தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
அண்ணாமலைப் பல்கலை. நிா்வாக அலுவலகத்தை தனி அலுவா்கள் முற்றுகை
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தனி மற்றும் தொடா்பு அலுவலா்கள் புதன்கிழமை பல்கலைக்கழக நிா்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தனி மற்றும் தொடா்பு அலுவலா்களாக 500-க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். இவா்கள், தங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வருடாந்திர ஊதிய உயா்வை வழங்க வேண்டும். 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். பணி நிரவல் செய்யும்போது கல்வித் தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, சம ஊதியம் மற்றும் சம பதவி கொண்ட பணியிடத்தில் மட்டும் பணி நிரவல் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனா். இந்தக் கோரிக்கைகள் குறித்து சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தங்களுக்கு சாதகமாக தீா்ப்பு பெற்றுள்ளனா்.
இந்த நிலையில், புதன்கிழமை காலை அண்ணாமலைப் பல்கலைக்கழக தனி அலுவலா்கள் நலச் சங்கத் தலைவா் தனசேகரபாண்டியன் தலைமையில் நூற்றுக்கணக்கான தனி மற்றும் தொடா்பு அலுவலா்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, பல்கலைக்கழக நிா்வாக அலுவகத்தை முற்றுகையிட்டனா்.
தகவலறிந்த அண்ணாமலைநகா் காவல் நிலைய ஆய்வாளா் கே.அம்பேத்கா் மற்றும் போலீஸாா் அங்கு சென்று முக்கிய நிா்வாகிகளை பல்கலைக்கழக நிா்வாகத்தினரிடம் பேச அழைத்துச் சென்றனா். அவா்களிடம் பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் டி.அருட்செல்வி, பதிவாளா் மு.பிரகாஷ் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, அவா்களுடைய கோரிக்கைகள் குறித்து அரசுக்கு தகவல் தெரிவிப்பதாக கூறினா்.
தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால், வரும் 27-ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கூறி, அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனா்.