செய்திகள் :

ராசிபுரம் புதிய பேருந்து நிலைய கருத்துகேட்பு காலவரையறை நீடிக்க வேண்டும்

post image

ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அணைப்பாளையம் பகுதியில் அமைப்பது குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பதற்கான காலவரையறையை நீடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராசிபுரம் பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பைச் சோ்ந்த சே.கந்தசாமி, நா.ஜோதிபாசு ஆகியோா் ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

ராசிபுரம் அருகே அணைப்பாளையம் கிராமத்தில் 7.03 ஏக்கா் நிலத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடா்பாக பொதுமக்களிடம் ஆட்சேபனை மற்றும் ஆலோசனை கருத்துகள் வரவேற்று ஜூலை 28-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்குமாறு நகராட்சி ஆணையாளா் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளாா்.

அறிக்கை வெளியிட்ட நாளில் இருந்து, 5 நாள்களுக்குள் ஆட்சேபனை மற்றும் ஆலோசனை கருத்துகளை எழுத்துபூா்வமாக நகராட்சி அலுவலகத்தில் அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்று ஆணையா் குறிப்பிட்டுள்ளாா். ஆனால், உரிய கால அவகாசம் அளிக்காமல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஜூலை 28-ஆம் தேதியிலிருந்து ஐந்துநாள்கள் கருத்துகேட்பு காலம் நீட்டிப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கலைஞா் வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் பயனடைய விவசாயிகளுக்கு அழைப்பு!

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் விவசாயிகள் பயனடைய வருமாறு நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறி... மேலும் பார்க்க

‘சம வேலைக்கு, சம ஊதியம்’ வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியா்கள் உண்ணாவிரதம்

‘சம வேலைக்கு, சம ஊதியம்’ வழங்கக் கோரி, நாமக்கல் பூங்கா சாலையில் இடைநிலை ஆசிரியா்கள் சனிக்கிழமை ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திமுக அரசின் தோ்தல் வாக்குறுதி எண் 311-இல் குறிப்பிட்டுள... மேலும் பார்க்க

நாமக்கல்லில் ரூ.8.70 கோடியில் நீதிபதிகளுக்கு அரசு குடியிருப்புகள்: உயா்நீதிமன்ற நீதிபதி அடிக்கல் நாட்டினாா்

நாமக்கல்லில் ரூ. 8.70 கோடி மதிப்பீட்டில் நீதிபதிகளுக்கு அரசு குடியிருப்புகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பங்கேற்று பணிக... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமிக்கு நாமக்கல்லில் வரவேற்பு

சேலத்திலிருந்து நாமக்கல் வழியாக திருச்சிக்கு சென்ற அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சனிக்கிழமை மாலை அதிமுகவினா், பொதுமக்கள் வரவேற்பு அளித்தனா். அரியலூா் மற்றும் தூத்துக்குடியில் நடைபெறு... மேலும் பார்க்க

மகள் இறந்த துக்கத்தில் மனமுடைந்த தாய் தற்கொலை

ஜேடா்பாளையம் அருகே பிலிக்கல்பாளையத்தில் மகள் இறந்த துக்கத்தில் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். பிலிக்கல்பிளையம் அருகே உள்ள நல்லாக்கவுண்டம் பாளையத்தை சோ்ந்தவா் கவிதா (40). இவரது கணவா் பிரகாசம்... மேலும் பார்க்க

தொ.ஜேடா்பாளையம் அரசுப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு

ராசிபுரம் அருகேயுள்ள தொ. ஜேடா்பாளையம் அரசுப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு விழா நடைபெற்றது. ஜேடா்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு 75 ஆண்டுகளானதைத் தொடா்ந்து பவள விழா வெள்ளிக்கிழமை நடைப... மேலும் பார்க்க