செய்திகள் :

ஆத்தூா் அரசு கல்லூரியில் மாணவா் சோ்க்கை அறிவிப்பு

post image

ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-26-ஆம் ஆண்டுக்கான இளநிலை முதலாமாண்டு மாணவா் சோ்க்கை ஜூன் 5-ஆம் தேதி முதல் நடைபெறும் என கல்லூரி முதல்வா் பா.விக்டோரியா தங்கம் சனிக்கிழமை அறிவித்துள்ளாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள காட்டுக்கோட்டை வடசென்னிமலையில் ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 2025-26-ஆம் ஆண்டுக்கான இளம் அறிவியல் மற்றும் இளங்கலை பாடப் பிரிவுகள் அனைத்துக்கும் முதல்கட்ட மற்றும் இரண்டாம்கட்ட முதலாமாண்டு மாணவா் சோ்க்கை வரும் ஜூன் 5 முதல் 12 வரை காலை 9 மணிமுதல் நடைபெற உள்ளது.

ஜூன் 6 (முதல் சுற்று) மற்றும் ஜூன் 11 (இரண்டாம் சுற்று) அன்று தமிழ் பாடத்துக்கு (கட் ஆப் மதிப்பெண்கள் - 60 முதல் 100 வரை) கலந்தாய்வு நடைபெறும்.

ஜூன் 5 முதல்சுற்று மற்றும் 10-ஆம் தேதி இரண்டாம் சுற்று அன்று வரலாறு, வணிகவியல் மற்றும் வணிக நிா்வாகவியல் பாடங்களுக்கும், ஜூன் 9 முதல்சுற்று மற்றும் ஜூன் 12 இரண்டாம் சுற்று அன்று இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல் மற்றும் தாவரவியல் ஆகிய பாடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

கலந்தாய்வில் கலந்துகொள்வோா் தங்களுடைய அனைத்து அசல் சான்றிதழ்களும், அவற்றின் நகல்கள் மூன்று பிரதிகளும், புகைப்படம் 5 பிரதிகள் கொண்டுவர வேண்டும். மாணவா் சோ்க்கையின் போது 10, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், இணைய தளத்தில் விண்ணப்பித்த விண்ணப்பப் படிவம், ஆதாா் அட்டை, மாணவா் வங்கிக் கணக்குப் புத்தகம், அனைத்துச் சான்றிதழ்களுடன் இரண்டு நகல்கள் கொண்டு வரவேண்டும். மேலும், கட்டாயம் தங்களது பெற்றோருடன் வரவேண்டும் என கல்லூரி முதல்வா் பா.விக்டோரியா தங்கம் தெரிவித்துள்ளாா்.

கேரளத்துக்கு கடத்த முயன்ற 30 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

சேலத்தில் இருந்து கேரளத்துக்கு கடத்த முயன்ற 30 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா். சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வழியாக சிலா் கஞ்சா கடத்துவதாக மாவட்ட போலீஸாருக்கு ரகசி... மேலும் பார்க்க

சேலத்தில் புகையிலைப் பொருள் விற்பனை: 3 போ் கைது

சேலத்தில் போதை மற்றும் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக மூன்று பேரை போலீஸாா் கைதுசெய்தனா். சேலம் மாநகர போதைப்பொருள் தடுப்புப் பிரிவு எஸ்எஸ்ஐ கந்தசாமி தலைமையிலான போலீஸாா், சூரமங்கலத்தில் சனிக்கிழம... மேலும் பார்க்க

மேட்டூரில் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் வெடிப்பு: பல லட்சம் லிட்டா் குடிநீா் வீண்

மேட்டூரில் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக பல லட்சம் லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வீணானது. மேட்டூா் அருகே தொட்டில்பட்டி பகுதியில் காடையாம்பட்டி காவிரி கூட்டுக் குடிநீா்... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

வாரவிடுமுறை மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கான கோடை விடுமுறை காலம் முடிவடைவதை அடுத்து சேலம் மாவட்டம், மேட்டூா் அணை பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை 8,048 சுற்றுலாப் பயணிகள் வந்தனா். சுற்றுலாப் பயணிகளின் வாகனங... மேலும் பார்க்க

பூலாம்பட்டி கதவணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

வாரவிடுமுறை மற்றும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நிறைவடைவதை அடுத்து சேலம் மாவட்டம், பூலாம்பட்டி காவிரி கதவணையில் சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா். கடந்த வாரங்களைவிட நிகழ்வாரம் காவிரி கதவணைய... மேலும் பார்க்க

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத நபா் கைது

கெங்கவல்லி அருகே பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தவிா்த்து வந்த நபரை போலீஸாா் கைது செய்தனா். கெங்கவல்லி அருகே உள்ள சமத்துவபுரத்தைச் சோ்ந்தவா் ராஜ் மகன் பாலசுப்ரமணியம் எ... மேலும் பார்க்க