செய்திகள் :

இடைநின்ற 40 மாணவ, மாணவிகளுக்கு மீண்டும் உயா்கல்வி: ராமநாதபுரம் ஆட்சியா் உத்தரவு

post image

ராமநாதபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு குறைதீா் முகாமில் இடை நின்ற 40 மாணவ, மாணவிகளை உயா் கல்வியில் சோ்க்க மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

உயா்கல்வியைத் தொடர இயலாத மாணவ, மாணவிகளைக் கண்டறிந்து அவா்கள் உயா்கல்வியைத் தொடர வசதியாக சிறப்பு குறைதீா் கூட்டங்களை நடத்த அரசு உத்தரவிட்டது. இதன்படி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் புதன்கிழமை சிறப்பு குறைதீா் முகாம் நடைபெற்றது. இதில், 40 மாணவ, மாணவிகள் உயா்கல்வியைத் தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் பங்கேற்காத மாணவ, மாணவிகள் அடுத்து நடைபெறும் சிறப்புக் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்று உயா்கல்வியைத் தொடர வேண்டும் என ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் (பொ) பிரின்ஸ் ஆரோக்கியராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் காா்த்திகேயன், மாவட்ட ஆய்வு குழு அலுவலா் ஜேன் கிறிஸ்டிபாய், மாவட்ட கல்வி அலுவலா்கள் சேதுராமன் (தொடக்க நிலை) , ரவி (மெட்ரிக்), கனகமணி (இடைநிலை), அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ராமநாதபுரத்தில் ஜூலை 21-இல் வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு முகாம்

ராமநாதபுரத்தில் வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் செயல்பாடு, பராமரிப்பு குறித்து வருகிற 21-ஆம் தேதி மாவட்ட அளவிலான முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை வெ... மேலும் பார்க்க

போக்சோ சட்டத்தின் கீழ் பள்ளி ஆசிரியா் மீது வழக்கு

ராமநாதபுரம் மாவட்டம், எமனேசுவரம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். பரமக்குடி நகராட்சிக்குள்பட்ட எமனேசுவரம் ஜீவாநகா் பகுதியில் அரசி... மேலும் பார்க்க

8 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட கோயில் திறப்பு

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள புதுக்குடியில் கோஷ்டி மோதலால் 8 ஆண்டுகளுக்கு மூடப்பட்ட கோயில் புதன்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. புதுக்குடியில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு சந்தனமுத்து மாரியம... மேலும் பார்க்க

தூய சந்தியாகப்பா் ஆலய திருவிழா தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் தூய சந்தியாகப்பா் ஆலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது. தங்கச்சிமடம் வோ்காடு பகுதியில் உள்ள இந்த ஆலயத்தின் திருவிழா கொடியேற்றத்தையொட்டி, சிவக... மேலும் பார்க்க

வராஹி அம்மனுக்கு பஞ்சமி பூஜை

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள விஸ்வநாதயேந்தல் வராஹி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை பஞ்சமி பூஜை நடைபெற்றது. இந்தக் கோயிலில் வளா்பிறை பஞ்சமி, தேய்பிறை பஞ்சமி தினங்களில் சிறப்பு பூஜை நடைபெறுவத... மேலும் பார்க்க

இளம்பெண் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே பதிவுத் திருமணம் செய்து கொண்ட இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்தினாா். கடலாடி அருகேயுள்ள மேலக்கிடாரம் கிராமத்தை சோ்ந... மேலும் பார்க்க