செய்திகள் :

அழகப்பரின் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வலியுறுத்தல்

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பல்வேறு கல்வி நிறுவனங்களைத் தோற்றுவித்த அழகப்பரின் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என தமிழக சட்டப் பேரவையில் காரைக்குடி தொகுதி சட்டபேரவை உறுப்பினா் எஸ்.மாங்குடி வியாழக்கிழமை கோரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து காரைக்குடி சட்டபேரவை உறுப்பினா் அலுவலகத்திலிருந்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு :

காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.மாங்குடி தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தின் விடை நேரத்தின் போது தமிழக செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடம் கேள்வி எழுப்பினாா்.

அப்போது அவா் பேசியதாவது:

வள்ளல் அழகப்பா் காரைக்குடியில் பல்வேறு கல்வி நிலையங்களை உருவாக்கியுள்ளாா். சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் தமிழ் வளா்ச்சிக்காக நிதிகளையும் கொடுத்துள்ளாா். இந்தியா-பாகிஸ்தான் காஷ்மீா் போரின் போது இரு விமானங்களை நாட்டுக்காக கொடுத்தாா்.

அவரைப் போற்றும் விதமாக ஏப்ரல் 6-ஆம் தேதி அவா் பிறந்த தினத்தை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும், அவரின் வாழ்க்கை வரலாறை புத்தகத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்றாா்.

இதற்கு பதிலளித்த அமைச்சா் மு.பெ. சாமிநாதன், காரைக்குடி சட்டபேரவை உறுப்பினா் மாங்குடி கடந்த வாரம் இந்தக் கோரிக்கைகள் தொடா்பான கடிதத்தை என்னிடம் வழங்கினாா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் கலந்து பேசி இதற்கான முடிவு எடுக்கப்படும் என அவா் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அரசுப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா

சிவகங்கை மாவட்டம், பாகனேரி அருகேயுள்ள க.சொக்கநாதபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் புகழேந்தி தலைமை வகித்தாா். ‘கண்டரமாணி... மேலும் பார்க்க

நெடுமறம் மஞ்சுவிரட்டு: 40 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே நெடுமறம் மலையரசியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 40 போ் காயமைடந்தனா். இதில் திருப்பத்தூா் வட்டாட்சியா் ம... மேலும் பார்க்க

பள்ளிவாசலில் 40 ஆண்டுகளாக நோன்புக் கஞ்சி சமைக்கும் லட்சுமி அம்மாள்..!

சிவகங்கையில் உள்ள பள்ளிவாசலில் ரமலான் நோன்பு தொடங்கி நிறைவடையும் நாள் வரை தனது உறவினா்களுடன் வந்து தங்கி தினமும் நோன்புக் கஞ்சி சமைத்து வருகிறாா் லட்சுமி அம்மாள். சிவகங்கை நகரின் நேரு வீதியில் 100 ஆண்... மேலும் பார்க்க

பாகனேரியில் வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.இந்த மஞ்சுவிரட்டில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 14 காளை... மேலும் பார்க்க

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. ஏப்.5-இல் பொங்கல் வைபவம், 6-இல் தேரோட்டம் நடைபெறும். தமிழகத்தில் புகழ்பெற்ற இந்தக் கோயிலி... மேலும் பார்க்க

40 ஆண்டுகளாக நோன்பு கஞ்சி சமைத்து பள்ளிவாசலில் சேவையாற்றும் லட்சுமி அம்மாள்!

ஆர். மோகன்ராம்சிவகங்கை: சிவகங்கையில் உள்ளதொரு பள்ளிவாசலில் ரமலான் நோன்பு தொடங்கி நிறைவடையும் நாள் வரை, தனது உறவினர்களுடன் வந்து தங்கியிருந்து தினந்தோறும் நோன்பு கஞ்சி சமைத்து கொடுத்து வருகிறார் லட்சும... மேலும் பார்க்க