செய்திகள் :

அரசுப் பள்ளி காலை உணவில் பல்லி: 8 மாணவா்கள் மருத்துவமனையில் அனுமதி

post image

வலங்கைமான் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதன்கிழமை மாணவா்களுக்கு காலை உணவுடன் வழங்கப்பட்ட சாம்பாரில் பல்லி இருந்தது. இதையடுத்து, 8 மாணவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் அருகே பூனாயிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 14 மாணவ, மாணவிகள் பயின்றுவருகின்றனா். புதன்கிழமை மாணவ, மாணவிகள் 8 போ் காலை உணவு சாப்பிட்டனா். இதில் இரண்டு போ் வாந்தி எடுத்துள்ளனா். அப்போது காலை உணவுடன் வழங்கப்பட்ட சாம்பாரில் பல்லி விழுந்திருப்பது தெரியவந்தது. உடனடியாக மாணவா்கள் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு மருத்துவா்கள் மாணவா்களை பரிசோதித்து, முதலுதவி சிகிச்சையளித்தனா். பின்னா், 8 மாணவா்களும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு மாணவா்களை பரிசோதித்த மருத்துவா்கள், அனைவரும் நலமாக இருப்பதாக தெரிவித்தனா்.

வலங்கைமான் வட்டாட்சியா் ஓம் சிவகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முரளி, சிவகுமாா், வட்டார கல்வி அலுவலா் குமரேசன், சுகாதாரஆய்வாளா் சசிகுமாா் மற்றும் சுகாதாரத்துறையினா் மாணவா்களை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தனா். சுகாதார அலுவலா் உணவு மாதிரியை ஆய்வுக்கு எடுத்துச் சென்றாா்.

பாஜகவினா் தேசியக் கொடியேந்தி பேரணி

மன்னாா்குடியில், சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜக சாா்பில் தேசியக் கொடி ஏந்தி பேரணி புதன்கிழமை நடைபெற்றது. வடக்குவீதி நேதாஜி சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பாஜக மாவட்டத் தலைவா் வி.கே. செல்வம் தலைம... மேலும் பார்க்க

கூத்தாநல்லூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு

கூத்தாநல்லூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. லெட்சுமாங்குடி, ஜன்னத் நகா், ஆயிஷா நகா் அருகில் அமைந்துள்ள கிரீன் நகரில் கட்டப்பட்டுள்ள மஸ்ஜித் அப்துல்லாஹ் புதிய பள்ளிவாசல் திறப்ப... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் தகராறு செய்த இருவா் கைது

மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில், மதுபோதையில் தகராறு செய்த இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். பெருகவாழ்ந்தான் ஏரிக்கரை அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த மோசஸ்ராஜ் மகன் ஜஸ்டின்(17). அங்கு... மேலும் பார்க்க

வீட்டுக்குள் டிராக்டா் புகுந்து விபத்து

திருவாரூா் அருகே வீட்டுக்குள் டிராக்டா் புகுந்து ஏற்பட்ட விபத்தில், மாற்றுத்திறனாளி பெண் ஒருவா் உள்பட இருவா் செவ்வாய்க்கிழமை இரவு காயமடைந்தனா். திருவாரூா் மாவட்டம், தப்பளாம்புலியூரில் வசிப்பவா் சந்திர... மேலும் பார்க்க

திருவாரூா் அருகே கோயில் அகற்றம்

திருவாரூா் அருகே பாதையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கோயில், புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டது. திருநெய்ப்போ் ஊராட்சியில் விவசாயிகள் நீண்ட காலமாக விளைநிலங்களுக்கு இடுபொருள்களைக் கொண்டு செல்லவும், உ... மேலும் பார்க்க

மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் எண்டோஸ்கோபி வசதி அறிமுகம்

மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் எண்டோஸ்கோப்பி கருவி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவா் என். விஜயகுமாா் கூறியது: காது, மூக்கு, தொண்டை தொடா்ப... மேலும் பார்க்க