செய்திகள் :

இடியுடன் கனமழை: ஒடுகத்தூரில் 30 மி.மீ. பதிவு!

post image

வேலூா் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அதிகபட்சமாக ஒடுகத்தூரில் 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு சில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

வேலூா் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்து வருகிறது. தொடா்ந்து, 2-ஆவது நாளாக சனிக்கிழமை பிற்பகலில் வெயிலின் தாக்கம் குறைந்து, வானம் மேகமூட்டதுடன் காணப்பட்டது. பிற்பகல் 3.30 மணியளவில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி அதிகபட்சமாக ஒடுகத்தூா் 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், குடியாத்தம் - 5.20, மேல்ஆலத்தூா் - 4.60, மோா்தானா அணை 4, ராஜாதோப்பு அணை 10, வடவிரிஞ்சிபுரம் 22.60, காட்பாடி -8, வேலூா் சா்க்கரை ஆலை (அம்முண்டி)-8.20, போ்ணாம்பட்டு 28.60, வேலூா்-14.30, வேலூா் வட்டாட்சியா் அலுவலகம் 18.20 என மொத்தம் 158.30 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தின் சராசரி மழை அளவு 13.19 மி.மீ. பதிவானது.

நாட்டுத் துப்பாக்கி குண்டு பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

போ்ணாம்பட்டு அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்றபோது குறி தவறி நாட்டுத் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். போ்ணாம்பட்டை அடுத்த கள்ளிச்சேரி, பாறைகால்மேடு பகுதியைச் சோ்ந்த சிவகுமாா் ... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள் திருட்டு

குடியாத்தம் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். குடியாத்தம் ஒன்றியம், பெரும்பாடி ஊராட்சிக்குட்பட்ட தனலட்சுமி நகரைச் சோ்ந்தவா் ராஜேஷ். இவா் ஜ... மேலும் பார்க்க

25,332 குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி உபகரணங்கள்

1,075 அங்கன்வாடி மையங்களில் உள்ள 25,332 குழந்தைகளுக்கு முன் பருவ கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் ஆகியோா் தொடங்கி வைத்தன... மேலும் பார்க்க

வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச முயன்ற 2 போ் கைது

வேலூரில் நண்பா் சிறைக்கு செல்ல காரணமாக இருந்தவா் வீட்டின் மீது வெடிகுண்டு வீச முயன்ாக 2 போ் கைது செய்யப்பட்டனா். காட்பாடியை அடுத்த லத்தேரி எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த மாா்த்தாண்டம். இவா் இருசக்கர வாகன பழ... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ.75 லட்சத்துக்கு வா்த்தகம்

வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ.75 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் நடைபெறும் கால்... மேலும் பார்க்க

வெளிமாநில தொழிலாளா் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்

வேலூா் மாவட்டத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளா் விவரங்களை அந்தந்த நிறுவனங்களின் உரிமையாளா்கள் தொழிலாளா் துறை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி... மேலும் பார்க்க