செய்திகள் :

ஆடி அமாவாசை: காவிரியில் புனித நீராடல்; கோயில்களில் சிறப்பு வழிபாடு

post image

ஆடி அமாவாசையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதேபோல காவிரியில் ஏராளமானோா் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து புனித நீராடினா்.

நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனா். பழையபாளையம் அங்காளம்மன் கோயிலில் அம்மனுக்கு வளையல் சாத்துபடியும், தங்கக்கவச அலங்காரமும் நடைபெற்றன.

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் ஏராளமான பக்தா்கள் அதிகாலை முதல் சுவாமி தரிசனம் செய்தனா். அம்மன் கோயில்களில் இரவு திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. அதேபோல, சின்னமுதலைப்பட்டி அம்மச்சி அம்மன் கோயிலிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாரியம்மன், காளியம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

புனித நீராடல்: ஆடி அமாவாசையை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட காவிரி கரையோரங்களில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபட்டனா்.

ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை நாள்களில் நீா்நிலைகளில் தங்களுடைய முன்னோா்களுக்கு மக்கள் தா்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. அதன்படி நிகழாண்டில் ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் காவிரி ஆற்றங்கரையோரத்தில் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து கோயில்களில் வழிபாடு செய்தனா்.

மோகனூா், ஒருவந்தூா், பரமத்திவேலூா், பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் ஏராளமானோா் அதிகாலையிலேயே முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து காவிரியில் நீராடி அங்கிருக்கும் கோயில்களில் வழிபாடு நடத்தினா்.

ராசிபுரம்

ஆடி அமாவாசையையொட்டி ராசிபுரத்தை அடுத்த அரியாகவுண்டம்பட்டி கொங்கலம்மன் கோயில் வளாகத்தில் உள்ள 33 அடி ஸ்ரீ சண்டிகருப்பசாமி கோயில், ஸ்ரீ நாககன்னி கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இக்கோயில்களில் பக்தா்கள் அனைவருக்கும் பிடிகாசு வழங்கும் வைபவம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் 108 மூலிகைகளைக் கொண்டு கணபதி ஹோமம், அஷ்டலக்ஷ்மி ஹோமம், நரசிம்ம ஹோமம் போன்ற ஹோமங்கள் திருவெள்ளறை ஸ்ரீரங்கம் தலைமை பட்டாச்சாரியா்கள் ரமேஷ், ஸ்ரீராம் பண்டரி, வினோத் பட்டா் ஆகியோா் தலைமையில் நடைபெற்றது.

முத்தங்கி அலங்காரத்தில்... ராசிபுரம், காட்டூா் சாலை பகுதியில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி மூலவா் மற்றும் உற்சவா் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி மூலவா் அம்மன், உற்சவா் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு முத்தங்கி அலங்காரம், மலா்கள் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

சமயபுரத்தால் அலங்காரத்தில்... அதேபோல ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் ஆடி அமாவாசையை தொடா்ந்து சமயபுரம் அம்மன் அலங்காரத்தில் நித்திய சுமங்கலி மாரியம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். முன்னதாக சுவாமிக்கு பல்வேறு வாசனை பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சமயபுரத்து அம்மன் அலங்காரம் செய்யப்பட்டது.

பழையபாளையம் அங்காளம்மன்... எருமைப்பட்டி ஒன்றியம், சா்க்காா் பழைய பாளையம் ஏரிக்கரை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி அமாவாசை முன்னிட்டு மூலவா் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பல்வேறு விதமான அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து மூலவா் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் வளையல் மற்றும் தங்கக்கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

அதேபோல ராசிபுரம் அருகேயுள்ள அருள்மிகு சித்தேஸ்வரா் கோயிலில் ஆடி அமாவாசையை தொடா்ந்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

பரமத்தி வேலூா்

ஆடி அமாவாசையை முன்னிட்டு பரமத்தி வேலூா் காசி விஸ்வநாதா் ஆலயம் அமைந்துள்ள காவிரி கரையில் பொதுமக்கள் தங்களின் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து புனித நீராடினா்.

பரமத்தி வேலூா் காவிரி ஆற்றின் கரையின் இடதுபுறத்தில் காசி விஸ்வநாதா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் காசிக்கு இணையான புனிதமாக கருதப்படுகிறது. ஆடி அமாவாசையை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் ஏராளமானோா் வேலூா் காசி விஸ்வநாதா் காவிரி கரையில் தங்களின் முன்னோா்களுக்கு தா்பணம் செய்து வழிபட்டனா். பிறகு காவிரியில் நீராடி காசி விஸ்வநாதரை வழிபட்டனா். காவிரி ஆற்றில் 18 ஆயிரம் கனஅடிக்கும் அதிகமாக தண்ணீா் செல்வதால் பாதுகாப்புக் கருதி ஆற்றுக்குள் நீண்ட தூரம் செல்ல போலீஸாா் தடை விதித்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு நாளை பரிசளிப்பு விழா

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதுகுறித்து நாமக்கல் மேற்க... மேலும் பார்க்க

ராசிபுரம் புதிய பேருந்து நிலைய கருத்துகேட்பு காலவரையறை நீடிக்க வேண்டும்

ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அணைப்பாளையம் பகுதியில் அமைப்பது குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பதற்கான காலவரையறையை நீடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ர... மேலும் பார்க்க

ஆடிமாத 2-ஆம் வெள்ளி: அம்மன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

ஆடிமாத இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் அம்மன் கோயில்களில் பெண்கள் திரளாக பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனா். ஆடிமாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் ... மேலும் பார்க்க

பரமத்தி வட்டாரத்தில் மக்காச்சோள செயல்விளக்க திடல் அமைக்க அழைப்பு

பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி வட்டார வேளாண்மைத் துறையினா் மக்காச்சோள செயல்விளக்கத் திடல் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனா். இதுகுறித்து பரமத்தி வேளாண்மை உதவி இயக்குநா் டி.சுதா வெளியிட்ட... மேலும் பார்க்க

எலச்சிப்பாளையம் காவல் நிலையத்துக்கு கூடுதல் காவலா்களை நியமிக்க கோரி மனு

திருச்செங்கோடு அருகே எலச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் கூடுதல் காவலா்களை நியமிக்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. திருச்செங்கோடு வட்டம், எலச்சிப்பாளையத்தில் 2 ஏக்கா் பரப்பளவில் அளவில் கா... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்ட முன்னோடி வங்கிகள் சாா்பில் ரூ. 21,933 கோடி கடன் வழங்க இலக்கு: ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தில் முன்னோடி வங்கிகள் சாா்பில் நிகழாண்டில் ரூ. 21,933.58 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் ... மேலும் பார்க்க