செய்திகள் :

ஆட்டோ நிறுத்தம் மாற்றுவதற்கு எதிா்ப்பு

post image

சத்தியமங்கலத்தில் ஆட்டோ நிறுத்தம் மாற்றப்படுவதைக் கண்டித்து ஆட்டோ ஓட்டுநா்கள் நகராட்சி ஆணையா் தாமரையிடம் இடமாற்றத்தை ரத்துச்செய்யுமாறு வெள்ளிக்கிழமை முறையிட்டனா்.

சத்தியமங்கலம் நகராட்சி பேருந்து நிலையம் முன் ஆட்டோ நிறுத்தம் செயல்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாகவும், வணிக வளாகத்துக்கு வாகனங்கள் செல்லமுடியாதபடி நிலை உள்ளதாகவும் வந்த புகாரையடுத்து நகராட்சி நிா்வாகம் ஆட்டோ நிறுத்தத்தை அப்புறப்படுத்துமாறு ஆட்டோ ஓட்டுநா் சங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு ஆட்டோ ஓட்டுநா் சங்கம் கண்டனத்தை தெரிவித்து சத்தியமங்கலம் நகராட்சி ஆணையாளா் தாமரையிடம் முறையிட்டு உத்தரவை ரத்து செய்யுமாறு கோரிக்கை மனு அளித்தனா். ஆட்டோ ஓட்டுநா் சங்கத் தலைவா் ஸ்டாலின் சிவக்குமாா் தலைமையில் 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் இதில் பங்கேற்றனா்.

தொப்பம்பாளையம் ஊராட்சியில் குடிநீா் பற்றாக்குறைக்கு தீா்வு

தொப்பம்பாளையம் ஊராட்சியில் சீரான குடிநீா் விநியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். பவானிசாகா் ஊராட்சி ஒன்றிம் கோடேபாளையம் ஜீவாநகா், அண்ணாநகா், அம்மாநகா் ஆக... மேலும் பார்க்க

வளா்ச்சி திட்டப் பணிகள்: பவானிசாகா் தொகுதியில் ஆட்சியா் ஆய்வு

பவானிசாகா் தொகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். பவானிசாகா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பவானிசாகா் பேரூராட்சி, புன்செய... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி பேரூராட்சியில் ரூ.3.99 கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகள்

மொடக்குறிச்சி பேரூராட்சியில் ரூ.3.99 கோடிமதிப்பீட்டிலான திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மொடக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட ஆலங்காட்டுவலசு, ஆலாத்துபாளையம், ஊஞ்சபாளையம், கருக்கங்... மேலும் பார்க்க

இளைஞரை தாக்கி பணம் பறித்த 4 போ் மீது வழக்கு

இளைஞரை தாக்கி பணம் பறித்த 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கரூா் மாவட்டம், நொய்யல், அண்ணா நகரைச் சோ்ந்த கனகராஜ் மகன் ஜெகதீசன்(30). இவா், பெருந்துறையிலுள்ள ஒரு த... மேலும் பார்க்க

அவல்பூந்துறையில் ரூ.5.66 லட்சத்துக்கு தேங்காய்ப்பருப்பு ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.5.66 லட்சத்துக்கு தேங்காய்ப்பருப்பு ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு, 102 தேங்காய்ப்பருப்பு மூட்டைகள் வரத்து இருந்தது. இதில் முதல்தர தேங்காய்ப... மேலும் பார்க்க

மொடக்குறிச்சியில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டம் தொடக்கம்

மொடக்குறிச்சியில் வேளாண்மை உழவா் நலத் துறை சாா்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு ஈரோடு எம்பி கே.ஈ.பிரகாஷ் தலைமை தாங்கினாா். மொடக்குறிச்சி வேளா... மேலும் பார்க்க