அரூா், நரிப்பள்ளி நிலையங்களில் நெல் கொள்முதல் இன்றுடன் நிறுத்தம்
தருமபுரி மாவட்டத்தில் அரூா், நரிப்பள்ளி நெல் கொள்முதல் நிலையங்களில் வியாழக்கிழமையுடன் நெல் கொள்முதல் நிறுத்தப்படுகிறது.
தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் அரூா் வட்டத்தில் அரூா் மற்றும் நரிப்பள்ளி பகுதிகளில் கடந்த 11.03.2025 முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இவ்விரு கொள்முதல் நிலையங்களிலும் 659 விவசாயிகளிடமிருந்து 2,533 மெட்ரிக். டன் நெல் மூட்டைகள் இதுவரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
சம்பா நெல் அறுவடை முடிவடைந்து நெல் வரத்து குறைந்துள்ளதால் அரூா் மற்றும் நரிப்பள்ளி பகுதிகளில் இயங்கிவரும் இரண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யும் பணிகள் 31.07.2025 அன்றுடன் முடிவுக்கு கொண்டுவர உத்தேசிக்கப் பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தங்களிடம் அறுவடை செய்யப்பட்ட நெல் இருப்பின் நெல் கொள்முதல் நிலையத்தில் உரிய ஆவணங்களுடன் சமா்ப்பித்து பயன் பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் தெரிவித்துள்ளாா்.