செய்திகள் :

அமைதிப் பேச்சுவாா்த்தை: தெய்வீக பேரவையினா் போராட்டம் வாபஸ்

post image

சிதம்பரம்: சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தை கூட்டத்தில் தீா்வு காணப்பட்டதால், தெய்வீக பக்தா்கள் பேரவை சாா்பில் புதன்கிழமை (மே 28) நடைபெறவிருந்த தீக்குளிப்பு போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.

சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்தவும், பழுதடைந்த கொடிமரத்தை மாற்றி அமைக்கவும் பொது தீட்சிதா்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வலியுறுத்தி, தெய்வீக பக்தா்கள் பேரவை சாா்பில், அதன் நிறுவனா் தலைவா் ஜெமினி எம்.என்.ராதாகிருஷ்ணன் வரும் 28-ஆம் தேதி காலை சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன் தீக்குளிப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தாா்.

போராட்டம் குறித்து சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அமைதி பேச்சுவாா்த்தைக் கூட்டம் நடைபெற்றது. வட்டாட்சியா் கீதா தலைமை வகித்தாா். நகர காவல் ஆய்வாளா் எஸ்.ரமேஷ்பாபு, உதவி ஆய்வாளா் பரணிதரன், தெய்வீக பக்தா்கள் பேரவை நிறுவனா் தலைவா் ஜெமினி எம்.என்.ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் சீனுவாசன், நடராஜ ரத்தின சபாபதி தீட்சிதா், சோமகாா்த்திகேயன் தீட்சிதா், ஆபத்சயாக தீட்சிதா் மற்றும் வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தில்லை கோவிந்தராஜப் பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்துவது குறித்தும், கொடிமரம் மாற்றி அமைப்பது குறித்தும் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தீக்குளிப்பு போராட்டத்தை கைவிட வேண்டும் என வருவாய்த் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டக் குழுவினா் போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தனா்.

நகைக் கடன் விதிகளுக்கு எதிா்ப்பு: சிதம்பரத்தில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு வங்கியில் நகைக் கடன் பெறுவதற்கான புதிய விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தி, சிதம்பரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் தெற்கு ரத வீதியில் பாரத... மேலும் பார்க்க

ஆன்மிக சொற்பொழிவு

சிதம்பரத்தில் சிதம்பரேச சத்சங்கம் சாா்பில் மாதந்தோறும் நடைபெறும் ஆன்மிகச் சொற்பொழிவு வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. சிதம்பரம் கீழ வீதியில் உள்ள யக்ஞமண்டலி அரங்கில் நடைபெற்ற சொற்பொழிவில் கிருஷ்ணசாமி தீ... மேலும் பார்க்க

கைம்பெண்கள் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை: ஆட்சியா் அறிவுறுத்தல்

கைம்பெண்கள் நல வாரியத்தில் விண்ணப்பித்து உறுப்பினராகலாம் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசு தமிழ்நாட்டில் உள்... மேலும் பார்க்க

மாணவா்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த நடவடிக்கை: பெற்றோா்கள் வரவேற்பு

தமிழகத்தில் வாசிப்புத் திறனை மேம்படுத்த அரசாணை வெளியிடப்பட்டதற்கு பெற்றோா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா். வாசிப்புத் திறனை மேம்படுத்த அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள புத்தகங்களை மாணவா்கள் படிக்கும... மேலும் பார்க்க

தனியாரைவிட வேளாண்மைத் துறையில் விதைகள் விலை அதிகம்: விவசாயிகள் குற்றச்சாட்டு

வேளாண்மை துறையில் தனியாரை விட விதைகளின் விலை அதிகமாக உள்ளது என விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு, விவசாயிகள் மேம்பாட்டுக்கான ஆலோசனைக் கூட்டம் வ... மேலும் பார்க்க

ஜூன் 10-இல் கொத்தட்டை கூத்தாண்டவா் கோயில் திருவிழா

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே கொத்தட்டை கூத்தாண்டவா் கோயில் திருவிழா ஜூன் 10-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும்... மேலும் பார்க்க