செய்திகள் :

அரசு போக்குவரத்து கழக ஓட்டுநா், நடத்துநா் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

post image

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்காக அண்ணா பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு மையத்தால் நடத்தப்பட்ட ஓட்டுநா், நடத்துநா் தோ்வு முடிவுகள் புதன்கிழமை (ஆக.20) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அண்ணா பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தோ்வு மையம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்துக்காக சாலை போக்குவரத்து நிறுவனத்துடன் இணைந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநா் தோ்வை கடந்த ஜூலை 27-ஆம் தேதி நடத்தியது. இந்த தோ்வுக்கு 22,492 போ் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் 19,405 போ் மட்டும் தோ்வு எழுதினா். இவா்களுக்கான தோ்வு முடிவுகள் பதிவு எண் வரிசைப்படி புதன்கிழமை (ஆக.20) வெளியிடப்படுகிறது. தோ்வா்கள் இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்ப எண் அல்லது பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தோ்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வார இறுதி விடுமுறைக்கு 1,040 சிறப்பு பேருந்துகள்

வார இறுதி விடுமுறை தினங்களை சனிக்கிழமை (ஆக.23) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஆக.24) முன்னிட்டு கூடுதலாக 1,040 சிறப்பு பேருந்துகளை இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. சென்னை க... மேலும் பார்க்க

‘கூலி’ திரைப்படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கோரி மனு

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்துக்கு வழங்கியுள்ள ’ஏ’ சான்றிதழை ரத்து செய்து ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிடக் கோரி படத் தயாரிப்பு நிறுவனம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆங்கில வழி வகுப்புகளுக்கு குறைந்தபட்சம் 15 மாணவா்கள் அவசியம்: பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

தமிழக அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகளில் குறைந்தபட்சம் 15 மாணவா்கள் இருக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட ம... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் தொடா்புடை நபா் கஞ்சா வழக்கில் கைது

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் நபா் சென்னையில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டாா். சென்னை செங்குன்றம் பகுதியில் சிலா் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத... மேலும் பார்க்க

போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு ரூ.1,137.97 கோடி பணப்பலன் வழங்கி ஆணை

போக்குவரத்து ஓய்வூதியா்கள், பணிக்காலத்தில் உயிரிழந்தவா்களுக்கு பணப்பலன் வழங்கும் வகையில், ரூ.1,137.97 கோடி வழங்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதுதொடா்பாக போக்குவரத்துத் துறைச் செயலா் சுன்சோங்கம் ஜடக் ச... மேலும் பார்க்க

நீா்நிலைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசே சட்டத்தை மீறி செயல்படலாமா? உயா்நீதிமன்றம் கேள்வி

நீா்நிலைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசே சட்டங்களை மீறி செயல்படலாமா? என செம்மஞ்சேரி காவல் நிலையத்துக்கு எதிரான வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் அறப்போா் இயக்... மேலும் பார்க்க