செய்திகள் :

8-வது இடத்துடன் ஐபிஎல் தொடரை நிறைவு செய்த நடப்பு சாம்பியன்; பேட்ஸ்மேன்களை குறைகூறும் ரஹானே!

post image

நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட முடியாததற்கு பேட்ஸ்மேன்களின் மோசமான ஃபார்மே காரணம் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையும் படிக்க: தோனியிடம் எப்போதும் கேட்கப்படும் கேள்வி; பதிலால் ஆர்ப்பரித்த ரசிகர்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் மொத்தமுள்ள 14 போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை. இதன் மூலம், 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 8-வது இடம் பிடித்து நடப்பு ஐபிஎல் தொடரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிறைவு செய்துள்ளது.

சிறப்பாக அமையாததன் காரணம் என்ன?

நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இந்த ஐபிஎல் தொடர் சிறப்பாக அமையாததற்கான காரணத்தை அந்த அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: எங்கள் அணியில் 3-4 பேட்ஸ்மேன்கள் ஃபார்மில் இல்லை. பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட போதிலும், எங்களால் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. ஒரு அணியாக நாங்கள் பேட்டிங்கில் நன்றாக செயல்படவில்லை. ஆனால், இந்த சூழ்நிலையை கையாளும் அனுபவம் எங்களுக்கு இருக்கிறது. அடுத்த சீசனில் வலுவாக திரும்பி வருவோம் என்றார்.

இதையும் படிக்க: அபார வெற்றியுடன் நடப்பு ஐபிஎல் தொடரை நிறைவு செய்த சிஎஸ்கே!

கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சாம்பியன் பட்டம் வெல்ல முக்கியக் காரணமாக அமைந்த ரிங்கு சிங், ரமன்தீப் சிங், வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரஸல் போன்ற வீரர்கள், நடப்பு ஐபிஎல் தொடரில் பெரிதாக சோபிக்காதது குறிப்பிடத்தக்கது.

முதல் முறை சாம்பியனாக முனைப்பு! பெங்களூரு - பஞ்சாப் இன்று பலப்பரீட்சை!

ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) பலப்பரீட்சை நடத்துகின்றன.இரு அணிகளுமே முதல் முறையாக கோப்பை வெல்லும் முனைப்புடன் வருகின்றன... மேலும் பார்க்க

வேலை இன்னும் முழுமையாக முடியவில்லை: ஷ்ரேயாஸ் ஐயர்

ஐபிஎல் இறுதிப்போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில் வேலை இன்னும் முழுமையாக முடியவில்லை என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.கடந்த மார்ச் மாதம் கோலாகலமாகத் தொடங்கிய 18-வது ஐபிஎல்... மேலும் பார்க்க

விராட் கோலிக்காக கோப்பையை வென்று கொடுக்க விரும்புகிறோம்: ஆர்சிபி கேப்டன்

விராட் கோலிக்காக ஐபிஎல் கோப்பையை வென்று கொடுக்க விரும்புவதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நாளை (ஜூன் 3) நடைபெறும் இறுதிப்போட்டிய... மேலும் பார்க்க

ஆர்சிபியின் 18 வருட காத்திருப்பா? பஞ்சாப் கிங்ஸின் எழுச்சியா? முதல் கோப்பை யாருக்கு?

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் இதுவரை கோப்பையை வெல்லாத அணிகளான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கிய ஐபிஎல் 18-வது சீசன் இறுதிக்கட்டத்தை ... மேலும் பார்க்க

ஷ்ரேயாஸ் ஐயர், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம்!

பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா இருவருக்கும் பிசிசிஐ அபராதம் விதித்துள்ளது. நடப்பு ஐபில் தொடரின் நேற்றிரவு நடைபெற்ற குவாலிஃபையர் 2- போ... மேலும் பார்க்க

ஷ்ரேயாஸ் ஐயரை கட்டியணைத்து முத்தமிட்ட பஞ்சாப் அணி உரிமையாளர்!

ஐபிஎல்லில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரை கட்டியணைத்து அந்த அணியின் உரிமையாளர் முத்தமிட்ட விடியோக்கள் இணைத்தில் வைரலாகி வருகின்றன.நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றிரவு நட... மேலும் பார்க்க