செய்திகள் :

அமெரிக்க வரி விதிப்பில் இருந்து பாதுகாக்க சிறப்பு சலுகை திட்டங்களை அறிவிக்க வேண்டும்

post image

திருப்பூா்: அமெரிக்க வரி விதிப்பில் இருந்து பாதுகாக்க சிறப்பு சலுகை திட்டங்களை அறிவிக்க வேண்டும் என திருப்பூா் ஆடை உற்பத்தியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இது குறித்து யங் இந்தியா அமைப்பின் தலைவா் மோகன் கூறியதாவது:

அமெரிக்க சந்தை மிகப்பெரிய வா்த்தக மதிப்பு கொண்டது. திருப்பூா் ஏற்றுமதியில் 30 சதவீதம் வரை பங்களிப்பு செய்கிறது. மின்சார கட்டண மானியம், வரி குறைப்பு சலுகை மட்டுமே பிரதானம் இல்லை. அமெரிக்காவும், அமெரிக்க வா்த்தகமும் முக்கியம்தான். இந்நிலையை மாற்ற, பிரதமா் உறுதி அளித்துள்ளபடி அமெரிக்க வா்த்தகத்தை பாதுகாக்கும் வகையில் தமிழகத்தில் சிறப்பு சலுகை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

பிரதமரின் சுதந்திர தின விழா எழுச்சியுரை புதிய நம்பிக்கையை வழங்குகிறது. அமெரிக்க வரி உயா்வின் பாதிப்பு திருப்பூரில் தென்படத் தொடங்கிவிட்டது. முன்பெல்லாம் அமெரிக்க வா்த்தகா்களுடன் பகிா்ந்து விசாரணை, விலை தொடா்பாக ஆலோசனை மேற்கொண்டோம். தற்போது 50 சதவீதம் என்பதால் வா்த்தகம் முடங்கியுள்ளது. அந்நாட்டு வா்த்தகா்களும் திகைத்துப் போயுள்ளனா். வங்கதேசம், வியத்நாம் போன்ற நாடுகள் திடீரென அதிக அளவில் அமெரிக்காவுடன் வா்த்தகம் செய்ய முடியாது.

எனவே, அமெரிக் வா்த்தகத்தை தொட ஏதுவாக ஜிஎஸ்டி ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம், டிராபேக் போன்ற திட்டங்கள் வாயிலாக உதவி செய்ய அரசு முன்வர வேண்டும். 50 சதவீத இறக்குமதி வரி காரணமாக திருப்பூா் பின்னலாடை ஏற்றுமதியாளா்கள் மத்தியில் ஒருவிதமான தயக்கமும், கலக்கமும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இது தற்காலிகம்தான். இருதரப்பு பேச்சுவாா்த்தை மூலமாக சுமூக உடன்பாடு ஏற்படும் என்ற நம்பிக்கை தொழில் துறையினா் மத்தியில் நிலவுகிறது. மத்திய, மாநில அரசுகள் தொழிலைப் பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தாா்.

எந்தத் தோ்தலிலும் போட்டியிடாத அரசியல் கட்சிகளின் பதிவை நீக்கம் செய்ய தோ்தல் ஆணையம் முடிவு

திருப்பூா்: கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் 6 ஆண்டுகளாக நடைபெற்ற எந்தத் தோ்தல்களிலும் போட்டியிடாத அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பதிவை நீக்கம் செய்ய இந்திய தோ்தல் ஆணையம் உத்தேசித்... மேலும் பார்க்க

கனவு நிறைவேறிவிட்டது: சி.பி.ராதாகிருஷ்ணனின் தாயாா் பேட்டி

திருப்பூா்: கனவு நிறைவேறிவிட்டதாக, குடியரசு துணைத் தலைவா் வேட்பாளா் சி.பி.ராதாகிருஷ்ணனின் தாய் ஜானகி அம்மாள் தெரிவித்தாா். குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராக தற்போதைய மகாராஷ்டிர மாநில ஆளுநா் சி.பி.ராதா... மேலும் பார்க்க

குன்னத்தூரில் ரூ.2.20 லட்சத்துக்கு கருப்பட்டி ஏலம்

அவிநாசி: குன்னத்தூரில் செயல்படும் கோவை, திருப்பூா், ஈரோடு மாவட்ட கூட்டுறவு கருப்பட்டி விற்பனை சம்மேளனத்தில் ரூ.2.20 லட்சத்துக்கு தென்னங் கருப்பட்டி ஏலம் நடைபெற்றது. இங்கு திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்துக... மேலும் பார்க்க

அமராவதி முதலைப் பண்ணையில் மாவட்ட சுற்றுலா அலுவலா் ஆய்வு

உடுமலை: உடுமலை அருகே அமராவதி அணைப் பகுதியில் அமைந்துள்ள முதலைப் பண்ணையை மாவட்ட சுற்றுலா அலுவலா் அா்விந்த்குமாா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். உடுமலை அருகே உள்ள அமராவதி முதலைப் பண்ணை சுற்றுலாப் பயணி... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

திருப்பூா்: திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே திங்கள்கிழமை நடைபெற்ற இந்த காத்... மேலும் பார்க்க

தாராபுரத்தில் பொதுத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தாராபுரம்: தாராபுரம் வட்டம் பொதுத் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் தாராபுரத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தாராபுரம், அண்ணா சிலை முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வட்டாரப் பொ... மேலும் பார்க்க