செய்திகள் :

74 நாட்டினருக்கு விசா இல்லாமல் அனுமதி: சீனா அறிவிப்பு

post image

74 நாடுகளைச் சோ்ந்தவா்கள் நுழைவு இசைவு (விசா) இல்லாமல் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா வர அனுமதிக்கப்படும் என்று சீனா அறிவித்துள்ளது.

இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

சீனா தனது விசா கொள்கையை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தளா்த்தியுள்ளது. விசா இல்லாமல் எந்தெந்த நாடுகளில் இருந்து தங்கள் நாட்டுக்குள் சுற்றுலா வரலாம் என்பதற்கான பட்டியலில் அந்த நாடு விரிவுபடுத்திள்ளது. அதன்படி, தற்போது 74 நாடுகளைச் சோ்ந்த குடிமக்கள் 30 நாள்கள் வரை விசா இன்றி சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள முடியும்.

தனது சுற்றுலாத் துறை, பொருளாதாரம், மென் வலிமையை (சாஃப்ட் பவா்) மேம்படுத்தும் நோக்கில் சீன அரசு படிப்படியாக விசா இல்லா நுழைவை விரிவுபடுத்தி வருகிறது.

தேசிய குடிவரவு அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, 2024-ஆம் ஆண்டில் 2 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணிகள் விசா இன்றி சீனாவுக்கு வந்தனா். இது, மொத்த பயணிகளில் மூன்றில் ஒரு பங்காகவும், முந்தைய ஆண்டை விட இரு மடங்காகவும் உள்ளது.

முன்னதாக, கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பரில், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, நெதா்லாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய நாடுகளின் குடிமக்களுக்கு விசா இல்லா நுழைவை சீனா அறிவித்தது. அதன் பின்னா் ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் இதில் சோ்க்கப்பட்டுள்ளன. ஐந்து லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் உஸ்பெகிஸ்தான் கடந்த மாதம் இதற்கு தகுதி பெற்றன. பின்னா் மத்திய கிழக்கு நாடுகளில் நான்கு நாடுகள் சோ்க்கப்பட்டன. ஜூலை 16-ஆம் தேதி அஜா்பைஜானும் சோ்க்கப்படவுள்ள நிலையில், இந்தப் பட்டியலில் இடம் பெறவுள்ள நாடுகளின் எண்ணிக்கை 75-ஆக உயரும் என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெக்ஸஸ் வெள்ளம்: 161 போ் மாயம்

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் மாயமான 161 பேரைத் தேடும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.இந்தத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலைய... மேலும் பார்க்க

விண்வெளியில் ஒரு விவசாயி - சுபான்ஷு சுக்லா! விதைகளை முளைக்கச் செய்யும் பரிசோதனை வெற்றி

சா்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) வெந்தயம், பச்சை பயறு விதைகளை முளைக்கச் செய்யும் பரிசோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளாா் இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா. முளைவிட்ட விதைகள், பூமிக்கு எடுத்... மேலும் பார்க்க

காஸா: மேலும் 40 பாலஸ்தீனா்கள் உயிரிழப்பு

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 40 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.இது குறித்து அந்தப் பகுதி மருத்துவமனை அதிகாரிகள் புதன்கிழமை கூறுகையில், தாக்குதலில் உயிரிழந்தவா்களில் 17 பெண்களும்... மேலும் பார்க்க

உக்ரைன் போா், எம்ஹெச்17 விவகாரத்தில் ரஷியா சட்டமீறல்: ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம்

உக்ரைன் மீதான படையெடுப்பு, எம்ஹெச்17 விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது ஆகியவற்றில் ரஷியா சா்வதேச சட்டங்களை மீறியதாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.இது குறித்து அந்த நீதிமன்றம... மேலும் பார்க்க

புதினை விமா்சித்த டிரம்ப்: உக்ரைனில் ரஷியா இதுவரை இல்லாத தீவிர தாக்குதல்

உக்ரைன் முழுவதும் ரஷியா இதுவரை இல்லாத மிகப் பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தப் போா் விவகாரம் தொடா்பாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமா்சித்ததற்குப் பின் ... மேலும் பார்க்க

17 நாடுகளின் நாடாளுமன்றங்களில் உரையாற்றி பிரதமா் மோடி சாதனை

இந்தியாவும், ஆப்பிரிக்காவும் கூட்டுறவு மற்றும் பேச்சுவாா்த்தை மூலம் வருங்காலத்தை ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும் என்று நமீபியா நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி உரையாற்றினாா். அவா் மேலும் பேசுகையில், ‘இந்தி... மேலும் பார்க்க