செய்திகள் :

Babar Azam: "தயவு செய்து என்னை இப்படி அழைக்காதீர்கள்" - ரசிகர்களுக்கு பாபர் அசாமின் வேண்டுகோள் என்ன?

post image
ஒருநாள் போட்டி தரவரிசையில் டாப் 8 அணிகள் மட்டும் பங்கேற்கும் ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி தொடர், பிப்ரவரி 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்கவிருக்கிறது.

இதில், இந்தியா ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது. நடப்பு சாம்பியனான பாகிஸ்தான், சாம்பியன் பட்டத்தைத் தக்கவைக்கும் முனைப்பில் தொடருக்கு முன்னோட்டமாக நியூசிலாந்து, தென்னாபிரிக்கா ஆகிய அணிகளுடன் முத்தரப்பு ஒருநாள் தொடரில் ஆடிவருகிறது.

பாபர் அசாம்

மேலும், பாகிஸ்தான் அணி நிர்வாகம் வித்தியாசமாக ஃபகர் சமான், பாபர் அசாம் ஆகியோரை இந்த முத்தரப்பு தொடரில் ஓப்பனிங் வீரர்களாக இறக்கியிருக்கிறது. பாகிஸ்தான் அணி நிர்வாகத்தின் விமர்சனத்துக்குள்ளாகியும் வருகிறது. இந்த நிலையில், தன்னை இவ்வாறு அழைக்க வேண்டாம் என ரசிகர்ளுக்கு பாபர் அசாம் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருக்கிறார்.

இது குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய பாபர் அசாம், ``தயவு செய்து என்னை கிங் என்று அழைப்பதை நிறுத்துங்கள். நான் கிங் இல்லை, அந்த இடத்துக்கு இன்னும் வரவுமில்லை. எனக்கு இப்போது புதிய பொறுப்புகள் இருக்கின்றன.

பாபர் அசாம்

கடந்த காலங்களில் நான் என்ன செய்திருந்தாலும், ஒவ்வொரு ஆட்டமும் எனக்கு புதிய சவால்தான். தற்போதைய சூழல் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றில் நான் கவனம் செலுத்த வேண்டும்." என்று கூறினார்.

பாபர் அசாமை அவ்வப்போது விராட் கோலியுடன் ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் அரங்கேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Rishabh Pant : அன்று ரிஷப் பண்ட் உயிரைக் காப்பாற்றிய இளைஞர்... இன்று உயிருக்குப் போராட்டம்

இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட், 2022 டிசம்பரில் டெல்லியிலிருந்து உத்தரகாண்ட்டுக்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியிருந்தார். அப்போது... மேலும் பார்க்க

Virat Kohli: `நானும் வீரர்களும் உங்களின் பின்னால் நிற்போம்' - கேப்டன் ரஜத் பட்டிதரை வாழ்த்திய கோலி

பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு விராட் கோலி நெகிழ்வுடன் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.Rajat Patidarஇதுகுறித்து விராட் கோலி பேசுகையில், ``ரஜத் பட... மேலும் பார்க்க

RCB : `உலகின் சிறந்த ரசிகர்களுக்காக...' - புதிய கேப்டனை அறிவித்த ஆர்.சி.பி

ஐ.பி.எல் இல் பெங்களூரு அணியின் புதிய கேப்டன் யார் என்பதை அந்த அணியின் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.பெங்களூரு அணியை பல ஆண்டுகளாக கோலிதான் கேப்டனாக வழிநடத்தி வந்தார். 2021 டி20 உலகக்கோப்பை முடிந்தவுடன் ... மேலும் பார்க்க

RCB: `மீண்டும் கேப்டன் ஆகிறாரா கோலி?' - நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஐ.பி.எல் இல் பெங்களூரு அணியின் புதிய கேப்டன் யார் என்பதை அந்த அணியின் நிர்வாகம் நாளை அறிவிக்கவிருக்கிறது.Virat Kohliபெங்களூரு அணியை பல ஆண்டுகளாக கோலிதான் கேப்டனாக வழிநடத்தி வந்தார். 2021 டி20 உலகக்கோப... மேலும் பார்க்க

MS Dhoni: ``தோனியின் கண்களை பார்த்தால்..." -முன்னாள் வீரர் தவான் பகிரும் சுவாரஸ்யம்

இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின் - சேவாக் ஓப்பனிங் கூட்டணிக்குப் பிறகு, வெற்றிகரமான ஓப்பனிங் கூட்டணியாக அமைந்தது ரோஹித் - ஷிகர் தவான் கூட்டணிதான். இதில், 2013-ல் ஆஸ்திரேலியாவுக்கெதிரான போட்டி மூலம் ட... மேலும் பார்க்க

Champions Trophy: விலகிய டாப் 4 ஆஸி., வீரர்கள்; 8 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கேப்டனாக ஸ்மித்!

ஒருநாள் போட்டி தரவரிசைப் பட்டியலில் டாப் 8 அணிகள் மட்டும் பங்கேற்கும், மினி உலகக் கோப்பை என்றழைக்கப்படும் ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19-ம் தேதி தொடங்குகிறது. 2017-க்குப் பிறகு 8 ஆண்டுகளாக சாம... மேலும் பார்க்க