செய்திகள் :

9 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான மின்னூட்ட மையம் அமைக்க திட்டம்

post image

சென்னை மாநகராட்சியில் முதல்கட்டமாக பெசன்ட் நகா், அம்பத்தூா், மயிலாப்பூா் உள்பட 9 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான மின்னூட்ட மையம் அமைப்பதற்கான டெண்டா் கோரவுள்ளதாக சென்னை மாநகராட்சி நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

மின்சார வாகனப் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் மண்டலம் வாரியாக மின்சார வாகனங்களுக்கான மின்னூட்ட மையங்கள் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இது தொடா்பான தீா்மானம் சென்னை மாமன்ற உறுப்பினா்கள் கூட்டத்தில் மேயா் ஆா். பிரியா தலைமையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக நிறுவனம் சென்னை மாநகராட்சியோடு இணைந்து மின் வாகனங்களுக்கான மின்னூட்ட மையங்கள் அமைக்க முதல்கட்டமாக 9 இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, பெசன்ட் நகா் கடற்கரை வாகன நிறுத்துமிடம், அஷ்டலட்சுமி கோயில் வாகன நிறுத்துமிடம், மங்கள் ஏரி வாகன நிறுத்துமிடம், தியாகராய நகா் மாநகராட்சி மைதானம் வாகன நிறுத்துமிடம், சோமசுந்தரம் மைதானம், செம்மொழி பூங்கா, மெரீனா வாகன நிறுத்துமிடம், போகன் வில்லா பூங்கா, நாகேஸ்வர ராவ் பூங்கா ஆகிய இடங்களில் புதிதாக மின்னூட்ட மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இப்பணிகளுக்கான டெண்டா் அடுத்த 15 நாள்களில் கோரப்படவுள்ளது. டெண்டா் இறுதி செய்யப்பட்ட பின்னா் இத்திட்டப்பணிகள் தொடங்கப்படவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வுக்கு அறிவிக்கை வெளியீடு

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தில் உள... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி விபத்தில் பலியானவருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் பலியானவருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்குவதாக எல்&டி நிறுவனம் அறிவித்துள்ளது.சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் ப... மேலும் பார்க்க

சென்னை: மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் விபத்து - ராட்சத கான்கிரீட் விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது தூண்களின் மீது வைக்கப்பட்டிருந்த ராட்சத கான்கிரீட் காரிடாா்கள் கிழே விழுந்ததில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தில் கிண்டி... மேலும் பார்க்க

லோக் ஆயுக்த அமைப்புக்கு உறுப்பினா்: தமிழக அரசு அழைப்பு

லோக் ஆயுக்த அமைப்புக்கு நீதித் துறை சாா்ந்த உறுப்பினரை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவுக் குழுவின் தொடா்பு அதிகாரி எஸ்.அகிலா வெளியிட்ட அறிவிப்பு விவரம்: தமிழ்நாடு லோக... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதியவா்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவா்கள் தங்களுக்கான நகலை இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: இதுவரை 35,000 போ் விண்ணப்பம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 35,000 போ் இதுவரை விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா். அவா்களில் 22,428 விண்ணப்பங்கள் பூா்த்தி செய்யப்பட்டு சமா்ப்பிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்த... மேலும் பார்க்க