப்பினோம். விவசாயிகள் வாங்கிய பயிர்கடன் இரண்டு முறை தள்ளுபடி செய்தோம். கைத்தறி, விசைத்தறி நிறைந்த இந்த பகுதி அதிமுக ஆட்சியில் செழிப்பாக இருந்தது. தற்போது திமுக ஆட்சியின் நிர்வாக திறனற்ற காரணத்தால் இந்த இரண்டு தொழில்களும் நலிந்து விட்டது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் நெசவாளர்கள் மேம்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சி அமைந்த பிறகு மரம் ஏறும் தொழிலாளர்களுக்கு காப்பீடு திட்டம் கொண்டுவரப்பட்டு, அதற்கான பிரீமியம் அரசே செலுத்தும். மரம் ஏறும் தொழிலாளர்களுக்கு அனைத்து உபகரணங்களும் அரசே வழங்கும்.

எடப்பாடி பழனிசாமி பேச்சு

ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதியில் உள்ள 100 ஏரிகள் நிரப்பும் திட்டத்தை தொடங்கி வைத்து 6 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டுவந்தோம். திமுக ஆட்சியில் இந்த திட்டம் மெத்தனமாக நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் 100 ஏரிகளும் நிரப்புவோம். தற்போது மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் கடலில் கலந்து வருகிறது. இந்த ஆட்சியாளர்கள் நினைத்து இருந்தால் எப்போதோ இந்த திட்டத்தை முடித்திருக்கலாம். அதிமுக ஆட்சியிலேயே 75 சதவீத பணிகள் முடிவுற்றது. 25 சதவீத பணிகள் இன்னும் இந்த ஆட்சியாளர்கள் செய்து கொண்டிருக்கின்றனர். விவசாய தொழிலாளர்களுக்கு பசுமை வீடுகள், விலையில்லா ஆடுகள், கறவை மாடுகள், கோழிகள் வழங்கப்படும். ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அரசு வீடு கட்டி தரும். நிலம் இல்லாதவர்களுக்கு அரசே நிலம் வாங்கி வீடுகள் கட்டி தரும். அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையில் அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். அது அனைத்து தரப்பு மக்களுக்கும், அனைத்து வசதிகளும் கிடைக்கக்கூடிய அற்புதமான தேர்தல் அறிக்கையாக அமையும்" என்று பேசினார்.

`ஸ்டாலின் நடத்தியது மேஜிக் ஷோ, எடப்பாடியார் நடத்தியது ரியல் ஷோ' - சொல்கிறார் ஆர்.பி.உதயகுமார்

"ஸ்டாலின் நடத்திய ரோடு ஷோ மேஜிக் ஷோ, ஆனால், எடப்பாடியார் நடத்திய ரோடு ஷோ ரியல் ஷோ" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். ஆர்.பி.உதயகுமார்மதுரை கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்த... மேலும் பார்க்க

CM ஸ்டாலினையே திட்டுவீங்களா? - டென்ஷனான சேகர் பாபு; பின்வாங்காத தூய்மைப் பணியாளர்கள்! - Spot Report

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களின் மண்டலங்களை தனியார்மயப்படுத்தக் கூடாது என்பதும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதுமே இவர்களின் கோரிக்கை. இ... மேலும் பார்க்க

Vijay-க்கு EPS தூது? பிரேக் போடும் Seeman! | Elangovan Explains

'மதுரை மாநாட்டில் மாஸ் காட்ட வேண்டும்' என திட்டமிட்டு செயல்படுகிறார் விஜய். இதற்கு பின்னணியில் மெகா கூட்டணி கணக்கு உள்ளது. முக்கியமாக 'எடப்பாடி மற்றும் பன்னீர்' இருவரின் மகன்களும் தனித்தனியே விஜய்-இடம... மேலும் பார்க்க

அரசுத்திட்ட விழா; அழைப்பு விடுக்காத இந்தியன் வங்கித் தலைவர் மீது உரிமை மீறல் தீர்மானம்

மதுரையில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் வழங்கும் விழாவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை அழைக்காத இந்தியன் வங்கித் தலைவர் மீது நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மான... மேலும் பார்க்க

'கெட்டப் பேராகுது; கலைஞ்சு போங்க!’ - கண்டிஷன் போடும் அமைச்சர் சேகர் பாபு? முறிந்த பேச்சுவார்த்தை

அப்செட்டாக மண்டலங்கள் 5 மற்றும் 6 யை தனியார்மயப்படுத்துவதை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடி வரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 10 வது நாளை எட்டியிருக்கிற... மேலும் பார்க்க

"எம்.ஜி.ஆரை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை!" - தொல்.திருமாவளவன் விளக்கம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,"தம... மேலும் பார்க்க