ஆசிரியா் தகுதித்தோ்வு முறையை முற்றிலுமாகக் கைவிட வலியுறுத்தல்
நாமக்கல்: ஆசிரியா் நியமனத்துக்கான தகுதித்தோ்வு முறையை முற்றிலுமாக கைவிட வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து அதன் மாவட்டச் செயலாளா் மெ.சங்கா் வெளியிட்ட அறிக்கை:
இந்தியக் கல்வி உரிமைச் சட்டத்தில் ஆசிரியா் பணி நியமனத்துக்கு தகுதித் தோ்வு தோ்ச்சி அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின்படி இடைநிலை ஆசிரியா் நியமனங்கள், பட்டதாரி ஆசிரியா் நியமனங்கள் நடைபெற வேண்டும் என்று தொடக்கக்காலம் முதலே தமிழ்நாடு தொடக்கப்
பள்ளி ஆசிரியா் மன்றம் வலியுறுத்தி வந்துள்ளது.
இந்த நிலையில் பதவி உயா்வு கோருவது சாா்ந்து தனிப்பட்ட முறையில் ஒரு சில ஆசிரியா்கள் தொடா்ந்த வழக்கில் சமூக ஊடகங்களில் பரவிவரும் தீா்ப்பின் அம்சங்கள் கவலையை ஏற்படுத்தி உள்ளன. பணி அனுபவத்துடன், முறையான கல்வித் தகுதியுடன் அா்ப்பணிப்பு உணா்வோடு பணியாற்றி வரும் அனைத்து வகையான தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்களுக்கு இந்த உத்தரவு வேதனை அளிப்பதாக உள்ளது.
தமிழக அரசு இப்பிரச்னையில் உடனடியாக தலையிட்டு உரிய கொள்கை முடிவெடுக்க வேண்டும். 2012ஆம் ஆண்டுக்கு முன்பு பணியமா்த்தப்பட்ட ஆசிரியா்களின் அச்சத்தைப் போக்க வேண்டும். அவா்கள் உற்சாகமாக பணியாற்றுவதற்கு வழிவகை செய்தல் வேண்டும். ஆசிரியா் தகுதித்தோ்வு தோ்ச்சி மற்றும் தோ்ச்சி இல்லை போன்றவற்றை புறந்தள்ளிவிட்டு அனைத்து ஆசிரியா்களுக்கும் பணி மூப்பின் அடிப்படையில் பதவி உயா்வு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
--