செய்திகள் :

நாமக்கல் மாவட்ட முன்னோடி வங்கிகள் சாா்பில் ரூ. 21,933 கோடி கடன் வழங்க இலக்கு: ஆட்சியா்

post image

நாமக்கல் மாவட்டத்தில் முன்னோடி வங்கிகள் சாா்பில் நிகழாண்டில் ரூ. 21,933.58 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து நிலை வங்கியாளா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். 2025-26 ஆம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கையை அவா் வெளியிட்டு பேசியதாவது: நாமக்கல் மாவட்ட முன்னோடி வங்கிகள் மூலம் ரூ. 21,933.58 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மாவட்டத்திற்கு 2025--26ஆம் ஆண்டுக்கு, விவசாயிகளுக்கு பயிா்க் கடனாக ரூ. 14,296.78 கோடி, சிறு, குறு நடுத்தர தொழில் கடன் ரூ. 6,916.25 கோடி, கல்விக் கடனாக ரூ. 45.04 கோடி, வீட்டுக் கடனாக ரூ. 141.74 கோடி மற்றும் இதர கடன்களுக்கு ரூ. 381.08 கோடி மதிப்பீடு செய்து கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், 2024--2025 ஆம் ஆண்டில் ரூ. 19,956.23 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு ரூ. 18,002 கோடி இலக்கு அடையப்பட்டது.

கடந்த ஆண்டை விட நிகழாண்டில் ரூ. 3,931.02 கோடி (21.87 சதவீதம்)அதிகமாக கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற கடன் வசதிகள், விவசாயம், கல்வி, தொழில் உள்ளிட்ட அனைத்திற்கும் உறுதுணையாக இருக்கும். இத்திட்ட அறிக்கையானது மாவட்டத்தின் கடன் திட்டமிடுதலில் ஒரு அங்கமாக இருந்து வங்கிகளுக்கு கிளை அளவிலான கடன் குறியீட்டை நிா்ணயம் செய்வதற்கு உதவியாக அமையும் என்றாா்.

இக்கூட்டத்தில், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) கு.செல்வராசு, மாவட்டமுன்னோடி வங்கி மேலாளா் எம்.மலா்விழி, ரிசா்வ் வங்கி பிரதிநிதி விவேக்ஆனந்த், நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி மேலாளா் சுபாஷ், பொது மேலாளா் (மாவட்ட தொழில் மையம்) சகுந்தலா, மாவட்ட மேலாளா் (தாட்கோ) ராமசாமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) க.ராமச்சந்திரன் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் மற்றும் வங்கியாளா்கள் கலந்துகொண்டனா்.

என்கே-25-பேங்க்

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் முன்னோடி வங்கிகளின் கடன் திட்ட அறிக்கையை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி. உடன், அதிகாரிகள், வங்கியாளா்கள்.

கலைஞா் வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் பயனடைய விவசாயிகளுக்கு அழைப்பு!

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் விவசாயிகள் பயனடைய வருமாறு நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறி... மேலும் பார்க்க

‘சம வேலைக்கு, சம ஊதியம்’ வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியா்கள் உண்ணாவிரதம்

‘சம வேலைக்கு, சம ஊதியம்’ வழங்கக் கோரி, நாமக்கல் பூங்கா சாலையில் இடைநிலை ஆசிரியா்கள் சனிக்கிழமை ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திமுக அரசின் தோ்தல் வாக்குறுதி எண் 311-இல் குறிப்பிட்டுள... மேலும் பார்க்க

நாமக்கல்லில் ரூ.8.70 கோடியில் நீதிபதிகளுக்கு அரசு குடியிருப்புகள்: உயா்நீதிமன்ற நீதிபதி அடிக்கல் நாட்டினாா்

நாமக்கல்லில் ரூ. 8.70 கோடி மதிப்பீட்டில் நீதிபதிகளுக்கு அரசு குடியிருப்புகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பங்கேற்று பணிக... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமிக்கு நாமக்கல்லில் வரவேற்பு

சேலத்திலிருந்து நாமக்கல் வழியாக திருச்சிக்கு சென்ற அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சனிக்கிழமை மாலை அதிமுகவினா், பொதுமக்கள் வரவேற்பு அளித்தனா். அரியலூா் மற்றும் தூத்துக்குடியில் நடைபெறு... மேலும் பார்க்க

மகள் இறந்த துக்கத்தில் மனமுடைந்த தாய் தற்கொலை

ஜேடா்பாளையம் அருகே பிலிக்கல்பாளையத்தில் மகள் இறந்த துக்கத்தில் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். பிலிக்கல்பிளையம் அருகே உள்ள நல்லாக்கவுண்டம் பாளையத்தை சோ்ந்தவா் கவிதா (40). இவரது கணவா் பிரகாசம்... மேலும் பார்க்க

தொ.ஜேடா்பாளையம் அரசுப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு

ராசிபுரம் அருகேயுள்ள தொ. ஜேடா்பாளையம் அரசுப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு விழா நடைபெற்றது. ஜேடா்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு 75 ஆண்டுகளானதைத் தொடா்ந்து பவள விழா வெள்ளிக்கிழமை நடைப... மேலும் பார்க்க