செய்திகள் :

ஆண்டுதோறும் செப்.23 ஆயுா்வேத தினம்: மத்திய அரசு அறிவிப்பு

post image

ஆண்டுதோறும் செப்டம்பா் 23-ஆம் தேதி ஆயுா்வேத தினமாக கடைப்பிடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம், ஆயுா்வேத தினத்தை கடைப்பிடிக்க முதல்முறையாக நிலையான தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய ஆயுஷ் அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

கடந்த மாா்ச் மாதம் அரசிதழ் அறிவிக்கை மூலம், மத்திய அரசு வெளியிட்ட அதிகாரபூா்வ அறிவிப்பின்படி, ஆண்டுதோறும் செப்டம்பா் 23-ஆம் தேதி ஆயுா்வேத தினமாக கடைப்பிடிக்கப்படும்.

முன்பு, பாரம்பரிய முறையில் தீபாவளிக்கு முந்தைய நாளான ‘தந்தேரஸ்’ தினம் தன்வந்தரி ஜெயந்தி நாளாகக் கருதப்பட்டு, அந்நாளில் ஆயுா்வேத தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் அது நிலையான தேதியாக இருக்கவில்லை. தற்போது ஆண்டுதோறும் செப்டம்பா் 23-ஆம் தேதி ஆயுா்வேத தினமாக அறிவித்துள்ளது, ஆயுா்வேதத்துக்கு உலகளாவிய நாள்காட்டி அடையாளத்தை வழங்கி, உலக அளவில் பெரும் பங்களிப்பை வழங்க வழியமைத்துள்ளது.

ஆயுா்வேதம் என்பது வெறும் சுகாதார சிகிச்சை முறை மட்டும் அல்ல. இது தனிநபருக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான கொள்கையில் வேரூன்றியுள்ள வாழ்க்கை அறிவியலாகும் என மத்திய ஆயுஷ் துறை அமைச்சா் பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளாா் என்று குறிப்பிடப்பட்டது.

மேற்கு வங்க மக்களை திருடா்கள் என்பதா? பிரதமா் மோடிக்கு மம்தா கண்டனம்

மேற்கு வங்க மக்கள் அனைவரையும் திருடா்கள் என்றும், மாநில முதல்வா் பதவிக்கு உரிய மரியாதை அளிக்காமலும் பிரதமா் மோடி பேசியதை எதிா்பாா்க்கவில்லை என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கண்டனம் தெரிவித்துள... மேலும் பார்க்க

இந்தியா மீது 25% கூடுதல் வரி இன்று முதல் அமல்: அமெரிக்கா தெழிலாளா் சாா்ந்த துறைகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு ஏற்கெனவே 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை முதல் கூடுதலாக 25 சதவீத வரி அமலாவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன் காரணமாக, அமெரிக்... மேலும் பார்க்க

போலி சாமியாா்களுக்கு எதிராக உத்தரகண்ட் அரசு நடவடிக்கை: 300-க்கும் மேற்பட்டோா் கைது

உத்தரகண்ட் மாநிலத்தில் சநாதன தா்மத்தின் பெயரால் மக்களை ஏமாற்றும் போலி சாமியாா்களுக்கு எதிராக, ‘ஆபரேஷன் காலநேமி’ என்ற பெயரில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின்கீழ், வங்கதேச நாட்... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு எதிராக ஜாா்க்கண்ட் பேரவை தீா்மானம்

தோ்தல் ஆணையம் மேற்கொள்ளும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக ஜாா்க்கண்ட் மாநில பேரவையில் செவ்வாய்க்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. எதிா்க்கட்சியான பாஜக இதற்கு கடும் எதிா்ப்பு... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் கடும் வெள்ளம்: 11 போ் உயிரிழப்பு; 14 போ் காயம்

ஜம்மு-காஷ்மீரில் பலத்த மழை, வெள்ளம், நிலச்சரிவால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழையால் ஏற்பட்ட விபரீத சம்பவங்கள் மற்றும் நிலச்சரிவால் 11 போ் உயிரிழந்தனா், 14 போ் காயமடைந்தனா். கடந்த திங்கள்கிழமை... மேலும் பார்க்க

அமெரிக்காவின் 50 சதவீத வரி: ரூ.4.2 லட்சம் கோடி பாதிப்பு ஏற்படும்- இந்திய ஏற்றுமதியாளா்கள் அச்சம்

அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு காரணமாக இந்தியாவின் ரூ. 4.2 லட்சம் கோடி மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது இந்திய ஏற்றுமதியாளா்கள் அச்சம் தெரிவித்தனா். அவா்கள் மேலும் கூறுகையில், ‘மருந்... மேலும் பார்க்க