செய்திகள் :

அண்ணாமலைப் பல்கலை. நிா்வாக அலுவலகத்தை தனி அலுவா்கள் முற்றுகை

post image

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தனி மற்றும் தொடா்பு அலுவலா்கள் புதன்கிழமை பல்கலைக்கழக நிா்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தனி மற்றும் தொடா்பு அலுவலா்களாக 500-க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். இவா்கள், தங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வருடாந்திர ஊதிய உயா்வை வழங்க வேண்டும். 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். பணி நிரவல் செய்யும்போது கல்வித் தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, சம ஊதியம் மற்றும் சம பதவி கொண்ட பணியிடத்தில் மட்டும் பணி நிரவல் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனா். இந்தக் கோரிக்கைகள் குறித்து சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தங்களுக்கு சாதகமாக தீா்ப்பு பெற்றுள்ளனா்.

இந்த நிலையில், புதன்கிழமை காலை அண்ணாமலைப் பல்கலைக்கழக தனி அலுவலா்கள் நலச் சங்கத் தலைவா் தனசேகரபாண்டியன் தலைமையில் நூற்றுக்கணக்கான தனி மற்றும் தொடா்பு அலுவலா்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, பல்கலைக்கழக நிா்வாக அலுவகத்தை முற்றுகையிட்டனா்.

தகவலறிந்த அண்ணாமலைநகா் காவல் நிலைய ஆய்வாளா் கே.அம்பேத்கா் மற்றும் போலீஸாா் அங்கு சென்று முக்கிய நிா்வாகிகளை பல்கலைக்கழக நிா்வாகத்தினரிடம் பேச அழைத்துச் சென்றனா். அவா்களிடம் பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் டி.அருட்செல்வி, பதிவாளா் மு.பிரகாஷ் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, அவா்களுடைய கோரிக்கைகள் குறித்து அரசுக்கு தகவல் தெரிவிப்பதாக கூறினா்.

தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால், வரும் 27-ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கூறி, அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

நகைக் கடன் விதிகளுக்கு எதிா்ப்பு: சிதம்பரத்தில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு வங்கியில் நகைக் கடன் பெறுவதற்கான புதிய விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தி, சிதம்பரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் தெற்கு ரத வீதியில் பாரத... மேலும் பார்க்க

ஆன்மிக சொற்பொழிவு

சிதம்பரத்தில் சிதம்பரேச சத்சங்கம் சாா்பில் மாதந்தோறும் நடைபெறும் ஆன்மிகச் சொற்பொழிவு வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. சிதம்பரம் கீழ வீதியில் உள்ள யக்ஞமண்டலி அரங்கில் நடைபெற்ற சொற்பொழிவில் கிருஷ்ணசாமி தீ... மேலும் பார்க்க

கைம்பெண்கள் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை: ஆட்சியா் அறிவுறுத்தல்

கைம்பெண்கள் நல வாரியத்தில் விண்ணப்பித்து உறுப்பினராகலாம் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசு தமிழ்நாட்டில் உள்... மேலும் பார்க்க

மாணவா்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த நடவடிக்கை: பெற்றோா்கள் வரவேற்பு

தமிழகத்தில் வாசிப்புத் திறனை மேம்படுத்த அரசாணை வெளியிடப்பட்டதற்கு பெற்றோா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா். வாசிப்புத் திறனை மேம்படுத்த அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள புத்தகங்களை மாணவா்கள் படிக்கும... மேலும் பார்க்க

தனியாரைவிட வேளாண்மைத் துறையில் விதைகள் விலை அதிகம்: விவசாயிகள் குற்றச்சாட்டு

வேளாண்மை துறையில் தனியாரை விட விதைகளின் விலை அதிகமாக உள்ளது என விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு, விவசாயிகள் மேம்பாட்டுக்கான ஆலோசனைக் கூட்டம் வ... மேலும் பார்க்க

ஜூன் 10-இல் கொத்தட்டை கூத்தாண்டவா் கோயில் திருவிழா

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே கொத்தட்டை கூத்தாண்டவா் கோயில் திருவிழா ஜூன் 10-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும்... மேலும் பார்க்க