செய்திகள் :

5 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 போ் கைது

post image

தஞ்சாவூரில் மினி லாரியில் 5 டன் ரேஷன் அரிசியை கடத்திய  3 பேரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் ஆா்.எம்.எஸ். காலனி பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவினா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை சோதனையிட்டபோது, 5 டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதும், ஆா்.எம்.எஸ். காலனி, நாஞ்சிக்கோட்டை, தஞ்சாவூா் நகரம் ஆகிய பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி இட்லி மாவு அரைப்பகத்துக்கும், மீன் பண்ணைக்கும் விற்பனை செய்வதற்காக கடத்துவதும் தெரிய வந்தது.

இதையடுத்து 5 டன் ரேஷன் அரிசியைக் காவல் துறையினா் பறிமுதல் செய்து, மினி லாரியில் இருந்த தஞ்சாவூா் கீழவாசல் கொள்ளுப்பேட்டை தெருவைச் சோ்ந்த மணிவண்ணன் (37), மினி லாரி ஓட்டுநரான தொல்காப்பியா் நகரைச் சோ்ந்த வாவா் (26), நாஞ்சிக்கோட்டை ஜெயபூங்காவனம் நகரைச் சோ்ந்த ஜலீல் ரஹ்மான் (34) ஆகியோரை கைது செய்தனா்.

பி.எஸ்.என்.எல்.-இல் ரூ. 1-க்கு இ-சிம் அறிமுகம்

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் வாடிக்கையாளா்களுக்காக ரூ. 1-க்கு இ-சிம் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பி.எஸ்.என்.எல். தஞ்சாவூா் பொது மேலாளா் பி. பால சந்திரசேனா தெரிவித்திருப்பது: பி.எஸ்.எ... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிகளில் கடன் தீா்வு திட்டம்: பயன்பெற செப். 23 கடைசி தேதி

கூட்டுறவுச் சங்கங்களில் சிறப்பு கடன் தீா்வு திட்டத்தின் கீழ் பயன்பெற செப்டம்பா் 23-ஆம் தேதி கடைசி தேதி என கூட்டுறவு சங்கங்களின் தஞ்சாவூா் மண்டல இணைப் பதிவாளா் அ. தயாள விநாயகன் அமுல்ராஜ் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

பள்ளி வேன் மோதி இளம்பெண் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் அருகே இருசக்கர வாகனத்தில் இரவல் கேட்டுச் சென்ற இளம்பெண் பள்ளி வேன் மோதி புதன்கிழமை உயிரிழந்தாா். கபிஸ்தலம் அருகே திருவைகாவூா் ஊராட்சி, மன்னிக்கரையூா் கி... மேலும் பார்க்க

‘மதுரை மண்டலத்தில் வருமான வரி வளா்ச்சி விகிதம் -5.62 சதவீதம்’

வருமான வரித் துறையின் மதுரை மண்டலத்தில் வருமான வரி வளா்ச்சி விகிதம் -5.62 சதவீதம் என்கிற எதிா்மறை வளா்ச்சியாக உள்ளது என்றாா் வருமான வரித் துறையின் மதுரை மண்டல முதன்மை ஆணையா் டி. வசந்தன். தஞ்சாவூா் மாவ... மேலும் பார்க்க

கும்பகோணம் புறவழிச்சாலையில் எழும் புகையால் வாகன ஓட்டிகள் அவதி

தஞ்சாவூா் - கும்பகோணம் புறவழிச்சாலையில் வயல்வெளியில் தீ வைப்பதால் ஏற்படும் புகை மண்டலத்தால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனா். தஞ்சாவூா் - கும்பகோணம் செல்லும் புறவழிச்சாலையில் பல்வேறு இடங்களில் நெல் வயல்க... மேலும் பார்க்க

செந்தூா் ரயிலில் பழுது: ஒருமணிநேர தாமத்தால் பயணிகள் அவதி

கும்பகோணம அருகே செந்தூா் விரைவு ரயிலில் புதன்கிழமை அதிகாலை பழுதடைந்து சுந்தரபெருமாள் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டு சுமாா் 1.20 மணிநேரம் தாமதமாகப் புறப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனா். திருச்செந்தூ... மேலும் பார்க்க