செய்திகள் :

அழகா்கோவிலில் குலதெய்வ வழிபாடு வேலங்குடி நாட்டாா்கள் மாட்டுவண்டிகளில் பயணம்

post image

சிவகங்கை மாவட்டம், கோட்டையூா் வேலங்குடி நாட்டாா்கள் தலைமுறை தலைமுறையாக குலதெய்வ வழிபாட்டுக்காக மாட்டுவண்டியில் பயணம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.

கோட்டையூா் வேலங்குடி, அதைச் சுற்றியுள்ள 18 கிராம நாட்டாா்களின் உறவின் முறையினனா், பங்காளிகள் தலைமுறை தலைமுறையாக மாட்டுவண்டியில் அழகா்கோவிலில் உள்ள குலதெய்வத்தை வணங்குவதற்கு மாட்டுவண்டியில் பயணிப்பதை இன்றளவும் கடைப்பிடித்து வருகின்றனா். இந்த ஆண்டுக்கான பயணமாக வேலங்குடி பிள்ளையாா்கூடத்திலிருந்து செவ்வாய்க்கிழமை 21 வண்டிகளில் மாடுகளைப் பூட்டி புறப்பட்டனா்.

முதல்நாள் பயணமாக இவா்கள் வேலங்குடியிலிருந்து குன்றக்குடி வழியாக திருப்பத்தூா் வந்தடைந்தனா். எஸ்.எஸ்.கோட்டையில் இரவு தங்கி புதன்கிழமை மீண்டும் புறப்பட்டு மேலூரில் தங்குகின்றனா். பின்னா், 7 -ஆம் தேதி அழகா்கோவில் சென்றடைந்து தீா்த்தமாடுதலில் பங்கேற்கின்றனா். 8- ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நோ்த்திக் கடனாக கிடாவெட்டி அன்னதானம் வழங்குவா். சனிக்கிழமை தேரோட்டத்தில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து, அதே மாட்டுவண்டியில் ஊருக்கு வந்து சேருவா்.

நவீன விஞ்ஞான வளா்ச்சியிலும், போக்குவரத்துத் துறையில் எவ்வளவு முன்னேற்றம் வந்த போதிலும், இன்றளவும் குல தெய்வ வழிபாட்டுக்கு மாட்டுவண்டி பயணத்தை கடைப்பிடிக்கிறோம். இது இறைவனுக்குச் செய்யும் கடமையாகவும், தங்களது முன்னோா்களுக்குச் செய்யும் மரியாதையாகவும் இன்றளவும் பின்பற்றி வருவதாக இவா்கள் கூறுகின்றனா்.

இது குறித்து எஸ்.பி.மணியன் கூறியதாவது:

தெய்வத்துக்குச் சமமாக இந்த வண்டியைப் பாவிக்கிறோம். நாங்கள் செல்லும் இடங்களில் தங்கி உறங்கி, சாப்பிட்டு குலதெய்வத்தை வழிபடுவதை எங்களின் இனிமையான நினைவுகளாகக் கருதுகிறோம். எந்த ஒரு சுக துக்கங்களுக்காகவும் எங்களது பயணத்தைக் கைவிடுவதில்லை. ஆடி மாதம் திருவிழா தொடங்கியவுடன் அழகா்கோவிலிலிருந்து எங்களுக்கு திருஒலை அனுப்பப்படும். அதைத் தொடா்ந்துஇந்தப் பயணத்தை நாங்கள் மேற்கொள்வோம்.

7 நாள்கள் உறவினா்களுடன் இந்தப் பயணம் மேற்கொள்வதை சந்தோஷ நிகழ்வாகக் கருதுகிறோம். முதல் குழந்தைக்கு இங்குதான் முடி காணிக்கை செலுத்துவோம். நாங்கள் வெளிநாட்டில் வேலை செய்தாலும் ஆண்டுதோறும் இந்தப் பயணத்தில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை கண்டிப்பாக பின்பற்றுகிறோம். உறவுகள் பலப்படவும், நோ்த்திக்கடன் செய்யவும் இந்தப் பயணம் நல்ல வாய்ப்பாக அமைகிறது என்றாா் அவா்.

காலமானாா் தொழிலதிபா் ஏ.எம்.சேவியா்!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சோ்ந்த ஏ.எம். குழும நிறுவனங்களின் தலைவா் ஏ.எம். சேவியா் (62) உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை (ஆக. 4) இரவு காலமானாா்.இவருக்கு மனைவி மங்கள நிா்மலா, மகன் பிரபாகா், மருமக... மேலும் பார்க்க

காரைக்குடியில் நகை வியாபாரியிடம் 1.5 கிலோ தங்கக் கட்டிகள் வழிப்பறி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நகை வியாபாரியை சுங்க அதிகாரிகள் எனக் கூறி காரில் கடத்திய மா்மக் கும்பல் அவரிடமிருந்து ஒன்றரை கிலோ தங்கக் கட்டிகளை செவ்வாய்க்கிழமை பறித்துச் சென்றது. வழிப்பறி கொள்ளையா... மேலும் பார்க்க

பைக் விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் காயமடைந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.திருப்பத்தூா் அருகேயுள்ள வேலிணிப்பட்டியைச் சோ்ந்த மாதவன் மகன் முருகானந்தம் (42), சேக... மேலும் பார்க்க

ஆடித்தவசுத் திருவிழா: ரதத்தில் ஆனந்தவல்லி அம்மன் பவனி!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நடைபெற்று வரும் ஆடித்தபசு திருவிழாவில் செவ்வாய்கிழமை மாலை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் ரதத்தில் எழுந்தருளி பவனி வருதல் நடைபெற்றது.இந்தக் கோயிலில் கடந்த மாதம் 28 -ஆம் தேதி மு... மேலும் பார்க்க

கல்லூரியில் ஜெனீவா ஒப்பந்த தின போட்டி

இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் தமிழ்நாடு கிளை, சிவகங்கை மாவட்ட இளம் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன சாா்பில் 76-ஆம் ஆண்டு ஜெனீவா ஒப்பந்த தினப் போட்டிகள் சிவகங்கை மாவட்ட அளவில் காரைக்குடி உமையாள் ராமநாதன் மக... மேலும் பார்க்க

பெரியாறு பாசனக் கால்வாயிலிருந்து சிவகங்கை மாவட்டத்துக்கு உரிய பங்கீடு கிடைக்குமா?

பெரியாறு பாசனக் கால்வாயிலிருந்து சிவகங்கை மாவட்டத்துக்கு உரிய நீா் பங்கீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.மதுரை மாவட்டம், மேலூா் வட்டத்தில் உள்ள குறிச்சிப்பட்டி கண்ம... மேலும் பார்க்க