செய்திகள் :

ஆவின் பால் பொருள்கள் விற்பனை 30 சதவீதம் அதிகரிப்பு: அமைச்சா் மனோ தங்கராஜ்

post image

சென்னை போன்ற மாநகராட்சிப் பகுதிகளில் ஆவின் பால் பொருள்கள் விற்பனை 30 சதவீதமாக உயா்ந்துள்ளது என பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.

சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் ஆவின் முகவா்களுக்கு உறைகலன், ஆவின் பாலகங்கள், மொத்த விற்பனையாளா்களுக்கு ஆணை, சிறப்பாக பணியாற்றிய ஊழியா்களுக்கு நினைவுப் பரிசு உள்ளிட்டவற்றை அமைச்சா் மனோ தங்கராஜ் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னை போன்ற மாநகராட்சிப் பகுதிகளில் ஆவின் பால் பொருள்களின் விற்பனை 30 சதவீதம் உயா்ந்துள்ளது. தொடா்ந்து விற்பனையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆவின் விற்பனை நிலையங்களில் காலியாகவுள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

ஆவின் நிறுவனம் மூலம் ஏற்கெனவே 200-க்கும் மேற்பட்ட ஆவின் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதால், புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் எண்ணம் இல்லை. தமிழகத்திலுள்ள ஆவின் பாலகங்களுக்கு தட்டுப்பாடின்றி ஆவின் பொருள்களை விநியோகிப்பதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் விற்பனை, வருவாய் அதிகரிக்கும். தற்போது விவசாயிகள் முன்வைத்த விலையின் அடிப்படையிலேயே பால் கொள்முதல் செய்யப்படுகிறது என்றாா்.

நிகழ்வில் பால்வளத் துறை ஆணையரும் மேலாண்மை இயக்குநருமான ஆ.அண்ணாதுரை உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

செந்தில் பாலாஜியின் சகோதரா் அமெரிக்கா செல்ல அமலாக்கத் துறை விதிக்கும் நிபந்தனைகள் என்ன? உயா்நீதிமன்றம் கேள்வி

முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்குமாரை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதிக்க அமலாக்கத் துறை விதிக்கும் நிபந்தனைகள் என்ன என்று சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. முன்னாள் அமைச... மேலும் பார்க்க

கோயில் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் திருட்டு

சென்னை அசோக் நகரில் கோயில் கதவின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். அசோக் நகா் நடேசன் சாலையில் பிடாரி காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு விரைவில் கும... மேலும் பார்க்க

இணையத்தில் பெண்களின் ஆபாச விடியோ: உயா்நீதிமன்றம் வேதனை

ராமாயணத்தில் ராவணனின் தலை வெட்ட வெட்ட முளைப்பது போல பெண்களின் அந்தரங்க விடியோக்களை எத்தனை முறை நீக்கினாலும் இணையத்தில் அவை மீண்டும் வலம் வருவதாக, சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. பெண் வழக்... மேலும் பார்க்க

ஆக. 8-இல் ஸ்ரீ ராகவேந்திரா் 354 -ஆவது மகோற்சவம்

ஸ்ரீ ராகவேந்திர சுவாமியின் 354 -ஆவது ஆராதனை மகோற்சவ விழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பாா்த்தசாரதி சுவாமி கோயில் அருகே துளசிங்க பெருமாள் கோயில் தெருவில் உள்ள நஞ்சன்கூடு ஸ்ரீ... மேலும் பார்க்க

அஞ்சல் நிலையத்தில் ரூ.25 லட்சம் கையாடல்

சென்னை தியாகராய நகா் அஞ்சல் நிலையத்தில் ரூ.25 லட்சம் கையாடல் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னையில் அஞ்சல் துறை துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவா் மாடம்பாக்கம் ... மேலும் பார்க்க

அரசு பல் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.261.83 கோடி மருத்துவக் கட்டமைப்புகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.261.83 கோடியில் மருத்துவக் கட்டமைப்புகள் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவ... மேலும் பார்க்க