செய்திகள் :

Nipah virus: கேரளாவை மீண்டும் அச்சுறுத்தும் நிபா வைரஸ் - சுகாதார அமைச்சர் சொல்வதென்ன?

post image

கேரளாவில் நிபா வைரஸ் மீண்டும் பரவி வருகின்றது என்பதால் மக்கள் மத்தியில் புதிய அச்சம் உருவாகியுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு கோழிக்கோட்டில் கடுமையான மூளைக்காய்ச்சல் (AES) நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 18 வயது சிறுமிக்கும், தற்போது மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மன்னாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 38 வயது பெண்ணுக்கும் நிபா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் (NIV) ஜூலை 4, 2025 அன்று 38 வயது பெண்ணுக்கு நிபா தொற்று இருப்பதை உறுதி செய்தது. மூளைக்காய்ச்சல் நோயால் உயிரிழந்த சிறுமியின் இறுதி பரிசோதனை முடிவு இன்னும் பெறப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு கேரளாவில் நிபா வைரஸ் அச்சுறுத்தல் தலைதூக்கியுள்ளது.

மருத்துவர்கள், ஊழியர்கள் தனிமைப்படுத்தல்

நிபா தொற்றால் உயிரிழந்த சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் உடற்கூறு பரிசோதனை செய்த மருத்துவ குழுவினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

மலப்புரம், பாலக்காடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் சுகாதார அதிகாரிகள் உயர் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர். நிபா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மாநில சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறுகையில், ”நிபா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் கடந்த சில நாள்களாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முப்பது குழுக்கள் மூன்று மாவட்டங்களில் செயல்பட்டு, தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருகின்றன. போலீசாரின் உதவியுடன் தொடர்புகளை கண்டறியும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்ட அளவில் ஹெல்ப்லைன் மற்றும் கட்டுப்பாட்டு மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன" என தெரிவித்திருக்கிறார்.

Gurdeep Kaur: இந்தோரின் ஹெலன் கெல்லர் என்று இவர் கொண்டாடப் படுவது ஏன்? இவர் செய்த சாதனை என்ன?

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தோர் நகரைச் சேர்ந்தவர் குர்தீப் கவுர். விழித்திறன், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் சவால் கொண்ட இவர், வருமான வரித்துறையில் அரசு உத்தியோகம் பெற்று வரலாற்றுச் சாதனை ப... மேலும் பார்க்க

AI உதவியுடன் 18 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமான பெண் - எப்படி சாத்தியமாகியது?

18 ஆண்டுகளாக குழந்தை பெற முயன்ற அமெரிக்க தம்பதி, செயற்கை நுண்ணறிவால் (AI) கர்ப்பம் அடைந்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல இடங்களில் IVF சிகிச்சை மேற்கொண்டபோதிலும், முயற்சிகள் தோல்வியடைந்திருக்கிறது. காரண... மேலும் பார்க்க

தாய்லாந்து: நான்கு வயது இரட்டையர்களுக்கு திருமணம் நடத்திய குடும்பம் – வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

தாய்லாந்தில் நான்கு வயது இரட்டையர்களுக்கு திருமணம் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தாய்லாந்தின் கலாசின் மாநிலத்திலுள்ள ப்ரச்சயா ரிசார்டில் (Prachaya Resort) நான்கு வயது இரட்டையர்களு... மேலும் பார்க்க

12-ம் வகுப்பில் 26 முறை தோல்வி; ஆனாலும் பி.ஹெச்டி முடித்து முனைவரான பஞ்சாயத்து தலைவர்!

படிப்புக்கு எல்லையே கிடையாது என்று சொல்வார்கள். சிலர் முதுமை காலத்திலும் படிப்பை தொடருவார்கள். குஜராத் மாநிலத்தில் பஞ்சாயத்து தலைவர் ஒருவர் பி.எச்.டி முடித்து முனைவர் பட்டம் பெற்ற பிறகும் 12வது வகுப்ப... மேலும் பார்க்க

துபாயில் திருடப்பட்ட ஆப்பிள் ஏர்பாட்ஸ்; பாகிஸ்தானுக்கு பயணம் செய்து மீட்ட பிரிட்டிஷர்- எப்படி?

துபாயில் திருடப்பட்ட ஆப்பிள் ஏர்பாட்ஸ்களை பாகிஸ்தானுக்கு பயணம் செய்து பிரிட்டிஷைச் சேர்ந்த youtuber மீட்டுள்ளார். பிரிட்டிஷ் யூடியூபரான லார்ட் மைல்ஸ் ஒரு வருடத்திற்கு முன்பு துபாய் ஹோட்டலில் தனது ஏர்ப... மேலும் பார்க்க

அமெரிக்கா: இறுதிச்சடங்கில் ஹெலிகாப்டரிலிருந்து வீசப்பட்ட டாலர்கள்; வைரல் வீடியோவில் பின்னணி என்ன?

அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபரும் பந்தய கார் ஓட்டுபவருமான டாரெல் தாமஸ் ஜூன் 15 அன்று தனது 58 வயதில் காலமானார்.இவரின் மரணத்தில் கூட பலரும் அவரை திரும்பிப் பார்க்க வேண்டும் என்று இவரின் கடைசி விருப்பத்... மேலும் பார்க்க