செய்திகள் :

`2026 ஆகஸ்ட் வரை அன்புமணியே பாமக தலைவர்!' - பாமக பொதுக்குழு கூட்டத்தின் 19 தீர்மானங்கள்

post image

மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு பாமக தலைவர் அன்புமணி தலைமை தாங்கினார்.

இந்தப் பொதுகுழுவிற்கு பாமக நிறுவனர் ராமதாஸிற்கு அழைப்பு விடுக்கப்பட்டும், அவர் கலந்துகொள்ளவில்லை. ஆனாலும், பொதுக்குழு மேடையில் அவருக்காக ஒரு நாற்காலி ஒதுக்கப்பட்டிருந்தது.

அன்புமணி | பாமக பொதுக்குழு கூட்டம்
அன்புமணி | பாமக பொதுக்குழு கூட்டம்

இந்தப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 19 தீர்மானங்கள்

1.பாட்டாளி மக்கள் கட்சியின் உட்கட்சி தேர்தலை நடத்த ஓராண்டு அவகாசம் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோர் 2026 ஆகஸ்ட் வரை பதவியில் நீடிப்பார்கள்.

2. வன்னியர்களுக்கு விரைவில் இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்.

3. தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் விடுதலை நாள் அறிவிப்பாக தமிழக அரசு வெளியிட வேண்டும்.

4. சமூகநீதி கடமைகளை நிறைவேற்ற மறுக்கும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு கண்டனம்.

5. அன்புமணி மேற்கொண்டு இருக்கும் மக்கள் உரிமை மீட்பு பயணத்தையும் அதன் நோக்கத்தையும் வெற்றி பெற செய்ய பாமக உறுதி ஏற்கிறது.

6. பெண்கள் பாதுகாப்பு சட்டம் ஒழுங்கை உறுதி செய்ய தவறிய திமுக அரசுக்கு கண்டனம்.

7. தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டத்தை முழுமையாக தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

8. தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதே பாட்டாளி மக்கள் கட்சியின் இலக்காகும்.

9. தமிழ்நாட்டில் நான்கு முறை உயர்த்தப்பட்ட மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும்.

அன்புமணி | பாமக பொதுக்குழு கூட்டம்
அன்புமணி | பாமக பொதுக்குழு கூட்டம்

10. தமிழ்நாட்டிற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்து தமிழக அரசு விரிவான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

11. தமிழ்நாட்டில் காவிரி கொள்ளிடம் பாலாறு உள்ளிட்ட வாய்ப்பு உள்ள அனைத்து ஆறுகள் குறுக்கேயும் தடுப்பணைகள் கட்டுவதை ஒரு இயக்கமாக தமிழக அரசு மாற்ற வேண்டும்.

12. காவிரி கோதாவரி நதிகள் இணைப்பு திட்டத்தின் பணிகளை விரைவு படுத்த வேண்டும்.

13. தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ஒருங்கிணைந்த கல்வி திட்டம் நிதி ₹2,151 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

14. உடனடியாக தமிழக அரசு ஒரு லட்சம் ஆசிரியர்களை நியமிக்க தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

15. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 9 ஆயிரம் உதவி பேராசிரியர்களை நியமிக்க வேண்டும்.

16. மக்களை ஏமாற்ற மோசடி திட்டங்களை செயல்படுத்தும் திமுக அரசுக்கு கண்டனம்.

17. அரசு ஊழியர்கள் ஆசைகளுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

18. அரசு துறைகளில் காலியாக உள்ள 6.5 லட்சம் இடங்களை நிரப்ப இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

19. சிங்கள கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

"எம்.ஜி.ஆரை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை!" - தொல்.திருமாவளவன் விளக்கம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,"தம... மேலும் பார்க்க

பாமக பொதுக்குழு முதல் விசிக ஆர்ப்பாட்டம் வரை - 09.08.2025 முக்கியச் செய்திகள்!

Pஆகஸ்ட் 9 முக்கியச் செய்திகள்தேனி பங்களாமேடு பகுதியில் 14 வயது சிறுவன் பராமரிப்பு பணிக்காக சென்ற ரயில் என்ஜின் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சல்மான் கானை தொடர்பு கொண்டதற்கா... மேலும் பார்க்க

"எம்.ஜி.ஆர் குறித்து பேசுவதற்கு திருமாவளவனுக்கு தகுதி இல்லை" - எடப்பாடி பழனிசாமி காட்டம்

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "எம்ஜிஆர் குறித்து பேசுவதற்கு திருமாவளவனுக்கு தகுதி இல்லை. எம்ஜிஆர் தமிழ்நாட்டு மக்களுக்கு தெய்வமானவர். அப்படிப்பட்டவரை விமர்... மேலும் பார்க்க

'பக்கம் எண் 44, வாக்குறுதி எண் 285' - திமுகவின் வாக்குறுதியும் பொய் பேசிய சேகர் பாபுவும்?

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் 9 வது நாளாக போராடி வருகின்றனர். தங்கள் மண்டலங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது என்பது பணி நிரந்தரமுமே அவர்களின் கோரிக்கை. போராட்டக்குழுவுடன் ப... மேலும் பார்க்க

கமல் ஹாசன்: "தேவையற்ற பொதுத் தேர்வுகள், அநீதியான நுழைவுத் தேர்வுகள்" - முதலமைச்சரை பாராட்டிய கமல்!

பள்ளிக் கல்விக்கான தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025-ஐ முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், "இந்தக் கல்விக்கொள்கை, சமத்துவத்தையும் சமூகநீதியையும் சேர்த்தே போதிக்கிற... மேலும் பார்க்க

"3, 5, 8ம் வகுப்பு பிள்ளைகளுக்கு தேர்வு வைப்பதை ஒருபோதும் ஏற்க மாட்டோம்" - சீமான் பேச்சு!

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழ்நாடு அரசு, மாநில கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு பல தரப்பிலிருந்து ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியிருக்கிற... மேலும் பார்க்க