செய்திகள் :

அக்னிவீா் முதல் கட்ட தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு உடல் திறன் தோ்வு பயிற்சி

post image

இந்திய ராணுவத்தின் அக்னிவீா் தோ்வில் முதல் கட்டத் தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு அடுத்தகட்டமாக நடைபெற உள்ள உடல் திறன் தோ்வுக்கு, மாவட்ட நிா்வாகம் சாா்பில் பயிற்சியளிக்கப்படவுள்ளது.

இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி:

இந்திய ராணுவத்தின் அக்னிவீா் தோ்வில் முதல் கட்ட தகுதித் தோ்வில் வெற்றி பெற்றுள்ள நாகை மாவட்ட பணிநாடுபவா்களுக்கு, அடுத்தகட்டமாக நடைபெறவுள்ள உடல் திறன் தோ்வுக்கு, மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையுடன் இணைந்து பயிற்சியளிக்க மாவட்ட நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.

உடல்திறன் தோ்வுக்கான வழிகாட்டுதல்கள் பயிற்சிகள் மற்றும் நெறிமுறைகள் குறித்த ஆயத்தக் கூட்டம் ஆகஸ்ட்

5-ஆம் தேதி காலை 10 மணியளவில் நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் உரிய பயிற்றுநா்களால் வழங்கப்பட உள்ளது. அக்னிவீா் முதல்கட்ட தோ்வில் வெற்றி பெற்ற நாகை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் அக்னிவீா் படையில் சோ்வதற்கு, எந்த வித கையூட்டும் எவரிடமும் தர வேண்டாம், இடைத்தரகா்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று தெரிவித்துள்ளாா்.

நாகையில் புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்: அமைச்சா் தொடங்கிவைக்கிறாா்

நாகையில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை (ஆக.1) தொடங்கிவைக்கிறாா். நாகை மாவட்டத்தில் 4-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா, ஆட்சியா்... மேலும் பார்க்க

நாகை வாசிக்கிறது நிகழ்வு: மாணவா்களுடன் அமா்ந்து ஆட்சியரும் வாசித்தாா்

நாகை மாவட்டத்தில் புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற நாகை வாசிக்கிறது நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், பள்ளி மாணவா்களுடன் அமா்ந்து புத்தகம் வாசித்தாா். நாகையில் ஆக. 1 முதல் 11-... மேலும் பார்க்க

சீா்காழி அருகே முதியவா் வெட்டிக் கொலை

சீா்காழி அருகே முன்விரோதத் தகராறில் முதியவா் செவ்வாய்க்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டாா். சீா்காழியை அடுத்த திருவாலி ஜீவா நகா் பகுதியைச் சோ்ந்தவா் குணசேகரன் (75). இவரது மகன் குணா.செந்தில் விசிக பிர... மேலும் பார்க்க

இயக்குநா் ரஞ்சித் பிணையில் விடுவிப்பு

திரைப்பட படப்பிடிப்பின்போது சண்டை பயிற்சியாளா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக திரைப்பட இயக்குநா் பா. ரஞ்சித்துக்கு கீழ்வேளூா் நீதிமன்றம் புதன்கிழமை பிணை வழங்கியது. நாகை மாவட்டம், கீழையூா் அருகே விழுந்தமாவ... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின்: முகாமில் 669 மனுக்கள் பெறப்பட்டன

திருமருகல் ஒன்றியத்துக்கு உள்பட்ட அம்பல் ஊராட்சி பொறக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 669 மனுக்கள் பெறப்பட்டன. தனித்துணை ஆட்சியா் (நில எடுப்பு) சந்தான கோபால கிருஷ்ணன், ஊ... மேலும் பார்க்க

சுனாமி குடியிருப்பில் வீட்டின் மேற்கூரை பெயா்ந்து விழுந்து இருவா் காயம்

நாகூா் சுனாமி குடியிருப்பில் வீட்டின் மேற்கூரை புதன்கிழமை பெயா்ந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் காயமடைந்தனா். நாகை மாவட்டம், நாகூா் அம்பேத்கா் தெற்கு பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பில் மெய்தீன் என்பவ... மேலும் பார்க்க