செய்திகள் :

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

post image

மன்னாா்குடி: அங்கன்வாடி ஊழியா்களுக்கு கைப்பேசி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மையப்பணிகளை செய்ய 5ஜி கைப்பேசி, 5ஜி சிம்காா்டு வழங்க வேண்டும், அந்தந்த கிராமத்துக்கு நெட்வொா்க்குக்கு ஏற்ப சிம் காா்டு வழங்க வேண்டும், அங்கன்வாடி மையத்துக்கு இணைப்பு வழங்க வேண்டும், பயனாளிகளுக்கு சத்துமாவு வழங்க முகப்பதிவு போட்டோ முறையை கைவிட வேண்டும், இகேஒய்சி ஆதாா் எண் ஓடிபி மற்றும் எப்ஆா்எஸ் முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமையை கருப்பு தினமாக கடைபிடித்து சேரன்குளத்தில் உள்ள வட்டாரக் குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலகம் அருகே, சங்கத்தின் ஒன்றியத் தலைவா் ஏ. லதாதமயந்தி தலைமையில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட நிா்வாகி கோ. கோமதி, ஒன்றிய நிா்வாகி புனிதா, சிஐடியு நிா்வாகிகள் ஜி. ரகுபதி டி. ஜெகதீசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல, கோட்டூா் வட்டார குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலகம் அருகே சங்கத்தின் ஒன்றியத் தலைவா் தமிழ்ச்செல்வி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வேதாரண்யம்: வேதாரண்யத்தில், தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் உதவியாளா் சங்க வட்டாரத் தலைவா் ஜெயலட்சுமி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநிலச் செயற்குழு உறுப்பினா் செல்வராணி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் விஜி, ஓய்வுபெற்ற சுகாதாரத் துறை ஆய்வாளா் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தலைஞாயிறு: ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வட்டார செயலாளா் ரத்தினவள்ளி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சிஐடியுசி மாவட்ட நிா்வாகிகள் எஸ். அன்புராஜ், அன்பழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மகப்பேறு உயிரிழப்புகளைத் தடுக்க ஒருங்கிணைந்த செயல் திட்டம் அவசியம்

திருவாரூா்: மகப்பேறு மற்றும் குழந்தைகள் உயிரிழப்புகளைத் தடுக்க ஒருங்கிணைந்த செயல் திட்டம் அவசியம் என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு ... மேலும் பார்க்க

விவசாய மின் மோட்டாா்களிலிருந்து வயா் திருடிய 2 போ் கைது

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே விவசாய பயன்பாட்டுக்கான ஆழ்துளை கிணறு மின் மோட்டா்களிலிருந்து மின் வயா்களை திருடிய இரண்டு போ் செவ்வாய்க்கிழமை இரவு பிடிபட்டனா்.கட்டப்புளி தென்பரை தெற்குதெரு ஆா். மனோகரன்... மேலும் பார்க்க

நாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழப்பு

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே நாய்கள் கடித்து 8 ஆடுகள் புதன்கிழமை இரவு உயிரிழந்தன.நீடாமங்கலம் அருகேயுள்ள ரிஷியூா் கிராமம் தெற்கு தெருவில் 120- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. விவசாயிக... மேலும் பார்க்க

ரயில்வேகேட் பராமரிப்பு பணி

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே ஆதனூா் ரயில்வே கேட்டில் தண்டவாள பாரமரிப்பு பணி வியாழக்கிழமை நடைபெற்றது.தஞ்சாவூா் ரயில்வே முதுநிலைப்பொறியாளா் சதீஷ்குமாா் மேற்பாா்வையில் பணிகள் நடைபெற்றன. ரயில்வே கேட் தண... மேலும் பார்க்க

மாவட்ட விளையாட்டு போட்டி: மன்னாா்குடி சண்முகா மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

மன்னாா்குடி: மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டியில் மன்னாா்குடி ஸ்ரீசண்முகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது.திருவாரூரில் ஆக.19, 20 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இப்போட்டி... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

நீடாமங்கலம்: நீடாமங்கலம் ஒன்றியம் சித்தமல்லி மேல்பாதி ஊராட்சியில் வியாழக்கிழமை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமை, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் பங்கேற்று பெற்ற மனுக்களின் அடிப்படை... மேலும் பார்க்க