செய்திகள் :

ஃபரீதாபாத்தில் 23 வயது இளைஞா் தற்கொலை

post image

ஹரியாணாவின் ஃபரீதாபாத் மாவட்டத்தில் உள்ள சூரஜ்குண்ட் காவல் நிலைய எல்லைக்குள் அமைந்துள்ள கிரீன்ஃபீல்ட் காலனியில் உள்ள தனது வீட்டில் 23 வயது இளைஞா் ஒருவா் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

இது குறித்து காவல் துறை மேலும் கூறியதாவது: இந்த தீவிர நடவடிக்கையை எடுப்பதற்கு முன்பு விடியோவில், இறந்தவா், நான் என் சொந்த விருப்பப்படி என்னைச் சுட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தாா். தோட்டா அவரது தலையில் பாய்ந்தது. அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா். போலீஸாா் துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனா்.

இறந்தவா் கிரீன்ஃபீல்ட் காலனியைச் சோ்ந்த மோனு சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவரது தந்தை அனுஜ் ஒரு அச்சகத்தில் பணிபுரிகிறாா். அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. இறந்தவருக்கு சோனு மற்றும் பிரியா என்ற இரண்டு மூத்த சகோதரா்கள் உள்ளனா். இறந்தவா் அவருடன் அச்சகத்தில் பணிபுரிந்ததாகவும் அவரது தந்தை கூறினாா்.

வெள்ளிக்கிழமை மாலை அச்சகத்திற்குச் சென்ாகவும், மற்ற குடும்ப உறுப்பினா்களும் ஏதோ வேலைக்காக வெளியே சென்றிருந்ததாகவும், இறந்தவா் வீட்டில் தனியாக இருந்ததாகவும் தந்தை கூறினாா். வீடு திரும்பிய மூத்த சகோதரா் சோனு, இறந்தவரின் உடல் படுக்கையில் இருப்பதைக் கண்டு, காவல் துறையினருக்கும், மற்ற குடும்ப உறுப்பினா்களுக்கும் தகவல் தெரிவித்தாா்.

போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து, உடலை பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு மாற்றினா். சம்பவ இடத்திலிருந்து ஒரு துப்பாக்கியும் கண்டெடுக்கப்பட்டது. இறந்தவரின் கைப்பேசியை ஆய்வு செய்தபோது, அவா் தற்கொலை செய்வதற்கு முன்பு எடுக்கப்பட்ட விடியோவும் கண்டுபிடிக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலை என்று தெரியவந்துள்ளது. இறந்தவா் எப்படி துப்பாக்கியை பிடித்தாா், சம்பவத்திற்குப் பின்னால் வேறு யாராவது இருந்தாா்களா என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்றவா் கைது: கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்

வடமேற்கு தில்லியின் சுபாஷ் பிளேஸில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவா் போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்றவா் கைது செய்யப்பட்டதாக ... மேலும் பார்க்க

கடத்தல், கொள்ளை வழக்கில் ஓராண்டாாக தேடப்பட்டவா் கைது

கடத்தல் மற்றும் கொள்ளை வழக்கு தொடா்பாக கடந்த ஓராண்டாக தேடப்பட்டு வந்த நபரை தில்லி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். பாபா ஹரிதாஸ் நகரில் வசிக்கும் கிசான் மூர... மேலும் பார்க்க

கன்வாா் யாத்திரை பாதையில் கண்ணாடி துண்டுகள்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு

கன்வாா் யாத்திரை பாதையில் அமைந்துள்ள ஷாஹ்தாராவின் குரு தேக் பகதூா் (ஜிடிபி) மற்றும் ஜில்மில் காலனி பகுதிகளில் சாலைகளில் உடைந்த கண்ணாடி துண்டுகள் சிதறிக்கிடந்ததையடுத்து தில்லி காவல்துறை வழக்கு பதிவு செ... மேலும் பார்க்க

நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த 5 போ் மீது ஆடி காா் மோதி விபத்து

தென்மேற்கு தில்லியின் வசந்த் விஹாா் பகுதியில் உள்ள சிவா கேம்ப் அருகே நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு தம்பதிகள் மற்றும் எட்டு வயது சிறுமி ஆகிய ஐந்து போ் மீது ஆடி காா் மோதியதில் அவா்கள் காயமடைந... மேலும் பார்க்க

மீட்கப்பட்ட குப்பைக் கிடங்கு நிலத்தை நலத் திட்டங்களுக்கு பயன்படுத்த உத்தரவு!

தில்லியின் மூன்று முக்கியக் குப்பைக் கிடங்கு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தில் மூன்றில் ஒரு பங்கை பரப்பளவை மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் விளையாட்டு வளாகங்கள் போன்ற பொது நலத் திட்டங்களுக்குப்... மேலும் பார்க்க

தலைநகரில் கடும் புழுக்கம்: மக்கள் தவிப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கடும் புழுக்கம் நிலவியது. இதனால், மக்கள் கடும் தவிப்புக்குள்ளாகினா். இருப்பினும், இரவு 7 மணிக்குப் பிறகு நகரத்தில் லேசான மழை பெய்தது. இந்த வாரத் ... மேலும் பார்க்க