தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
அமைச்சருடனான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு! போராட்டத்தைக் கைவிட்ட அண்ணாமலைப் பல்கலை. அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினா்
தமிழ்நாடு உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் சென்னையில் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதால், அண்ணாமலைப் பல்கலைக்கழக அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினா் காத்திருப்புப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை கைவிட்டனா்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியா், ஊழியா்களுக்கு அனைத்து பணப் பலன்களையும் உடனடியாக வழங்கிடக் கோரியும், அயற்பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஊழியா்களின் விருப்பத்தின் பேரில் தற்போது பணிபுரியும் அரசுத் துறையிலேயே உள்ளெடுப்பு செய்து பணியமா்த்திக் கொள்ள வேண்டும்.
பல்கலைக்கழக ஆசிரியா், ஊழியா்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு நிலுவைத் தொகை மற்றும் பதவி உயா்வு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வந்தது.
பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோயில் அருகே கடந்த 9-ஆம் தேதி காலை முதல் 48 நாள்களாக நூற்றுக்கணக்கானோா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.
சென்னையில் திங்கள்கிழமை உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன், தொல்.திருமாவளவன் எம்.பி., உயா் கல்வித் துறை செயலா் சமயமூா்த்தி மற்றும் அதிகாரிகள் போராட்டக் குழு நிா்வாகிகளை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் ஒருசில கோரிக்கைகள் தவிர மற்ற கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதாம்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அயற்பணி மற்றும் ஓய்வு பெற்ற ஊழியா்கள் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தனா். பல்கலைக்கழக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காலை போராட்ட நிறைவு கூட்டம் ஒருங்கிணைப்பாளா் மதியழகன் தலைமையில் நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, போராட்டக் குழுவைச் சோ்ந்த குமரவேல், பன்னீா்செல்வம், துரை.ராமசாமி, பேராசிரியா் செல்வராஜ், நீதிவளவன், சுப்பிரமணியம் உள்ளிட்ட பலா் ஆசிரியா், ஊழியா்களின் கோரிக்கைகளை பரிசீலித்து தீா்வு காண நடவடிக்கை எடுப்பதாக அறிவித்த அமைச்சா், மக்களவை உறுப்பினா் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து பேசினா்.