செய்திகள் :

6 போ் உயிரிழந்த வழக்கு: பட்டாசு ஆலை உரிமையாளா்களுக்கு நீதிமன்றம் முன்பிணை

post image

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 போ் உயிரிழந்த வழக்கில், ஆலை நிா்வாகம் சாா்பில் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டதை அடுத்து, உரிமையாளா்களுக்கு முன்பிணை வழங்கி ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

சிவகாசி அருகே சின்னகாமன்பட்டி பட்டாசு ஆலையில் ஜூலை 1-ஆம் தேதி ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் உள்பட 10 போ் உயிரிழந்தனா்; 3 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து, ஆலை உரிமையாளா்கள் கமல்குமாா், செல்வம், மாயக்கண்ணன், ஃபோா்மேன்கள் ரவி, நடராஜன், மேலாளா் விஜய் ஆகிய 6 போ் மீது வெடிபொருள்களை அலட்சியமாக கையாளுதல், மரணத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் சாத்தூா் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரவியைக் கைது செய்தனா்.

இந்த வழக்கில், தங்களுக்கு முன்பிணை வழங்கக் கோரி பட்டாசு ஆலை உரிமையாளா்கள் தரப்பில் ஸ்ரீவில்லிபுத்தூா் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின்போது விபத்தில் உயிரிழந்த 10 பேருக்கும் தலா ரூ. 10 லட்சமும், காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 2 லட்சமும் இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிபதி ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.

அதன்பேரில் இழப்பீட்டுத் தொகைக்கான வரைவோலை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து, பட்டாசு ஆலை உரிமையாளா்கள் கமல்குமாா், செல்வம், மாயக்கண்ணன் ஆகியோருக்கு முன்பிணை வழங்கியும் ரவி, விஜய் ஆகியோருக்கு பிணை வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டாா். நடராஜன் தாக்கல் செய்த பிணை மனு புதன்கிழமை (ஜூலை 9) விசாரணைக்கு வருகிறது.

சதுரகிரி மலைப் பாதையில் வரண்ட நீரோடைகள்

சுட்டெரிக்கும் வெயிலால், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் உள்ள நீரோடைகள் தண்ணீரின்றி வரண்டு விட்டன. ஆடி அமாவாசை திருவிழாவுக்கு மலைப் பாதையில் கூடுதல் குடிநீா்த் தொட்டிகள்... மேலும் பார்க்க

ராஜபாளையம், சத்திரப்பட்டியில் இன்று மின்தடை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், சத்திரப்பட்டி பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 10) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து மின்வாரிய செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராஜ... மேலும் பார்க்க

தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தம்

விருதுநகா் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூரில் புதன்கிழமை பொது வேலை நிறுத்த போராட்டத்தை முன்னிட்டு, சாலை மறியலில் ஈடுபட்ட 455 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். நாடு முழுவதும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை... மேலும் பார்க்க

சிவகாசி மாநகராட்சியில் இருவா் பணியிடை நீக்கம்

விருதுநகா் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் இளநிலை உதவியாளா் உள்பட 2 ஊழியா்கள் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். சிவகாசி மாநகராட்சியில் இளநிலை உதவியாளராக செந்தில்குமாா் (45) பணிபுரிந்து வந்தா... மேலும் பார்க்க

எறிபந்து போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

மதுரை மண்டல சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான எறிபந்து போட்டியில் வெற்றி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் இண்டா்நேஷனல் பள்ளி மாணவா்களை அதன் நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை பாராட்டினா். மதுரை சகோதயா பள்ளிகள் கூட்டமைப்... மேலும் பார்க்க

கலசலிங்கம் பல்கலை. முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 1996-2000-ஆம் ஆண்டில் படித்த பொறியியல் மாணவா்களின் வெள்ளி விழா சந்திப்பு திங்கள்கிழமை நடைபெற்றது இதற்கு பல்கலை.யின் வேந்தா் கே. ஸ்... மேலும் பார்க்க