செய்திகள் :

UK: நாடு முழுவதும் பாகிஸ்தான் பாலியல் வன்கொடுமை கும்பல் அட்டூழியம் - சுயேச்சை எம்.பி குற்றச்சாட்டு!

post image

ஐக்கிய ராச்சியத்தில் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் ரூபர்ட் லோவ் தனிப்பட்ட முறையில் நடத்திய விசாரணையில் குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமை நடத்தும் கும்பல்கள் கண்டறியப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 85 அதிகாரிகள் இதுபோன்ற கும்பல்களை அடையாளம் கண்டுள்ளதாக கூறுகிறார் ரூபர்ட் லோவ்.

இந்த கும்பல்களால் லட்சக்கணக்கான உயிர்கள் அழிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் ரூபர்ட். இதில் 1960களில் நடந்த சில வழக்குகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இந்த விசாரணைக்காக ஆயிரக்கணக்கான தகவல் சுதந்திர மனுக்கள் (தகவல் அறியும் உரிமைச் சட்டம் போல) போடப்பட்டுள்ளன, உயிர் பிழைத்தவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்கிறார்.

இதுபோன்ற பாலியல் வன்கொடுமை கும்பல்களில் (Rape Gangs) பெரும்பாலும் பாகிஸ்தான் வம்சாவளிகள் இடம்பெற்றிப்பதாகவும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் நினைத்ததை விடவும் பரவலாக இயங்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுவரை வெளியான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் இதுவே விரிவானது எனக் கூறும் ரூபர்ட், வெள்ளையினப் பெண்களைக் குறிவைத்து பாலியல் சுரண்டலில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் குற்றத்துக்கு காரணமான வெளிநாட்டினரை நாடுகடத்த வேண்டுமென்றும் கூறியுள்ளார்.

இந்த கும்பல்கள் பற்றி அறிந்தும் எதுவும் செய்யாமல் இருந்த வெளிநாட்டினரை நாடு கடத்தவும், இதேப்போல அறிந்தும் புகார் அளிக்காமல் இருந்த பிரிட்டிஷ்காரர்கள் மீது வழக்குதொடுக்கவும் வேண்மெனக் கோரியுள்ளார் ரூபர்ட். ஏனென்றால் விசாரணையில் கிடைத்துள்ள தகவல்களின் படி பலர் இந்த கும்பல் குறித்து அறிந்திருக்கக் கூடும் என்கிறார்.

இந்த விசாரணை குறித்த ரூபர்ட்டின் அறிக்கை வெளிநாட்டினரை நாடுகடத்த வேண்டும் என்பதையே பெருமளவில் முன்வைத்தது. "ஒரு பாகிஸ்தானியப் பெண் தன் கணவன் ஒரு அப்பாவி இளம் வெள்ளைக்காரப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய அனுமதித்தால், அவள் நம் நாட்டிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட வேண்டும். ஒருபோதும் திரும்பி வர அனுமதிக்கப்படக்கூடாது. சம்பந்தப்பட்ட எந்தவொரு வெளிநாட்டவரும் நாடு கடத்தப்பட வேண்டும்." எனக் கூறியிருக்கிறார் ரூபர்ட்.

ரூபர்ட், பாகிஸ்தானியர்கள் பரிசுகள் வழங்கும் அப்பாவியான வெள்ளையினப் பெண்களைக் கவர்ந்து தங்கள கட்டுப்பாட்டுக்குள் வந்தபிறகு பாலியல் சுரண்டலில் ஈடுபடுவதாகவும், அவர்களை மிரட்டி, ஒரு கும்பலில் உள்ள வெவ்வேறு நபர்கள் நீண்டகாலத்துக்கு அடுத்தடுத்து ஒரே பெண்ணிடம் பாலியல் சுரண்டலில் ஈடுபடுவதாகவும் கூறியிருக்கிறார்.

ரூபர்ட் லோவின் விசாரணை அறிக்கை, பாலியல் குற்றங்களை பாகிஸ்தானியர்களுக்கு எதிரான அரசியல் ஆயுதமாக மாற்றுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும், இந்த அறிக்கை இங்கிலாந்து மக்களிடையே பேசுபொருளாக எழுந்துள்ளது.

"புதிய பாஜக தலைவர் தேர்வு செய்யும் பணி; யார் முடிவெடுப்பது..!" - RSS தலைவர் மோகன் பகவத் சொன்ன பதில்

டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில், ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா மூன்று நாள் கருத்தரங்கு தொடர் சொற்பொழிவுடன் நடைபெற்று வருகிறது. இதில் செய்தியாளர்களிடம் பேசி வரும் மோகன் பகவத், பல்வேறு கேள்விகளுக்குப் பதிலள... மேலும் பார்க்க

`அ.தி.மு.க-வின் அனைத்து முடிவுகளையும் நாக்பூர் எடுக்கின்ற காலம் தொலைவில் இல்லை' - மாணிக்கம் தாகூர்

விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1,01,800 மதிப்புள்ள மூன்று வாகனங்கள் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8,14,400 மதிப்பில் வழங்கினார். பின்னர் செய்தியாளர... மேலும் பார்க்க

ராகுல் காந்தி: `குஜராத் கட்சிகள் பெற்ற ரூ.4300 கோடி நன்கொடை என்ன ஆனது'- தேர்தல் ஆணையம் விசாரிக்குமா?

குஜராத் மாநிலத்தில் உள்ள 10 சிறிய முகம் தெரியாத கட்சிகள் 2019-20 மற்றும் 2023-24 கால கட்டத்தில் ரூ.4300 கோடி நன்கொடை வாங்கியதாக வெளியான ஊடக அறிக்கைகளைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கா... மேலும் பார்க்க

'இந்தியா நினைத்தால் நாளைக்கே 25% வரியில் இருந்து தப்பிக்க முடியும்' - ட்ரம்பின் ஆலோசகர் பேச்சு

இந்தியா மீதான அமெரிக்காவின் 50 சதவிகித வரி அமலுக்கு வந்துவிட்டது. இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ அமெரிக்க தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ... மேலும் பார்க்க

`விஜய் வருகை பல அரசியல் கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உண்மை' - டி.டி.வி.தினகரன்

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். இதில் மாநில துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி, மாநில வழக்கறிஞர் பிரிவு செயல... மேலும் பார்க்க

கழுகார் : `கன்ட்ரோலில் சொத்துகள்’ - ஆளும் தரப்பிலிருந்து `சின்ன தலைவி’க்கு ஆதரவு கொடுப்பது யார்?

மனம் வெதும்பும் மீசைத் தலைவர்!“கூட்டணியில் இருந்து என்ன பயன்?”தமிழகத்தையே உலுக்கிய ஆணவப் படுகொலைக்குப் பிறகு, முதன்மையானவரைச் சந்தித்த மீசைத் தலைவர், ‘ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டத்தை’ உடனடியாக நிறைவே... மேலும் பார்க்க