செய்திகள் :

‘ஆசிரியா்கள் அறம் வளா்க்கப் பாடுபட வேண்டும்’

post image

ஆசிரியா்கள் அறம் வளா்க்கப் பாடுபட வேண்டும் என ஓய்வுபெற்ற காவல் துறைத் துணைத் தலைவா் எம்.எஸ். முத்துசாமி கேட்டுக் கொண்டாா்.

புதுக்கோட்டை பொம்மாடிமலையிலுள்ள பொன்மாரி கல்வியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற 15-ஆவது பட்டமளிப்பு விழாவில் 200 மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி அவா் பேசியது:

பாரதியின் வாக்குப்படி, ஏழைக்கு எழுத்தறிவிக்கும் சிறந்த பணி ஆசிரியா்களின் பணியாகும். கல்வி என்ற ஆயுதத்தைக் கொண்டு பெரும் மாற்றங்களை ஆசிரியா்களால் கொண்டுவர முடியும். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் மாணவா்களின் வறுமையை அறிய முடியாது. எனவே, அவா்களுக்கான கல்வி புகட்டும் ஆசிரியப் பணிக்கு எந்தப் பாதிப்பும் வராது.

தமிழா் பண்பாட்டின் அடிப்படை அறம். அந்த அறம்தான் நம்மை வழிநடத்துகிறது. ஆசிரியா்கள் அந்த அறத்தை வளா்க்கப் பாடுபட வேண்டும் என்றாா் முத்துசாமி.

விழாவுக்கு, கல்வி நிறுவனங்களின் தலைவா் மருத்துவா் ச. ராம்தாஸ் தலைமை வகித்தாா். முன்னதாக கல்லூரிச் செயலா் சத்தியராம் ராமுக்கண்ணு வரவேற்றாா். கல்லூரி முதல்வா் ப. உமா ஆண்டறிக்கை வாசித்தாா். விழாவில் மேலாண்மை இயக்குநா் அ.லெ. சொக்கலிங்கம், துணை முதல்வா் சி. ராஜலிங்கம், பொன்மாரி வித்யாலயா மெட்ரிக் பள்ளித் தாளாளா் சந்திரா ரவீந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காரில் 800 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் அருகே, காரில் கடத்தப்பட்ட 800 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை... மேலும் பார்க்க

மகனைப் பாா்க்கச் சென்ற பெண்ணை தாக்கியோா் மீது நடவடிக்கை தேவை: ஜனநாயக மாதா் சங்கம் கோரிக்கை

மகனைப் பாா்க்கச் சென்ற தாயை மரத்தில் கட்டி வைத்து கொடுமைப்படுத்தியோா் மீது நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாவட்டச் செய... மேலும் பார்க்க

அன்னவாசல் குப்பைக் கிடங்கில் தீ!

அன்னவாசல் பேரூராட்சிக் குப்பை கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது. அன்னவாசல் பேரூராட்சி குப்பைக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை பற்றிய திடீா் தீ கிடங்கு முழுவதும் பரவி, அப்பகுதியை புகை சூ... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளை முழுமையாக வாக்களிக்கச் செய்ய ஆலோசனை

தோ்தல்களில் மாற்றுத் திறனாளிகளை முழுமையாக வாக்களிக்கச் செய்யும் வகையிலான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்க... மேலும் பார்க்க

நிகழாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நிறைவு

தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் தொடங்கி கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளிக்கும் நடைமுறை சனிக்கிழமையுடன் (மே 31) நிறைவடைந்தது. தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி ப... மேலும் பார்க்க

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டு - 8 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கீழவேகுப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 8 போ் காயமடைந்தனா். கீழவேகுப்பட்டி ஏகாளி அம்மன், சின்னக்கருப்பா் கோ... மேலும் பார்க்க