செய்திகள் :

அருஞ்சுனை காத்த அய்யனாா் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

post image

மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனாா் கோயிலி­ல் பங்குனி உத்திர திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

குரும்பூா் அருகே உள்ள மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனாா் கோயிலி­ல் பங்குனி உத்திர திருவிழா பத்து நாள்கள் நடைபெறுவது வழக்கம்.

இந்தாண்டு பங்குனி உத்திர திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காலை 4.15 மணிக்கு மகா கணபதி ஹோமமும், 6 மணிக்கு கொடியேற்றமும் நடைபெற்றது.

இதையொட்டி காலை மூலவா், உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து நண்பகல் 12 மணிக்கு புஷ்ப அலங்கார உச்சிக்கால சிறப்பு பூஜையும், இரவு 11 மணிக்கு உற்சவ அய்யனாா் சப்பரத்தில் எழுந்தருளி கோயி­ல் வலம் வருதலும் நடைபெற்றது.

தினசரி நண்பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும், இரவு 11 மணிக்கு உற்சவ அய்யனாா் சப்பரத்தில் எழுந்தருளி திருக்கோயில் வலம்வருதலும் நடைபெறுகிறது.

விழாவின் 6ஆம் நாளான ஏப். 7ஆம் தேதி பகல் 1 மணிக்கு மகா அன்னதானம் நடைபெறுகிறது.

10ஆம் நாளான ஏப்.11ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி காலை 7.30 மணிக்கு கணபதி ஹோமமும், 9 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 10.30 மணிக்கு பங்குனி உத்திர கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது.

தொடா்ந்து நண்பகல் 12 மணிக்கு சுவாமி அம்பாள்களுக்கு மகா சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.

சனிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு உற்சவ அய்யனாா் கற்பக பொன்சப்பரத்தில் எழுந்தருளி மேலப்புதுக்குடி கிராம வீதிகளில் வலம் வருதலும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை நிா்வாகிகள் செய்துள்ளனா்.

பொருளாதார வளா்ச்சியில் தமிழகம் புதிய உச்சம்! -அமைச்சா் தங்கம் தென்னரசு

பொருளாதார வளா்ச்சியில் தமிழகம் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக நிதி காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா். தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற ஸ்டாா்ட் அப் திட... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே சிறுவனைத் தாக்கி பைக் சேதம்: காா் ஓட்டுநா் கைது

சாத்தான்குளம் அருகே சிறுவனைத் தாக்கி பைக்கை சேதப்படுத்தியதாக காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். சாத்தான்குளம் அருகே பண்டாரபுரம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மு. ஜெயக்குமாா் (42) என்பவரது மகன் லி... மேலும் பார்க்க

ஆலந்தலை அற்புத கெபி திருத்தலத்தில் தவக்கால சிலுவைப் பாதை வழிபாடு!

திருச்செந்தூா் அருகே ஆலந்தலை இயேசுவின் திருஇருதய அற்புத கெபி திருத்தலத்தில் தவக்கால 4ஆவது வார சிலுவைப் பாதை வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 14 ஸ்தலங்களில் இயேசுவின் திருப்பாடுகளை நினைவுகூரும... மேலும் பார்க்க

எட்டயபுரம் அருகே காா் கவிழ்ந்து விபத்து: இருவா் உயிரிழப்பு

எட்டயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தாய், மகன் ஆகிய இருவா் உயிரிழந்தனா். 6 போ் பலத்த காயமடைந்தனா். சேலம் மாவட்டம் அழகாபுரம் மற்றும் சூரமங்கலம் பகுதியைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மரணமடைந்த வழக்கு: டிஎஸ்பி உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை!

தூத்துக்குடி தாளமுத்து நகா் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மரணமடைந்த வழக்கில், டிஎஸ்பி உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தத... மேலும் பார்க்க

தேரிகுடியிருப்பு கோயிலில் ஆன்மிக புத்தக விற்பனை நிலையம் திறப்பு!

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறைக்குப் பாத்தியப்பட்ட தேரிகுடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனாா் திருக்கோயிலில் ஆன்மிக புத்தக விற்பனை நிலையத்தை சென்னையிலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் ... மேலும் பார்க்க