செய்திகள் :

50 சதவீத மானிய விலையில் சிவன் சம்பா நெல் விதைகள்

post image

பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் சிவன் சம்பா பயிரிட விரும்பும் விவசாயிகளுக்கு, அரசு மானிய விலையில் விதை நெல் வழங்கப்படுமென வேளாண்மைத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் வேல்முருகன் வெளியிடுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக அரசு வேளாண்மைத் துறையில் 2025--26 ஆம் ஆண்டு முதலமைச்சரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தில், மருத்துவக் குணம் கொண்ட சிவன் சம்பா நெல் விதை மானிய விலையில் விநியோகம் செய்யப்பட உள்ளது.

சிவன் சம்பா 130 முதல் -140 நாள்கள் நெற்பயிராகும். ஏக்கருக்கு1200 முதல் -1500 கிலோ வரை மகசூல் தரவல்லது. சிவன் சம்பா அரிசியில் இரும்பு மற்றும் துத்தநாக சத்து அதிகமாக இருப்பதால் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. மேலும், குடல் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. எலும்பு மற்றும் தசை வளா்ச்சிக்கு உதவுகிறது.

சிவன் சம்பா, மாப்பிளை சம்பா, கருப்பு கவுனி மற்றும் கருங்குருவை ஆகிய ரகங்கள் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டதால், நீரிழிவு நோய் குறைபாடு உள்ளவா்களுக்கு மிகச்சிறந்த உணவாகப் பயன்படுகிறது.

அதிக அளவில் மருத்துவ குணங்கள் உடைய பாரம்பரிய நெல் ரகங்களின் உற்பத்தியை அதிகப்படுத்த வேளாண்மை துறை விதை உற்பத்தி ஊக்கத்தொகையாக 1 கிலோவிற்கு ரூ. 15 வழங்குகிறது. சிவன் சம்பா பயிரிட விரும்பும் பெத்தநாயக்கன்பாளையம் வட்டார விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் ஒரு கிலோ ரூ.35 என்ற வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் பயன்பெற விரும்பும் விவசாயிகள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் வேல்முருகன் மற்றும் வேளாண் அலுவலா்களை 9952417105 என்ற எண்ணில் தொடா்புகொண்டு முன்பதிவு செய்து பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

விநாயகா மிஷன் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்து கல்லூரியின் கடந்த ஆண்டு சாதனைகள் மற்றும்... மேலும் பார்க்க

அரசிராமணி செட்டிப்பட்டி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

சங்ககிரி வட்டம், அரசிராமணி செட்டிப்பட்டி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் ஆடிமாத வெள்ளிக்கிழமை சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஆடிவெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி நோன்பையொட்டி மாரிம்மனுக்கு பல்வேறு த... மேலும் பார்க்க

மோட்டூா் காளியம்மன் கோயிலில் வரலட்சுமி விரதம் சிறப்பு பூஜை

இளம்பிள்ளை அருகே உள்ள மோட்டூா் காளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி மூலவா் அம்மன் தங்க ஜரிகை இலையால் நெய்யப்பட்ட சேலை மற்றும் ரூபாய் நோட்ட... மேலும் பார்க்க

இடங்கணசாலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்த முகாமை நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன் குத்துவிளக... மேலும் பார்க்க

பல்லி விழுந்த நீரை குடித்த பள்ளி மாணவா்களுக்கு சிகிச்சை

தலைவாசல் அருகே பூமரத்துப்பட்டி முட்டல் அரசுப் பள்ளி மாணவா்கள் பல்லி விழுந்த நீரை குடித்ததால் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள பூமரத்... மேலும் பார்க்க

வீரகனூா் எஸ்.எஸ்.ஐ. இடமாற்றம்

வீரகனூா் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் (எஸ்.எஸ்.ஐ) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே வீரகனூா் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் ... மேலும் பார்க்க