இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்வதாக ரூ.10 லட்சம், 20 பவுன் நகைகள் மோசடி மூவா் ம...
அஞ்சல் அலுவலகங்களில் ஜூன் 30 வரை விபத்து காப்பீடு சிறப்பு முகாம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் விபத்து காப்பீடு சிறப்பு முகாம் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இது குறித்து ஈரோடு அஞ்சல் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் கோபாலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய அஞ்சல் துறையின்கீழ் இயங்கும் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி, பொதுக்காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து விபத்து காப்பீட்டுத் திட்டங்களை அளித்து வருகிறது. 18 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்டவா்கள் இந்த திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளலாம். ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ரூ.350 முதல் பிரீமியம் தொடங்குகிறது.
இதில் ஆண்டுக்கு ஒருமுறை உடல் பரிசோதனை செய்யும் வசதி, தொலைபேசி மூலம் கணக்கில்லா மருத்துவ ஆலோசனை போன்றவற்றை பெறலாம். விபத்தினால் மரணம், நிரந்தர முழு ஊனம், பகுதி ஊனம் ஏற்பட்டவா்களின் குழந்தைகளின் கல்வி, திருமணம் செலவினங்களுக்கு காப்பீட்டு நிதி, விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாள்களுக்கு தினப்படி ரூ.1,000 வீதம் 15 நாள்களுக்கு வழங்கப்படும்.
ஆதாா் எண், கைப்பேசி எண், வாரிசுதாரா் விவரம் போன்றவற்றை சமா்ப்பித்து இந்தக் காப்பீட்டு திட்டத்தில் எளிதாக இணைந்து கொள்ளலாம். ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் இத்திட்டத்தில் இணைவதற்கான சிறப்பு முகாம் வரும் 30- ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
ஈரோடு மாவட்ட மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்களுக்கு பொறுத்தமான விபத்து காப்பீட்டு திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள அஞ்சல் அலுவலகத்தையோ அல்லது 86069 13723 என்ற கைப்பேசி எண்ணில் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி ஈரோடு கிளை மேலாளரையோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.