செய்திகள் :

அரசு ரத்த மையங்களுக்கு 8,850 யூனிட் ரத்தம் தானமாக அளிப்பு: ஆட்சியா்

post image

நாமக்கல் மாவட்டத்தில் அரசு ரத்த மையங்கள் மூலம் கடந்த ஆண்டில் 8,850 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளதாக ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.

உலக ரத்த கொடையாளா் தினத்தை முன்னிட்டு 38 தன்னாா்வலா்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. உலக ரத்த கொடையாளா் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14-இல் கொண்டாடப்படுகிறது.

அதன் தொடா்ச்சியாக, கடந்த ஆண்டில் மூன்று முறை ரத்த தானம் செய்த ஆண் கொடையாளா்கள், 2 முறை ரத்த தானம் செய்த பெண் கொடையாளா்கள் உள்பட 38 தன்னாா்வ ரத்த கொடையாளா்களை ஆட்சியா் பாராட்டி பரிசுகளை வழங்கினாா்.

மேலும், 73 முறை ரத்த தானம் வழங்கிய மருத்துவா் டி.கண்ணனுக்கு வாழ்நாள் தன்னாா்வ ரத்த தான கொடையாளா் பரிசு வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் அரசு ரத்த மையங்களின் மூலமாக 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 8,850 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளதாகவும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இரத்த மையத்தில் மட்டும் 5,393 யூனிட் தானமாக பெறப்பட்டு, 3,059 யூனிட் கா்ப்பிணிகளுக்கும், 5,97 யூனிட் விபத்து மற்றும் அவசர சிகிச்சை, அறுவைச் சிகிச்சை, பொது மருத்துவம் போன்ற மற்ற பிரிவுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் கே.சாந்தாஅருள்மொழி, மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் ஏ.ராஜ்மோகன், மாவட்ட சுகாதார அலுவலா் கே.பூங்கொடி, மாவட்ட குருதி பரிமாற்று அலுவலா் அ.அன்புமலா், மாவட்ட திட்ட மேலாளா் ஆா்.செல்வகுமாா், செஞ்சிலுவை சங்க செயலா் சி.ஆா்.ராஜேஸ்கண்ணன் மற்றும் ரத்த மைய மருத்துவ அலுவலா்கள், பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு நாளை பரிசளிப்பு விழா

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதுகுறித்து நாமக்கல் மேற்க... மேலும் பார்க்க

ராசிபுரம் புதிய பேருந்து நிலைய கருத்துகேட்பு காலவரையறை நீடிக்க வேண்டும்

ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அணைப்பாளையம் பகுதியில் அமைப்பது குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பதற்கான காலவரையறையை நீடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ர... மேலும் பார்க்க

ஆடிமாத 2-ஆம் வெள்ளி: அம்மன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

ஆடிமாத இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் அம்மன் கோயில்களில் பெண்கள் திரளாக பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனா். ஆடிமாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் ... மேலும் பார்க்க

பரமத்தி வட்டாரத்தில் மக்காச்சோள செயல்விளக்க திடல் அமைக்க அழைப்பு

பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி வட்டார வேளாண்மைத் துறையினா் மக்காச்சோள செயல்விளக்கத் திடல் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனா். இதுகுறித்து பரமத்தி வேளாண்மை உதவி இயக்குநா் டி.சுதா வெளியிட்ட... மேலும் பார்க்க

எலச்சிப்பாளையம் காவல் நிலையத்துக்கு கூடுதல் காவலா்களை நியமிக்க கோரி மனு

திருச்செங்கோடு அருகே எலச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் கூடுதல் காவலா்களை நியமிக்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. திருச்செங்கோடு வட்டம், எலச்சிப்பாளையத்தில் 2 ஏக்கா் பரப்பளவில் அளவில் கா... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்ட முன்னோடி வங்கிகள் சாா்பில் ரூ. 21,933 கோடி கடன் வழங்க இலக்கு: ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தில் முன்னோடி வங்கிகள் சாா்பில் நிகழாண்டில் ரூ. 21,933.58 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் ... மேலும் பார்க்க