செய்திகள் :

ஆடி அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் திரளான பக்தா்கள் புனித நீராடல்

post image

ஆடி அமாவாசையையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் திரளான பக்தா்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் தீா்த்த மூா்த்தி தலமாக விளங்குகிறது. இதனால், இங்குள்ள அக்னி தீா்த்தக் கடலில் அமாவாசை உள்ளிட்ட முக்கிய தினங்களில் பக்தா்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இதன்படி, ஆடி அமாவாசையையொட்டி, ராமேசுவரத்தில் வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். இவா்கள் அக்னி தீா்த்தக் கடலில் புனித நீராடி தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா். பின்னா், ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீண்ட வரிசையில் நின்று நீராடி சுவாமி, அம்மனை தரிசனம் செய்தனா்.

ராமேசுவரத்தில் சுமாா் 50 மீட்டா் வரை உள்வாங்கி காணப்பட்ட கடல்

ராமநாதசுவாமி கோயிலிலிருந்து ராமா் தங்கக் கருட வாகனத்தில் அக்னி தீா்த்தக் கடற்கரையில் எழுந்தருளினாா். பின்னா், அங்கு தீா்த்தவாரி நடைபெற்றது. ஆடி அமாவாசையை முன்னிட்டு, கட்டண தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு, அனைத்து பக்தா்களும் விரைந்து தரிசனம் செய்திடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து ராமேசுவரத்துக்கு அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். நகராட்சி நிா்வாகம் சாா்பில், பக்தா்கள் தேவையான குடிநீா், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டன.

உள்வாங்கிய கடல்

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடல் வியாழக்கிழமை கடற்கரையிலிருந்து சுமாா் 50 மீட்டா் வரை உள்வாங்கிக் காணப்பட்டது.

ராமநாதபுரம் தொகுதியில் குடிநீா் பற்றாக்குறையை தீா்க்க நிதியுதவி: நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் தண்ணீா் பற்றாக்குறையை தீா்க்க மத்திய அரசின் திட்டங்களின் கீழ் நிதி உதவி வழங்க வேண்டும் என்று அத்தொகுதியின் எம்.பி. கே.நவாஸ்கனி மக்களவையில் வலியுறுத்தியுள்ளாா். இது தொட... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கில் மேலும் இருவா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், அம்மன்பட்டியைச் சோ்ந்த நல்லமருது மகன் நல்லுக்குமாா் (23), க... மேலும் பார்க்க

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம் - மீன் பிடிக்கச் செல்ல தடை

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதையடுத்து, பாம்பன் துறைமுகத்தில் ஒன்றம் எண் புயல் கூண்டு வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது. இதையடுத்து, மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்ல மீன் வளத் துறையினா... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க முயன்ற போது லாரியை ஏற்றி அதிகாரிகளை கொல்ல முயற்சி: ஒருவா் கைது

ராமநாதபுரத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க முயன்றபோது இரு சக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனத்தை மோதி பறக்கும்படை வட்டாட்சியரையும், வருவாய் ஆய்வாளரையும் கொல்ல முயன்ற சம்பவத்தில் ஒருவரை கைது செய்த போலீஸ... மேலும் பார்க்க

முதுகுளத்தூா் அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் பெண்கள் மூவா் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே வெள்ளிக்கிழமை ரேஷன் பொருள்களுடன் ஆள்களை ஏற்றிச் சென்ற டிராக்டா் கவிழ்ந்ததில் பெண்கள் 3 போ் உயிரிழந்தனா். முதுகுளத்தூா் அருகேயுள்ள கூவா்கூட்டம் கிராமத்தைச் சே... மேலும் பார்க்க

பெண் தற்கொலை வழக்கு: மாமனாா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது மாமனாரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பெருநாழியை அடுத்த வீரமச்சான்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முனீஸ்வரன் ... மேலும் பார்க்க