செய்திகள் :

3 ஆண்டுகளில்... வங்கிகளில் உரிமைகோரப்படாத வைப்புத்தொகை ரூ. 52,174 கோடி!

post image

பொதுத் துறை வங்கி மற்றும் தனியார் வங்கிகளில் கடந்த மூன்று நிதியாண்டுகளாக உரிமை கோரப்படாத வைப்புத்தொகை பணம், ரூ. 52,174 கோடியை எட்டியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வங்கிகளில் உள்ள வைப்புத்தொகை ரூ. 42,271 கோடியாக இருந்த நிலையில், 2022-2024 வரையிலான காலகட்டத்தில் ரூ. 52,174 கோடியாக உயர்ந்துள்ளது.

மாநிலங்களவையில் துணை நிதியமைச்சர் பங்கஜ் செளத்ரி எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த அறிக்கையில்,

2024 நிதியாண்டில், பொதுத் துறை வங்கிகளில் ரூ. 45,140.78 கோடி பணம், தனியார் துறை வங்கிகளில் ரூ. 7,033.82 கோடி உரிமை கோரப்படாமல் உள்ளது.

இவை இந்திய ரிசர்வ் வங்கியால் பராமரிக்கப்படும் வைப்புத்தொகையாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு மாற்றப்பட்டன.

இதேபோன்று, 2022 முதல் 2024 வரையிலான நிதியாண்டில் காப்பீட்டு நிறுவனங்களில் உள்ள உரிமைகோரப்படாத தொகை ரூ. 21,718 கோடியாக உள்ளது.

ரிசர்வ் வங்கி ஆண்டறிக்கையின்படி, கோரப்படாத மொத்த வைப்புத்தொகை ரூ. 78,212.53 (2024 மார்ச் வரை) கோடியாக உள்ளது.

உரிமை கோரப்படாத வைப்புத்தொகை - தகவல்களை அணுகுவதற்கான அணுகுமுறை என்ற புதிய வலைதளத்தை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. அதில், பதிவு செய்யப்பட்ட எந்தவொரு பயனரும், உரிமைகோரப்படாமல் உள்ள தொகையில் அளவை, வங்கிகள் வாரியாகத் தெரிந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | அமேசான் சுதந்திர தின சலுகை ஜூலை 31 முதல் தொடக்கம்! என்னென்ன வாங்கலாம்?

he government revealed that unclaimed deposits with public sector banks (PSBs) and private sector banks (PVBs) rose to more than Rs 52,174 crore in three fiscals (2022-2024)

ஹிந்துக்கள் ஒருபோதும் பயங்கரவாதிகளாக இருக்கவே மாட்டார்கள்! -அமித் ஷா

ஹிந்துக்கள் ஒருபோதும் பயங்கரவாதிகளாக இருக்கவே மாட்டார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். மாநிலங்களவையில் புதன்கிழமை அவர் பேசியதாவது: “ஹிந்துக்கள் ஒருபோதும் பயங்கரவாதிகளாக இருக்கவ... மேலும் பார்க்க

பாஜகவை கேள்வி கேட்க காங்கிரஸுக்கு எந்தவித உரிமையும் இல்லை! -மாநிலங்களவையில் அமித் ஷா

பாஜகவை கேள்வி கேட்க காங்கிரஸ் கட்சிக்கு எந்தவித உரிமையும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.மாநிலங்களவையில் புதன்கிழமை நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் பற்றிய சிறப்பு விவாதத்தின்போது ... மேலும் பார்க்க

ம.பியில் கனமழை, வெள்ளம்.. மீட்புப் பணியில் ராணுவம்! 2900 பேர் வெளியேற்றம்!

மத்தியப் பிரதேச மாநிலத்தில், பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பருவமழையின் தாக்கம்... மேலும் பார்க்க

இந்தியா மீது அமெரிக்கா 25% வரி விதிப்பு: அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? -மத்திய அரசு விளக்கம்

இந்தியா மீது 25 சதவீத வரியுடன் கூடுதலாக அபராதமும் விதிப்பதாகவும், ஆகஸ்ட் 1 முதல் இந்த வரி விதிப்பானது அமலாகும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று(ஜூலை 30) அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து,... மேலும் பார்க்க

மத்திய வெளியுறவுத் துறை செயலாளரை சந்தித்த நேபாள எம்.பிகள்!

தில்லியில் மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியை, நேபாளத்தின் அனைத்துக் கட்சிக் குழுவினர் நேரில் சந்தித்துள்ளனர். நேபாளத்தின் அனைத்துக் கட்சிக் குழுவிலான, அந்நாட்டின் எம்.பிகள் இந்தியா வந்... மேலும் பார்க்க

மக்களவையில் எதிரொலித்த வயநாடு விவகாரம்: சீரமைப்பில் மத்திய அரசு மெத்தனப்போக்கு! -பிரியங்கா

வயநாடு நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதில் மத்திய அரசு மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கிறது என்று மக்களவையில் அத்தொகுதிக்கான எம்.பி. பிரியங்கா காந்தி பேசினார்.கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் கடந... மேலும் பார்க்க