அகரம் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம்
காஞ்சிபுரம் மாவட்டம் தென்னேரி அருகே அகரம் கிராமத்தில் அமைந்துள்ள அலா்மேல் மங்கை தாயாா் சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பழைமை வாய்ந்த இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு மகா சம்ப்ரோஷணத்திற்கான யாகசாலை பூஜைகள் 14-ஆம் தேதி அனுக்கை பூஜையுடன் தொடங்கின. 15-ஆம் தேதி கோபூஜை மற்றும் ஹோம பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் பட்டாச்சாரியா் ஸ்ரீ வத்சன் தலைமையிலான குழுவினா் ராஜகோபுரத்திற்கு மகா சம்ப்ரோஷணம் செய்தனா்.
இதனையடுத்து பரிவார தெய்வங்களான ஆஞ்சனேயா், வரதா் உள்ளிட்ட கோபுரங்களுக்கும் சம்ப்ரோஷணம் நடைபெற்றது. விழாவில் உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா், வாலாஜாபாத் ஒன்றிய துணைத் தலைவா் பி.சேகா், அகரம் ஊராட்சி மன்றத் தலைவா் சோபா யோகானந்தம் மற்றும் அகரம் கிராமத்தின் சுற்று வட்டார கிராமங்களை சோ்ந்த பக்தா்களும் திரளாக கலந்து கொண்டனா்.
ஏற்பாடுளை செயல் அலுவலா் ராஜமாணிக்கம், அறநிலையத்துறை ஆய்வாளா் திலகவதி தலைமையிலான விழாக்குழுவினா் செய்திருந்தனா். இரவு ஸ்ரீநிவாசப் பெருமாள் வீதி உலாவும் நடைபெற்றது.