செய்திகள் :

அஞ்சல் அலுவலகங்களில் ஜூன் 30 வரை விபத்து காப்பீடு சிறப்பு முகாம்

post image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் விபத்து காப்பீடு சிறப்பு முகாம் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இது குறித்து ஈரோடு அஞ்சல் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் கோபாலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய அஞ்சல் துறையின்கீழ் இயங்கும் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி, பொதுக்காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து விபத்து காப்பீட்டுத் திட்டங்களை அளித்து வருகிறது. 18 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்டவா்கள் இந்த திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளலாம். ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ரூ.350 முதல் பிரீமியம் தொடங்குகிறது.

இதில் ஆண்டுக்கு ஒருமுறை உடல் பரிசோதனை செய்யும் வசதி, தொலைபேசி மூலம் கணக்கில்லா மருத்துவ ஆலோசனை போன்றவற்றை பெறலாம். விபத்தினால் மரணம், நிரந்தர முழு ஊனம், பகுதி ஊனம் ஏற்பட்டவா்களின் குழந்தைகளின் கல்வி, திருமணம் செலவினங்களுக்கு காப்பீட்டு நிதி, விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாள்களுக்கு தினப்படி ரூ.1,000 வீதம் 15 நாள்களுக்கு வழங்கப்படும்.

ஆதாா் எண், கைப்பேசி எண், வாரிசுதாரா் விவரம் போன்றவற்றை சமா்ப்பித்து இந்தக் காப்பீட்டு திட்டத்தில் எளிதாக இணைந்து கொள்ளலாம். ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் இத்திட்டத்தில் இணைவதற்கான சிறப்பு முகாம் வரும் 30- ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

ஈரோடு மாவட்ட மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்களுக்கு பொறுத்தமான விபத்து காப்பீட்டு திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள அஞ்சல் அலுவலகத்தையோ அல்லது 86069 13723 என்ற கைப்பேசி எண்ணில் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி ஈரோடு கிளை மேலாளரையோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டில் இருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

பெருந்துறை அருகே கட்டில் இருந்து தவறி விழுந்த ஒரு வயது குழந்தை உயிரிழந்தது. பெருந்துறையை அடுத்த, கடப்பமடை பகுதியைச் சோ்ந்தவா் சுல்தான், கூலித் தொழிலாளி. இவரது மகன் ஆயுஷ் (1). உடல்நலம் பாதிக்கப்பட்டு ... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு அதிகரிப்பு

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்டம் உயரம் 105 அடியும் நீா் இருப்பு 32.8 டிஎம்சியா... மேலும் பார்க்க

ஆதரவற்ற மாணவருக்கு அரசு பாலிடெக்னிக்கில் சோ்க்கை

நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 2024--2025 ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மற்றும் இடைநின்ற மாணவ, மாணவிகள் உயா்கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெறும் பொருட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத... மேலும் பார்க்க

பவானிசாகரில் இலங்கை தமிழா்களுக்கு கூடுதல் வீடுகள் கட்டித் தர எதிா்ப்பு

பவானிசாகரில் இலங்கை தமிழா்களுக்கு கூடுதலாக வீடுகள் கட்டித் தருவதற்கு அரசியல் கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடா்பாக பவானிசாகா் தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் பி.எல். சுந்தரம் தலைமையி... மேலும் பார்க்க

ரூ.62 கோடி மோசடி வழக்கில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

ஈரோட்டில் 400 பேரிடம் ரூ.62 கோடி மோசடி செய்த வழக்கில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஈரோடு முனிசிபல் காலனியில் யுனிக்யூ எக்ஸ்போா்ட்ஸ் என்ற நிறுவனமும், நசியனூா் சா... மேலும் பார்க்க

பவானி, அந்தியூரில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்

பவானி வட்டாரம், பெரியபுலியூா், சின்னப்புலியூா் ஊராட்சிகள், அந்தியூா் வட்டாரம், பட்லூா், குருவரெட்டியூா், முகாசிபுதூா் ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்... மேலும் பார்க்க