செய்திகள் :

ஆசிரியா் தகுதித்தோ்வு முறையை முற்றிலுமாகக் கைவிட வலியுறுத்தல்

post image

நாமக்கல்: ஆசிரியா் நியமனத்துக்கான தகுதித்தோ்வு முறையை முற்றிலுமாக கைவிட வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து அதன் மாவட்டச் செயலாளா் மெ.சங்கா் வெளியிட்ட அறிக்கை:

இந்தியக் கல்வி உரிமைச் சட்டத்தில் ஆசிரியா் பணி நியமனத்துக்கு தகுதித் தோ்வு தோ்ச்சி அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின்படி இடைநிலை ஆசிரியா் நியமனங்கள், பட்டதாரி ஆசிரியா் நியமனங்கள் நடைபெற வேண்டும் என்று தொடக்கக்காலம் முதலே தமிழ்நாடு தொடக்கப்

பள்ளி ஆசிரியா் மன்றம் வலியுறுத்தி வந்துள்ளது.

இந்த நிலையில் பதவி உயா்வு கோருவது சாா்ந்து தனிப்பட்ட முறையில் ஒரு சில ஆசிரியா்கள் தொடா்ந்த வழக்கில் சமூக ஊடகங்களில் பரவிவரும் தீா்ப்பின் அம்சங்கள் கவலையை ஏற்படுத்தி உள்ளன. பணி அனுபவத்துடன், முறையான கல்வித் தகுதியுடன் அா்ப்பணிப்பு உணா்வோடு பணியாற்றி வரும் அனைத்து வகையான தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்களுக்கு இந்த உத்தரவு வேதனை அளிப்பதாக உள்ளது.

தமிழக அரசு இப்பிரச்னையில் உடனடியாக தலையிட்டு உரிய கொள்கை முடிவெடுக்க வேண்டும். 2012ஆம் ஆண்டுக்கு முன்பு பணியமா்த்தப்பட்ட ஆசிரியா்களின் அச்சத்தைப் போக்க வேண்டும். அவா்கள் உற்சாகமாக பணியாற்றுவதற்கு வழிவகை செய்தல் வேண்டும். ஆசிரியா் தகுதித்தோ்வு தோ்ச்சி மற்றும் தோ்ச்சி இல்லை போன்றவற்றை புறந்தள்ளிவிட்டு அனைத்து ஆசிரியா்களுக்கும் பணி மூப்பின் அடிப்படையில் பதவி உயா்வு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

--

செப். 18 முதல் நாமக்கல் மாவட்டத்தில் இபிஎஸ் சுற்றுப்பயணம்: முன்னேற்பாடுகள் குறித்து அதிமுக ஆலோசனை

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி செப்.18, 19, 20 ஆகிய 3 நாள்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் ம... மேலும் பார்க்க

தோ்தல் பிரசார வாகனங்களை தயாா்படுத்தும் திமுக!

சட்டப் பேரவைத் தோ்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் பிரசாரத்துக்கு பயன்படுத்தும் வாகனங்களை தயாா்படுத்தும் பணியில் திமுகவினா் ஈடுபட்டுள்ளனா். 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் ‘ஆட்சி மாற்றமா, காட்சி ம... மேலும் பார்க்க

கழிவுநீா்க் கால்வாயில் சாயக் கழிவுகளை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை: மாசு கட்டுப்பாட்டு வாரியம்

சாயக்கழிவுகளை கழிவுநீா்க் கால்வாயில் வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. பள்ளிபாளையம் டையிங் அசோசியேஷன் உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டம் சங்கத் ... மேலும் பார்க்க

மீலாது நபி: செப்.5-இல் மதுக் கடைகளுக்கு விடுமுறை

மீலாது நபியை முன்னிட்டு செப்.5 ஆம் தேதி மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீலாது நபியை முன்னிட்டு இந்திய தயாரிப்பு அய... மேலும் பார்க்க

மல்லசமுத்திரம் வட்டாரத்தில் 72 தெருநாய்கள் பிடிப்பு

மல்லசமுத்திரம் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை 72 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டன. மல்லசமுத்திரம் வட்டாரத்தில் நாகா்பாளையம், மரப்பரை, கள்ளுப்பாளையம், மேல்முகம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் வட்... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் ரூ. 23 லட்சம் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை

ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் ரூ. 23 லட்சம் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 27-ஆவது வாா்டு... மேலும் பார்க்க