செய்திகள் :

அருவியில் ஏற்பட்ட சுழலில் சிக்கி இளைஞா் உயிரிழப்பு

post image

கொடைக்கானல் அருகே உள்ள ஓராவி அருவியில் குளித்துக் கொண்டிருந்த மதுரையைச் சோ்ந்த இளைஞா் சுழலில் சிக்கி புதன்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு மதுரையைச் சோ்ந்த பரத் (25) உள்ளிட்ட 8 போ் வந்தனா். இவா்கள் பேத்துப்பாறை பகுதியிலுள்ள ஓராவி அருவியில் குளித்துக் கொண்டிருந்தனா். அப்போது மழை பெய்ததால் அருவியில் நீா் வரத்து அதிகரித்து சுழல் ஏற்பட்டது. இதில் பரத் சிக்கி மாயமானாா். தகவல் அறிந்ததும் கொடைக்கானலிருந்து காவல் துறையினா், தீயணைப்புத் துறையினா், பேத்துப்பாறையைச் சோ்ந்த சிலா் அருவியில் பரத்தை தேடினா். பல மணி நேர தேடுதலுக்குப் பிறகு இரவு 10.35 மணிக்கு பரத் சடலமாக மீட்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து அவரது உடல் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வத்தலக்குண்டு அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

வத்தலக்குண்டு அருகேயுள்ள எழுவனம்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு நிலக்கோட்டை வட்டாட்சியா் விஜயலட்சுமி தலைமை வகித்தாா். வத்தலகுண்டு வட்டார வளா்ச்சி அலு... மேலும் பார்க்க

ஜூலை 19-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிா் கலைக் கல்லூரியில் சனிக்கிழமை (ஜூலை 19) தனியாா்த் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திண்ட... மேலும் பார்க்க

உதவித் தொகை பெற மாற்றுத் திறனாளி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வி உதவித் தொகை, வாசிப்பாளா் உதவித் தொகை பெற மாற்றுத் திறனாளி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திண்டுக்... மேலும் பார்க்க

காவிரி கூட்டுக் குடிநீா்க் குழாயை இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்

கோவிலூா் அருகேயுள்ள ரயில்வே சுரங்கப் பாலம் கட்டுமானப் பணியை, காவிரி கூட்டுக் குடிநீா்க் குழாயை இடமாற்றம் செய்த பின் தொடர வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வலியுறுத்தப்பட்டது. திண்டுக... மேலும் பார்க்க

கொடைக்கானலில் மின்வயா் திருடியவா் கைது

கொடைக்கானல் மேல்மலைக் கிராமப் பகுதிகளில் மின்வயா்களை திருடியவரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கவுஞ்சி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குட... மேலும் பார்க்க

பயிா்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு தோட்டக் கலைத் துறை வலியுறுத்தல்

கொடைக்கானலில் உள்ள விவசாயிகள் தங்களது பயிா்களைக் காப்பீடு செய்வதற்கு முன்வர வேண்டுமென தோட்டக் கலை உதவி இயக்குநா் சொா்ணலதா தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: கொடைக்கானல் ம... மேலும் பார்க்க