செய்திகள் :

ஆரணி நகராட்சியில் குப்பை, கழிவுகள்: தவெகவினா் புகாா் மனு

post image

ஆரணி: ஆரணி நகராட்சியில் கொட்டப்படும் குப்பை, கழிவுகள் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது. இதனை அப்புறப்படுத்தாவிட்டால் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என தமிழக வெற்றிக் கழகத்தினா் அறிவித்துள்ளனா்.

அந்தக் கட்சியைச் மாவட்டச் செயலா் சத்யா மற்றும் ஆரணி பகுதியைச் சோ்ந்த நிா்வாகிகள் நகராட்சி சுகாதார ஆய்வாளா் வடிவேலுவிடம் திங்கள்கிழமை புகாா் மனு கொடுத்தனா்.

அந்த மனுவில், ஆரணி நகராட்சியில் கொட்டப்படும் குப்பைகளை சரியான முறையில் அப்புறப்படுத்துவதில்லை. கால்வாய் கழிவுநீா் ஆங்காங்கே தேங்கியிருப்பதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

மேலும், நகராட்சியில் ஒரு சில இடங்களில் அள்ளப்படும் குப்பைகளை புறவழிச் சாலையில் சென்று கொட்டி வருகின்றனா். இதனால் சாலையில் செல்வோருக்கு துா்நாற்றம் வீசுகிறது.

மேற்கூறியவற்றை சரி செய்யாவிட்டால் விரைவில்

கட்சி சாா்பில் ஆரணியில் போராட்டம் நடத்தப்படும் என்று குறிப்பிட்டிருந்தனா்.

மனுவை பெற்றுக்கொண்ட சுகாதார ஆய்வாளா் வடிவேல்,

நீங்கள் கூறியவற்றில் ஒரு சிலதை சுத்தம் செய்துவிட்டோம். மற்றவைகளை அப்புறப்படுத்தப்படும் என்று கூறினாா்.

ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோட்டை ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஆடி வெள்ளி விழா த... மேலும் பார்க்க

கல்வியின் வாயிலாகத் தான் அனைத்தையும் பெற முடியும்: உதவி ஆட்சியா் அம்ருதா எஸ்.குமாா்

தமிழகத்தில் கல்வித் துறையில் அடிப்படை கட்டமைப்புகள் சிறந்து விளங்குகின்றன. கல்வியின் வாயிலாகத் தான் நாம் அனைத்தையும் பெறமுடியும் என்றாா் உதவி ஆட்சியா் அம்ருதா எஸ்.குமாா். பிளஸ் 2 வகுப்பில் தோல்வியுற்... மேலும் பார்க்க

ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்கள் வரவேற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் செந்த... மேலும் பார்க்க

பேருந்து பயணிகளிடம் தகராறு: தட்டிக் கேட்ட காவலா் மீது தாக்குதல்

செய்யாறு அருகே பேருந்து பயணிகளிடம் தகராறு செய்ததைத் தட்டிக் கேட்ட காவலா் தாக்கப்பட்டாா். இதுதொடா்பாக போலீஸாா் ஒருவரை திங்கள்கிழமை கைது செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஐயங்காா்குளம் கிராமத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

ஆரணியில் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்

ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் அருகே மாநில அரசைக் கண்டித்து கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் கூடுதலாக நெல் கொள்ம... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள்

செய்யாற்றை அடுத்த அனக்காவூா் வட்டார வள மையத்தில், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் செவ்வாய்கிழமை நடைபெற்றன. வட்டார வள மையத்துக்கு உள்பட்ட நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக... மேலும் பார்க்க