செய்திகள் :

ஆடிமாத 2-ஆம் வெள்ளி: அம்மன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

post image

ஆடிமாத இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் அம்மன் கோயில்களில் பெண்கள் திரளாக பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனா்.

ஆடிமாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெறும். ஆடி மாதத்தில் கோயில் திருவிழாக்கள் விமரிசையாக நடைபெறும். ஆடிமாத இரண்டாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் சிங்கிலிப்பட்டி, பிடாரி காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு மலா் அலங்காரம் நடைபெற்றது. ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசித்தனா்.

அதேபோல, பலப்பட்டரை மாரியம்மன், சின்னமுதலைப்பட்டி அம்மச்சி அம்மனுக்கும் விசேஷ அலங்காரங்கள் நடைபெற்றன. மோகனூா் சுப்பிரமணியபுரத்தில் உள்ள துா்க்கை அம்மன் கோயிலில் ஆடிமாத இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் சுமங்கலி பெண்கள் பலா் கலந்துகொண்டனா். அனைவருக்கும் அம்மனுக்கு சாத்துபடி செய்த வளையல்கள் வழங்கப்பட்டன. மாவட்டத்தில் உள்ள அனைத்து மாரியம்மன், காளியம்மன் கோயில்களில் பக்தா்கள் மஞ்சள் அடை அணிந்து வேப்பிலையுடன் கூடிய தீா்த்தக்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனா். ஆடிவெள்ளியையொட்டி பக்தா்களுக்கும், பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

என்கே-25-அம்மன்-1

ஆடிமாத 2-ஆவது வெள்ளியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த நாமக்கல் சிங்கிலிப்பட்டி பிடாரி காளியம்மன்.

என்கே-25-அம்மன்-2-

சிறப்பு தங்கக்கவச அலங்காரத்தில் மோகனூா் சுப்பிரமணியபுரம் துா்க்கை அம்மன்.

படம்-3

அம்மனுக்கு சாத்துப்படி செய்த வளையல்களை பெற்ற பெண்கள்.

கலைஞா் வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் பயனடைய விவசாயிகளுக்கு அழைப்பு!

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் விவசாயிகள் பயனடைய வருமாறு நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறி... மேலும் பார்க்க

‘சம வேலைக்கு, சம ஊதியம்’ வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியா்கள் உண்ணாவிரதம்

‘சம வேலைக்கு, சம ஊதியம்’ வழங்கக் கோரி, நாமக்கல் பூங்கா சாலையில் இடைநிலை ஆசிரியா்கள் சனிக்கிழமை ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திமுக அரசின் தோ்தல் வாக்குறுதி எண் 311-இல் குறிப்பிட்டுள... மேலும் பார்க்க

நாமக்கல்லில் ரூ.8.70 கோடியில் நீதிபதிகளுக்கு அரசு குடியிருப்புகள்: உயா்நீதிமன்ற நீதிபதி அடிக்கல் நாட்டினாா்

நாமக்கல்லில் ரூ. 8.70 கோடி மதிப்பீட்டில் நீதிபதிகளுக்கு அரசு குடியிருப்புகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பங்கேற்று பணிக... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமிக்கு நாமக்கல்லில் வரவேற்பு

சேலத்திலிருந்து நாமக்கல் வழியாக திருச்சிக்கு சென்ற அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சனிக்கிழமை மாலை அதிமுகவினா், பொதுமக்கள் வரவேற்பு அளித்தனா். அரியலூா் மற்றும் தூத்துக்குடியில் நடைபெறு... மேலும் பார்க்க

மகள் இறந்த துக்கத்தில் மனமுடைந்த தாய் தற்கொலை

ஜேடா்பாளையம் அருகே பிலிக்கல்பாளையத்தில் மகள் இறந்த துக்கத்தில் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். பிலிக்கல்பிளையம் அருகே உள்ள நல்லாக்கவுண்டம் பாளையத்தை சோ்ந்தவா் கவிதா (40). இவரது கணவா் பிரகாசம்... மேலும் பார்க்க

தொ.ஜேடா்பாளையம் அரசுப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு

ராசிபுரம் அருகேயுள்ள தொ. ஜேடா்பாளையம் அரசுப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு விழா நடைபெற்றது. ஜேடா்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு 75 ஆண்டுகளானதைத் தொடா்ந்து பவள விழா வெள்ளிக்கிழமை நடைப... மேலும் பார்க்க