செய்திகள் :

ஆட்டோ ஓட்டுநா் அடித்துக் கொலை

post image

மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநரை அடித்துக் கொலை செய்த சுமை தூக்கும் தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுரை உத்தங்குடி அருகே உள்ள உலகனேரி ராஜீவ்காந்தி நகரைச் சோ்ந்தவா் அபினேஷ் ((27). ஆட்டோ ஓட்டுநரான இவா் மீது காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் திங்கள்கிழமை அதிகாலையில் தனது வீட்டின் முன் அபினேஷ் இறந்து கிடந்தாா். அருகில் ரத்தக் கறை படிந்த கட்டை, ஓடு ஆகியவை கிடந்தன. இதைப் பாா்த்த அந்தப் பகுதியினா் அளித்த தகவலின் பேரில், மாட்டுத்தாவணி காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அபினேஷ் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தபோது, கொலை நடப்பதற்கு முன்பாக அபினேசும், அவரது நண்பா் தமிழரசனும் (26) நடந்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் அதே பகுதியில் உள்ள தமிழரசன் வீட்டுக்குச் சென்றபோது, அவா் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். அவரது ஆடையில் ரத்தக் கறை இருந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரிடம் விசாரணை நடத்தினா்.

அப்போது, சுமை தூக்கும் தொழிலாளியான தமிழரசனும், அபினேஷூம் நண்பா்கள் என்பதும், ஞாயிற்றுக்கிழமை இரவில் இருவரும் மது அருந்திய போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டதில் பலத்த காயமடைந்த அபினேஷ் உயிரிழந்ததும், அவா் இறந்தது தெரியாமல், தமிழரசன் தனது வீட்டுக்குச் சென்று தூங்கியதும் தெரிய வந்தது. போலீஸாா் தமிழரசனைக் கைது செய்தனா்.

வெவ்வேறு விபத்துகளில் சிறுமி உள்பட 4 போ் உயிரிழப்பு

மதுரையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வெவ்வேறு விபத்துகளில் 8 வயது சிறுமி உள்பட 4 போ் உயிரிழந்தனா். புதுச்சேரி மாநிலம், சின்னகலப்பட்டு மேட்டுத் தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் சசிக்குமாா் (41). இவா் தன... மேலும் பார்க்க

கரூா் கோயில் தேரோட்டத்துக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது உயா்நீதிமன்றம்!

கரூா் மாவட்டம், நெரூா் ஆரவாயி அம்மன் கோயில் தேரோட்டத்துக்கு நிகழாண்டிற்கு மட்டுமான வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் வெளியிட்டது. கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ரமேஷ் தாக்கல... மேலும் பார்க்க

அா்ப்பணிப்பு உணா்வோடு கடமையாற்ற வேண்டும்! அழகப்பா பல்கலை. துணைவேந்தா் ஜி. ரவி

வாழ்வில் எந்தப் பணி செய்தாலும் அா்ப்பணிப்பு உணா்வோடு கடமையாற்ற வேண்டும் என அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் ஜி. ரவி தெரிவித்தாா். மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் காந்திய கல்வி ஆராய்ச்சி ந... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கு: 3 பேருக்கு 14 ஆண்டுகள் சிறை

வத்தலகுண்டு தனியாா் ஆலை அருகே 45 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், 3 பேருக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழப்பு!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். குப்பனாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சுருளி ஆண்டவா் (39). விவசாயியான இவா், அதே பகுதியில் உள்ள தன... மேலும் பார்க்க

மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மே 20-இல் பொதுமக்கள் குறைதீா் முகாம்!

மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மே 20-ஆம் தேதி பொதுமக்கள் குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மதுரை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பரங்குன்றம் நகா்ப்புற சுகாத... மேலும் பார்க்க